Thursday, 19 April 2018

காந்தி நாடு

பெருமமை இந்தியா.

கொண்டெழுந்த கொள்கையில்
நின்று அதை வென்றதில்
என்றும் அது பாடமாய்
அண்ணல் வழி அகிம்சைதான்.

சூது என்ன செய்யுமோ
நீதி தானே வெல்லுமே!
தர்மத் தலைவர் காந்தியை
வர்மங்கூறி வென்றதார்?

ஒன்றுபட்ட  இந்தியா
வென்றுவிட்ட  மகாத்மா
கண்கண்ட தெய்வமாய்
மண்கொண்டு காலம் வாழும்.

புரட்சி என எழுந்தது
அறம் என தொடர்ந்தது
உரிமை என மலர்ந்தது
பெருமை அதில் சிறந்தது.

கவிஞர்கொ.பெ.பி. அய்யா

Friday, 13 April 2018

ஈடேறும் காலம் உண்டோ!

ஈடேறும் காலம் உண்டோ!

நான் ஈடேறும் காலம் உண்டோ பராசக்தியே!
என் பாடாறும் நாளும் என்றோ மீனாட்சியே!
கண்ணீராய் சிந்துகிறேன் காணிக்கை தாயே-அது
வெண்ணீராய் சுட்டதோ விழித்திடு நீயே!

உழுபவன்தான் நிலம் காய்ந்து நொந்து அழுகிறான்.
உழைப்பவன்தான் சுமைதாங்கி இத்து விழுகிறான்.
களைத்தவனின் மூச்சிலேதான் கொடிகள் பறக்கிறது-உழைத்து
அலுத்தவனின் வீட்டிலேதான் அடுப்பு உறங்குகிறது.

தொழிலாளர் வர்கம்தான் தூணாய் தாங்குகிறது.
தூக்கமின்றி வாழ்வுக்காக தானாய் ஏங்குகிறது.
கொழுத்தவனின் நாய்கூட மெத்தை கேட்கிறது-உழைப்பால்
இளைத்ததவனின் நோய்தாதானே சொத்து ஆகிறது.

பணக்கார இனம்தானே அரசியல்வாதிகள்
உனக்காக இழந்ததென்ன உரசிப் பாருங்கள்.
கட்சிகளை மறந்துவிட்டு கரையேறுங்கள்-சுதந்திரப்
பட்சிகளாய் சுயமாக விடை தேடுங்கள்.

காவிரியைப் பூட்டி வைத்து காவல் காத்தவர்
சாவியையும் தொலைத்துவிட்டு ஊரை ஏய்ப்பவர்
பாவவினை தீருமென்ற பரிகாரமோ-விட்ட
சாபக்கணை மாற்றத்தான் பரிவாரமோ!

கவிஞர். கொ,பெ,பி .அய்யா.