சிரிப்பும் அழுகையும்.
அழுகையும் சிரிப்பும்
உளம்தான் பொறுப்பு-வாழ்வின்
இன்பமும் துன்பமும்
தன்வசம் இருப்பு.
மனிதம் கடவுளின்
உளம்தான் பொறுப்பு-வாழ்வின்
இன்பமும் துன்பமும்
தன்வசம் இருப்பு.
மனிதம் கடவுளின்
மகத்துவப் படைப்பு-மனிதர்
அழுகையும் சிரிப்பும்
அவனது கொடையாம்.
அழுமுன் இறுக்கம்
சிரிப்பில் விடுக்கும்-மனம்
அழுவதில் அடங்கிப்பின்
சிரிப்பதில் தொடங்கும்.
அழுவதும் விழுவதும்
எழுவதும் சிரிப்பதும்-உள்
உணர்வுகள் வெளிவிடும்
சிரிப்பில் விடுக்கும்-மனம்
அழுவதில் அடங்கிப்பின்
சிரிப்பதில் தொடங்கும்.
அழுவதும் விழுவதும்
எழுவதும் சிரிப்பதும்-உள்
உணர்வுகள் வெளிவிடும்
மனதின் மொழியாம்.
அழவிட்டு
வாழ்வான்
அவன்மட்டுஞ் சிரிப்பான்-பிறர்
அழுதிட அழுவான்
தொழுதிடச் சிறப்பான்.
அழுதிட அழுவான்
தொழுதிடச் சிறப்பான்.
ஏழையின்
சிரிப்பில்
இறைவன் இருப்பான்-மனிதன்
வாழ்ந்திடும் நாளில்
அழுதிடப் பாவம்.
வாழ்ந்திடும் நாளில்
அழுதிடப் பாவம்.
தனக்கென
வாழ்வாரை
தர்மம் நகைக்கும்-இரங்கி
பிறர்க்கென சாவார்க்கு
அழுது துடிக்கும்.
அழுது துடிக்கும்.
வாழ்ந்தவன் வாழ்க்கை
வசதியில் சிரிக்கும்-அழுகை
நேர்ந்தவன் தாழ்வில்
நிலைபெறத் தவிக்கும்.
நேர்ந்தவன் தாழ்வில்
நிலைபெறத் தவிக்கும்.
ஒரு நாள் மனிதன்
நிலம்விட்டுப் பறப்பான்-உலகம்
சிரிப்பதும் அழுவதும்
இரண்டும் கலக்கும்..
இரண்டும் கலக்கும்..
உனக்காய் மனிதம்
ஒருத்
துளிக்கண்ணீர்-பின்னால்
அழுது
சிந்தினால்
அதுதான்
வாழ்க்கை.
கதவுகள் இல்லாக்
குடிசைகள் சிரிக்கும்-வீணே
பூட்டுக்குள் முடங்கும்
பொக்கிசம் அழுகும்.
காப்பவன் அழுவான்
பார்பபவன் சிரிப்பான்-அமைதி
தோற்பவன் விழுவான்.
ஏற்பவன் எழுவான்.
தோற்பவன் விழுவான்.
ஏற்பவன் எழுவான்.
சிரித்தால் லாபம்
அழுதால் பாவம்-அவரவர்
பாவம் புண்ணியம்
ஆவதும் எண்ணியும்.
ஆவதும் எண்ணியும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment