Wednesday, 24 June 2015

அரசியலே விரசியல்.

மனிதம் அற்ற அரசியல்.

தமிழ் நாட்டு அரசியல்தான்.
தரம் கெட்ட விரசியல்தான்.--காரி
உமிழ்கிறது உலகம்தான்.

பழி போடும் அரசியல்தான்.
பகல் வேடம் இழிசெயல்தான்--கீறி
பலிவாங்கி சிரிக்கிறது.

பொய் பேசும் அரசியல்தான்
மெய் கூசும் அணிபெயல்தான்--மாறி
தொய்கிறது மனநிலைதான்.

சுயம் வாழும் அரசியல்தான்.
பொது வாழ்வு அரிதாரம்தான்.--நீரி
மயங்குவது உழைப்பவர்தான்

கூலிக்காடும் அரசியல்தான்.
கொள்கை மாறும் புரட்டியல்தான்.--மீறி
வேலிதாண்டி மேய்கிறது.

மானம் கெட்ட அரசியல்தான்.
ஈனம் விட்ட விவச்சாரம்தான்--ஊறி
நாணம் பட்டு அலைகிறது.

மனிதம் அற்ற அரசியல்தான்.
புனிதம் செத்த அரக்கினம்தான்--கோரி
மனிதரத்தம் சுவைக்கிறது.

ஊழல் எனும் அரசியல்தான்
ஊதாரி ஒழுங்கீனம்தான்--தேறி
ஊழியாகி விளைகிறது.

பித்தலாட்டம் அரசியல்தான்
குத்தலாட்டம் புரிவதுதான்---கூறி
சத்தியம்தான் அழுகிறது.


கொ.பெ.பி.அய்யா.

Thursday, 11 June 2015

திருமண வாழ்த்து.

திருமண வாழ்த்து

திருப்பதி சாமி ரெங்கராஜா--உம்மால்
திருமதி ஆகிறாள் முத்துலட்சுமி.
தம்பதி பேறினை ஆள்கவே!--வற்றா
நிம்மதி வாழ்வினை வாழ்கவே!

உம்போல் யாரென பேராக--அன்பால்
உம்மால் சீரென ஊராக.
தம்மால் ஆவென நேராக.--வாழ்க
இம்மால் ஈவென நீராக!

செல்வம் யாவும் பதினாறும்--பண்பால்
வெல்வம் மேலும் எனவாழும்
இல்லறம் மேவும் பதிநாளும்--வாழ்வில்
நல்லுறம் கூடும் விதியாவும்.

இருமனம் ஒன்றி ஒருமனமாகி--நன்னாள்
திருமணம் என்றும் பெறுமுறவாகி
வரும்நலம் ஆண்டும் வளம்பெருவாகி--வாழ்க
ஒருகுலம் தூண்டும் உடனுலகாகி.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 6 June 2015

மணமகனே வா வா!

சொந்தமே வா வா!

மணமகனே மருமகனே வா வா-உன்
மனம் நிறைய அன்பு வைத்து வா வா!
பறந்தநாட்டை வாழ்த்தி இங்கே வா வா!—உன்
பிறந்த வீட்டை போற்றி இங்கே வா வா!
(மணமகனே)

தனமிருக்கும் பணமிருக்கும் அந்த நாட்டில்—நல்ல
சனமிருக்கும் மனமிருக்கும் இந்த நாட்டில்.
நாஉரையும் நாடகம்தான் சென்ற நாட்டில்—மெய்
நாநயமும் நேர்முகமும் சொந்த நாட்டில்
(மணமகனே)

கற்ற பாடம் உற்ற நடை நாடு நமது வீடு--நெஞ்சில்
மற்றவரை கணம்மதித்து வாழும் அழுகு கூடு.
நல்லவர்கள் நண்பராக தேடும் பண்பாடு.---உறவில்
பச்சமுடன் பாச மணம் வீசும் நேசமேடு.
(மணமகனே)

ஆபரணம் காவரணும் சிறப்பிருக்காது.—திருமணம்
ஆகவரும் மாப்பிளைக்கும் குறைவிருக்காது  
எந்நாளும் நன்னாளே மனம்சலிக்காது.—இருமனம்
கண்ணாலும் உண்பதற்கும் புளிப்பிருக்காது
(மணமகனே)

கொ.பெ.பி.அய்யா.