குழந்தைப்பாடல்(அகரவரிசை)
அப்பா இங்கே வா!! வா!
ஆடை வாங்கித் தா!தா!
இன்றே நாமும் போகலாம்.
ஈரக்காற்றில் மகிழலாம்..
உல்லாசமாய் இரயிலிலே
ஊட்டிமலைக் காணலாம்.
எழிலாம் மலர்க் காட்சியாம்
ஏரிப்படகும் இரசிக்கலாம்.
ஐ !ஐ!யென ஆடலாம்
ஒன்றின் பின்னே ஒன்றாக
ஓடும் மேகஙகள் அழகாக.
ஔடதங்கள் எல்லாமே
௮ஃதேயாகும் நலமாக.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment