Monday, 25 May 2020

காந்தி கண்ட கனவென்ன!

அக்காலம் மன்னராட்சி,
இக்காலம் மக்களாட்சி.
வருங்காலம் என்னாட்சி?
வாரிசுகள் வந்தாச்சி.

மனம் வீழும் களமானால்
பணம் ஆளும் நிலமாகும்.
உரிமையை விற்ற பின்னே
அடிமையே அவர் பின்னே!

விலைக்கு வாங்கும் அதிகாரம்:
வறுமைக்கு நீட்டுமா உதவிக்கரம்?
அரசியலும் வணிகம் ஆச்சோ!
பொது வாழ்வும் பொய்யாச்சோ!

உரிமை பெற்றும் அடிமையோ!
பெருமை என்ன உரிமைக்கோ!
விதைத்த உயிர் வீணாச்சோ!
சிவத்த நிலம் தரிசாச்சோ!

கட்சிகளை கலைக்கச் சொன்ன
காந்தி கண்ட கனவென்ன!
சுயேச்சைகள் தழைக்கும் என்றால்!
சுதந்திரம் நிலைக்கும் என்றார்.

எண்ணி மீண்டால் குடியாளும்.
பம்மிக் கொண்டால் முடியாளும்.
மக்கள் பயம் பொதுவானால்
தக்க நேரம் இதுவாகும்,

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 24 May 2020

வழிவழி தலைமுறை.

சுயமாய் சிந்தனை அறிய மாட்டான்,
பிறரின் நிந்தனை உணர மாட்டான்;
எவனோ ஒருவன் தூண்ட லிலே:
இவனே படுவான் தூண்டி யிலே.

சும்மா தானும் இருக்க மாட்டான்,
சொன்னால் கேட்டும் அடங்க மாட்டான்,
தன்னால் தானே தான் சுட்டு:
புண்ணாள் ஆவான் கேடு கெட்டு.

நல்லதும் தானே எண்ண மாட்டான்,
நன்மை செய்யவும் விட மாட்டான்;
தடால் ஒன்றைப் போட் டுடைப்பான்:
தன்னால் இருப்பைக் காட்டி டுவான்.

வளர்வோர் பிறரை வளர்க்க மாட்டான்,
கழலும் மூத்தோரை தடுக்க மாட்டான்;
உரிமை எல்லாம் பறித்து வைப்பான்:
அடிமைகள் மட்டும் இருத்தி நிற்பான்.

நல்லார் கூட்டம் சேர்க்க மாட்டான்,
வல்லார் ஏற்றம் வாழ்த்த மாட்டான்;
எல்லாம் நானே மேல் என்பான்:
கொள்கை தானே கோள் செய்வான்.

வழிவிடத் தகுதி பார்க்க  மாட்டான்,
வழிவழி முடிக்க ஏற்க மாட்டான்;
தலைவன் வழியே நான் என்பான்:
தலைமுறை தொடர வழி செய்வான்.

கொ.பெ.பி.அய்யா.

கல்லடி!

உச்சத்திற்கே கல்லடியா!

சொன்னாலும் கேவலம் ,
சொல்லாட்டி சாவலாம்.
என்னடா அரசியவ்--இது
சின்னப் புள்ள சகவாசம்.

கூரை மேல சோறு போட்டா,
கூடுவதும் ஆயிரங் காகா;
மேடை மேலே காசு போட்டா:
போடும் கூச்சல் விவாதப் பேச்சா!

அரை வேக்காடு அரசியல் பேச்சு:
தரம் பார்க்கா இழிவியல் ஆச்சு.
நரிக் கூட்டப் பஞ்சா யத்து
நெறியாளர் கேளிக் கூத்து.

ஜனநாயக நாட்டில் இங்கே
ஜனாதன தர்மம் எங்கே?
உச்சத்திற்கே கல்லடியா?
மிச்சத்திற்கு என்னடியோ!

கூசுதே மேனியெல்லாம்:
பேசாதீர்  விவாதம் இன்னும்.
காணொலி மறையட்டும்.
வானொலி நிறையட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

சுயமாக யோசி!

சுயமாக யோசி.

சொந்தங்களுக்குள் ஆலோசி.
அந்நியர்களின் ஆலோசனையால் புண்ணியம் இல்லை.

விலைக்கு வாங்கும் ஆலோசனை வளர்ச்சிக்கு உதவாது.பயிற்சிக்கும்
பலன்தராது.

அந்நியர் ஆலோசனையில்
கவரச்சி இருக்கும்
மலர்ச்சிசெய்யாது.
பொய்யிருக்கும் மெய்யிருக்காது.

கொ.பெ.பி.அய்யா.

பீதி வேண்டாம்.

பீதி வேண்டாம் பெரிய நாயகி!
சேதி காண்போம் கொரனா நீங்கி.
ஆதித் தமிழன் ஆண்ட பண்பாடு:
மீதி அமிழ்தம் மீண்டும் காப்பது.
சித்தர் எழுத்து சேமித்த பத்திரம்.
வைத்தியம் உரைக்கும் வாழ்வியல் மந்திரம்.

Wednesday, 20 May 2020

உச்சத்திற்கே கல்லடியா?

சொன்னாலும் கேவலம் ,
சொல்லாட்டி சாவலாம்.
என்னடா அரசியவ்--இது
சின்னப் புள்ள சகவாசம்.

கூரை மேல சோறு போட்டா,
கூடுவதும் ஆயிரங் காகா;
மேடை மேலே காசு போட்டா:
போடும் கூச்சல் விவாதப் பேச்சா!

அரை வேக்காடு அரசியல் பேச்சு:
தரம் பார்க்கா இழிவியல் ஆச்சு.
நரிக் கூட்டப் பஞ்சா யத்து
நெறியாளர் கேளிக் கூத்து.

ஜனநாயக நாட்டில் இங்கே
ஜனாதன தர்மம் எங்கே?
உச்சத்திற்கே கல்லடியா?
மிச்சத்திற்கு என்னடியோ!

கூசுதே மேனியெல்லாம்:
பேசாதீர்  விவாதம் இன்னும்.
காணொலி மறையட்டும்.
வானொலி நிறையட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 19 May 2020

புதிய வானம் புதிய பூமி!

புதிய வானம் புதிய பூமி
எங்கும் புது வழி தெரிகிறது.
கொரனா பிரிகையிலே அதை வழியனுப்ப
மக்கள் கரவொலி அதிர்கிறது.
ஓஹோஹோ.

கொரனா பாவியனின் காலத்திலே
மனிதன் படித்துக் கொண்ட பாடத்திலே
இனிதான் இருக்கு எதிர்காலம்.
என்ற நம்பிக்கை பிறக்கிறது.
கொண்டு இதயத்தில் நாளும் துடிப்பிருக்க
மலரும் காலம் புலர்கிறது.
மலரும் காலம் புலர்கிறது.
ஓ..ஓ..ஓ...லால்ல.....லா....லா.

உள்ள வாழ்கையினை வாழ்கையிலே
நெஞ்சில் வழிகளைத் தேடுகையிலே
வல்லவர் எல்லாம் வளம் பெறுவார்
என்ற நம்பிக்கை பிறக்கிறது.
நிலம் உயிர் வாழ குலம் எழவேண்டும்
என்ற ஓசை ஒலிக்கிறது.
என்ற ஓசை ஒலிக்கிறது.
ஓ...ஓ...ஓ...லால்ல...லா...லா.....

சொந்த ஊரு என்றும் சொந்தமில்லை.
கொண்ட பேரும் கண்டு சேர்வதில்லை.
மனிதம் ஒன்றின் நெறி கூடி
அன்பாம் இயற்கையை வணங்குவோம்.
கொரனா ஒழிந்தது போல் துயர் ஒழிந்ததென்று.
வளர் பாதையில் நடந்திடுவோம்.
வளர் பாதையில் நடந்திடுவோம்.
ஓ...ஓ...ஓ....லால்ல....லா....லா...

புதிய வானம் புதிய பூமி
எங்கும் புது வழி தெரிகிறது.
நீ பிரிகையிலே உன்னை வழியனுப்ப
மக்கள் கரவொலி அதிர்கிறது.
ஓஹோஹோ.

கொ.பெ.பி.அய்யா.

கொஞ்சம் தமிழ் படிச்சேன்.

தமிழைக் கொஞ்சம் படிச்சேன்.
அமிழ்தைத் துளிக் குடிச்சேன்.
தத்தித்தொத்திக் கவி வடிச்சேன்-தமிழ்
வித்தகரையும் விஞ்சத்துடிச்சேன்..

தமிழதுக் கடலென்பார்;
தரைக் கண்டவரெவனென்பார்.
தேடத்தேடப் புதையலென்பார்-வாழ்வின்
தேவைக்கெலாம் வள்ளலென்பார்.

எட்டித்தொடப் பார்க்கிறேன்.
எட்டவில்லை முயல்கிறேன்.
கிட்டும் வரைத் தொடருவேன்-வாழும்
கெட்டிக்கவி ஆகுவேன்.

வள்ளுவனைக் கம்பனைப் பாரதியை :
கொள்ளுகிறேன் நெஞ்சத்தில்.
முத்தமிட்டுத் தாள்கள் தொட்டு-மூத்த
முத்தமிழை கொஞ்சுகிறேன்.!

மனம் இன்னும் அடங்கவில்லை.
மதி ஒடுங்க உறங்கவில்லை.
இனம் புரியாத் தேடும் நிலை-விதித்த
விதி அதுவோ அடையுங்கலை!

எதை நான் தேட வேண்டும்?
அதையேன் சொல்ல வேண்டும்?
ஞானம் கொண்டு முயல வேண்டும்-தமிழை
நான் இன்னும் பயில வேண்டும்.

முன் மொழியும் புலம்பலெல்லாம்;
பின் வரைவு இலக்கியமாம்.
உள் முனையும் உணர்வெல்லாம்-அறிவுச்
சொல் விளையும் களஞ்சியமாம்.
.
கொண்டு வந்தது ஒன்றுதான்;
கொழுந்தான ஞானம்தான்.
கண்டு இங்குச் செழிக்க நான்--என்றும்
நின்று புவி வாழுவேன்.!

இட்டு வந்த இறைவனவனவன்;
இதயத்துள்ளே இருப்பவன்.
விட்டு வரச் சொல்லுவான்-தமிழில்
விதைத்த என் சொற்களைத்தான்!

சொல்ல வந்ததைச் சொல்லத்தான்;
சுதந்திரமும் எனக்குத்தான்.
கொள்ள வேறு இல்லைதான்-வாழ்வே
கொடுப்பான் அமரச் சொர்க்கம்தான்.

ஒன்றொன்றாய்ப் படியேறி
நன்றொன்றாய் நான் தேறி
கண்டொன்றாய் விடைக் கூறி-வாழ்வேன்
நின்றொன்றாய் நிலம் ஊறி..

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 17 May 2020

யார் முதலாளி!

ஆளுக் காளு பிச்சை எடுக்கும் முதலாளியே!
யாரு இட்ட பிச்சையிலே நீ வாழுற!
பாட்டன் பூட்டன் விட்டுப் போன சொத்து எவுவளவு--மொத்தம்
கூட்டிப் பெருக்கி கணக்குப பார்த்தால் ஏது இவ்வளவு?
கோடிகள் ஏது இவ்வளவு?

பாடு பட்டு உழைப்பால் உயர்ந்த டாடா பிர்லாவா!
ஓடி ஓடி தேடிச் சேர்த்த அம்பானிகளா!
கோடி கோடி கொடை வள்ளல்கள் வெளியில் பேசல--உதவி
கொடுக்காட்டியும் பரவாயில்ல கெடுத்து வைக்காதே!
மனிதம் கெடுத்து வைக்காதே.

வாசலுக்கு வருமுன்னே நாயை உசுப்புறே!.
தேசநலன் பேசிப் பேசி வேசம் பசப்புறே!.
உதவியையும் பிச்சை என்றே ஏளனம்
செய்யுறே!--ஆனால்
பதவி எனும் பிச்சை கேட்டு கால்களில் விழுகுறே!
ஏழை கால்களில் விழுகுறே!

பேரிடர் காலம் இதில் ஊரடங்கிக் கிடக்குது.
அரசியல் ஆக்குவதும் அரசியலார் வழக்கது.
நேர்ந்த இடர் அத்தனையும் தீர்ந்தே எழுந்தது--கொடை
வேந்தனவன் பாரிவள்ளல் ஆண்ட தமிழ் நாடிது.
மனிதம் வாழும் நாடிது.

கொடை கொடுப்பீர்  கருணையோரே!
விடை  கொடுப்போம் கொரனாவுக்கே!
ஏழையரின் வாழ்வாதாரம் ஏற்றம் பெறச் செய்வோமே--தொடரும்
நாளையிங்கு ஏழையில்லா நாடு ஒன்று
ஆக்குவோமே!
தமிழ் நாடு என்றே சொல்வோமே!

கொ.பெ.பி.அய்யா.

மழையும் மனிதமும்.

கருணை உள்ள உள்ளங்கள்.
கடவுள் போன்ற தெய்வங்கள்.
உலகம் அழிந்தும் சாகாது.
மழையும் ஒழிந்து போகாது.

அன்னை போன்று ஆதரிப்போர்
மண்ணும் வாழ அவதரிப்பார்.
மனிதம் இன்னும் மறிக்கவில்லை
மழையும் மண்ணை பிரிக்கவில்லை.

உறவுகள் எல்லாம் எதுவரை?
உடலும் உயிரும்  பிரியும்வரை.
கர்ண னுக்கு மரணமில்லை.
கருணை மனிதம் மறிப்பதில்லை.

பேரிடர் காலம் வாழ்வியல் சோதனை.
தேரிடும் கோலம் மானுடர் சாதனை.
ஊறுங் கருணை காப்பது ஞாலினை
வாழுங் கருணர் மீட்பர் ஊழினை.

பச்ச தாபம் பகிர்வது மனிதம்.
பிச்சை இடுவது பேர்புகழ் புனிதம்.
பதுக்கிய கோடிகள் எங்கடா இருக்கும்!
புதைக்கவும் பிணத்தை இடுகாடும் மறுக்கும்.

கொ.பெ பி.அய்யா.

Saturday, 16 May 2020

காதல் தெம்பு.

பீதி எதற்கு தேனம்மா?
நாதி உனக்கு நானம்மா.
காதல் கொடுக்கும் தெம்பம்மா:
கொரனா அடங்கும் நம்பம்மா.

எண்ணும் நாட்கள் கண்ணிலே.
இன்னும் சொல்ல சேதியை!
மின்னலைப் பிடித்து படிக்கிறேன்.
என்னடி எழுதின துடிக்கிறேன்.

கடன் அடைக்க ஆசைப்பட்டேன்.
கடலை நான் தாண்டிவந்தேன்.
சொந்த மண்ணை நம்பவில்லை.
வந்த மண்ணில் சொந்தமில்லை.

உலக மெல்லாம் ஊரடங்கோ!
வழிக லெல்லாம் கதவடைப்போ!
தண்ணீரீன் அலைகள் உறவோ!
கண்ணீரீன் கடலும் தடையோ!

பீதி எதுக்கு தேனம்மா?
நாதி உனக்கு நானம்மா.
காதல் கொடுக்கும் தெம்பம்மா:
கொரனா அடங்கும் நம்பம்மா

கொ.பெ.பி.அய்யா.

Friday, 15 May 2020

பொய் வாக்கு செல்லாது.

பொய் வாக்குக் கூட்டம் எல்லாம்
அய்யோணு போகுமே!
செய்வாக்குத் தீரம் வெல்லும்--சமூகம்
மெய்யேணு கொள்ளுமே!
 
விலைக்கு வாங்கும் யோசனைகள்
ஜொலிக்கின்ற போலிகள்.
பூசப்பட்ட சாயம் வெளுக்கும்--புரியும்
வேசம் போட்ட காலிகள்.

அடிதடி அலப்பரை எல்லாம்.
தடாலடி அயோக்யம் சொல்லும்;
வெறித்தனம் வேகம் தோற்கும்--என்றும்
விரித்திடாது சிலாக்யம்.

வெற்றுக் கூச்சல் ஆடமாட்டான்.
கற்றுக் கொள்ள நாளெடுப்பான்.
சுற்றம் ஓட சூழுரைப்பான்--நல்லோன்
கற்றவித்தை கவிதை செய்வான்.

அமைதியாய் பொறுத் திருப்பான்
சமயம் பார்த்துக் காத்திருப்பான்
பலஹீனம் புரிந்திருப்பான்--புத்திமான்
களம் அறிந்து வெல்லுவான்.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 14 May 2020

வீட்டுக்கு அடங்கு!

தாய் சொன்னா(ள்)மதிக்கலயே!
தாரஞ் சொன்னா(ள்)அடங்கலயே!
அப்பஞ் சொல்லும் மீறினதாலே:
இப்போ நானே ஒரு கொரனா 
ஆனேன்  அதனாலே!

அரசாங்கம் சொல்லச் சொல்ல
அடங்கலயே பாவி!
கையெடுத்துக் கும்பிட்ட காவலர்க்கும்
வணங்கலயே சாமி!
எல்லார்க்கும் டிமிக்கி விட்டுத் தெருப்
பொறுக்கித் திரிஞ்சேன்:
கொரனா தொற்று வாங்கி இப்போ
தீண்டத்தகான் ஆனேன்.

ஊரு கூடும் கூட்டத்திலே ஒன்றிணையக் கூடாதுணு.
போக்குவரத்து மூடி வச்சி பாது காத்த அரசே!
எதுக்குமே அடங்கலயே மொள்ளமாறி நானே:
கொரனாவால முடங்கிப் போனேன் அனாதையப் போலே.

ஊருசுத்திப் பேரெடுத்த ஊதாரி என்னால்
ஊருக்குள்ள எத்தனைபேர் கொரனாணு சொன்னால்;
நானூறுக்கும் மேலேயாம் நான்தானே பொறுப்பு.
வேணாம் சாமி என் நிலமை வீட்டுக்கு
நீ அடங்கு!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 13 May 2020

அச்சம் வேண்டாம்.

அச்சம் வேணாம் மச்சானே!
வச்சுச் செய்யி கொரனாவ!.
துச்சம் அதை ஓட்டிடலாம்.
கொஞ்ச நாளே விலகி இரு.

தொட்டாத்தான் ஒட்டிக்கொள்ளும்
தொற்று இது எட்டி நில்லு.
இருவாரம் கெடு இருக்கு
அதுவரைக்கும் விலகி இரு.

பயம் எதுக்கு பாத்திடலாம்.
தயங்காதே தனியே இரு.
நாட்டுக்காக நல்லதுனா
வீட்டுக்குள்ளே விலகி இரு.

தப்பான சோதனையாம்.
தப்பி வந்த கொரனாவாம்.
விட்டவன வச்சு செய்வோம்.
வீரன் நீ விலகி இரு.

மச்சானே! மச்சானே!
மனசுக்குள்ளே வச்சிருக்கேன்.
மொத்தமா ஆசையெல்லாம்
சேத்து வச்சுக் காத்திருக்கேன்.
மடை திறந்த வெள்ளம் போல
தடைவிலக விலகி இரு.

தம்முயிர் கருதாமல்,
நம்முயிர் காப்பவர்கள்,
தமிழரசும் மருத்துவரும்,
அசராத காவலரும்;
கண்கண்ட தெய்வங்கள்:
என்றும் வாழ வேண்டுமே.

கொ.பெ.பி.அய்யா.

பிறந்த நாள் வாழ்த்து.

உழவன் மகன் உழவுக்கு:
தலச்சம் புள்ள தமிழுக்கு.
வேளாண்மை நாட்டுக்கு:
விவசாயி தான் முதல்வன்.

சீதேவி தவப் புதல்வன்:
சிரித்தமுகம் தமிழ் முதல்வன்.
பூதேவி பொன் விளைய,
காவேரி காத்த மகன்.

உலகே உனைப் போற்றும்,
நிலவிடும் மனிதம் ஏற்றும்.
கழகத்தின் கண் மணியே!
அழகிய தமிழ் வாழ்த்தும்.

கொ.பெ.பி.அய்யா.

கொரனாவும் விருந்தாளி.

கொரனாவோட போராடி
பழகிப் போகும் நாளாகி.
மருந்து தந்தா உண்டு போவான்.
விருந்தாளியா வந்து போவான்.

எத்தனையோ வைரசுகள்
அத்னையும் பழகிப் போச்சு.
அப்பப்போ விருந்தாளிகள்
அப்படித்தான் கொரனாவும்.

பழகும்வரை பகையாளி.
பழகிவிட்டால் மருந்தாளி.
ஏற்கும்வரை போராளி
ஏற்றுக் கொண்டால் காவலாளி.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 12 May 2020

விவசாயி வாழ்த்து

உலகத்தின் அச்சாணி யாம்
உழவுத் தொழில் போற்று வள்ளி.
தைநாளாம் உழவர் தினம்
வையகத்தின் வாழ் நாளாம்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி.

சேறூன்றும் கால்கள் போற்று
வறுமையை போக்கும் வள்ளி.
ஏறோட்டும் கைகள் தானே
சோறூட்டும் தாய்க ளாகும்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!

விவசாயி வாழ வேண்டும்
விவசாயம் வாழ வள்ளி.
உலகுக் கெல்லாம் படியளக்கும்
உயிர் காக்கும் ஈசனவன்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!

தொழிலுக்கு மூல வனாம்
தொல்லுழவன் தானே வள்ளி
மூடை நெல் உயர வள்ளி!
கால மழை விவசாயிதான்.
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!

உழுதவன் கைகள் காய்த்து
சிவந்தபழம் போல வள்ளி.
அழகனவன் விவசாயி தான்
முருகனவன் தமிழ் கடவுள்
உழவனை தொழுவோ மானால்
உலகம் நின்று வாழும் வள்ளி!

கொ.பெ.பி.அய்யா.

Monday, 11 May 2020

விவசாயி!

எடப் பாடி பெரிய குளம் கண்டெடுத்த
போராளிகள்
விவசாயி........விவசாயி!
எடப் பாடி பெரிய குளம் கண்டெடுத்த
போராளிகள்.
விவசாயி........விவசாயி!

புரட்சித்தலைவர் பாதையிலே வழி நடக்கும்.
அம்மா புகழ் அதற்காக தினம் உழைக்கும்.
புரட்சித்தலைவர் பாதையிலே வழி நடக்கும்.
அம்மா புகழ் அதற்காக தினம் உழைக்கும்
தமிழகம் தலைநிமிற உடன் இருந்து,
தமிழகம் தலைநிமிற உடன் இருந்து:
இணைந்து செயல்படுவோர் விவசாயி!
விவசாயி!விவசாயி!

என்ன குறை இனியிங்கு தமிழ் நாட்டில்?
எவர் எதிர்க்கத் துணிவாரோ இவர் கூட்டில்!
என்ன குறை இனியிங்கு தமிழ் நாட்டில்?
எவர் எதிர்க்கத் துணிவாரோ இவர் கூட்டில்!
நாட்டுக்குப் பாடு பட இவர் போல
நாட்டுக்குப் பாடு பட இவர் போல
எவரும் இருப்பாரோ தமிழ் நாட்டில்!
எவரும் இருப்பாரோ தமிழ் நாட்டில்!
விவசாயி!விவசாயி!

சாதி என்றும் சமயம் என்றும்
வேற்றுமையாய்;
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்:
சாதி என்றும் சமயம் என்றும்
வேற்றுமையாய்;
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்:
பொறுப்புள்ள தலைவர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள தலைவர்கள் சொன்னபடி
கழகந்தான் ஆளுமென்றும் நிரந்தரம்.

இருந்திடலாம் நாட்டில் பல கட்சிக்கொடி,
எத்தனையோ ஆசைகளின் எண்ணப்படி.
இருந்திடலாம் நாட்டில் பல கட்சிக்கொடி,
எத்தனையோ ஆசைகளின் எண்ணப்படி.
பறக்கவேண்டும் எங்கும் ஒரே கழகக்கொடி!
அது அண்ணா திமுக புரட்சிக் கொடி.
அது அண்ணா திமுக புரட்சிக் கொடி.
விவசாயி!விவசாயி.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 10 May 2020

சென்னையிலே கண்டம்!

சின்னப் பையன் அறியலயே!
சிந்தையில எண்ணலயே!
ஆத்தாடி உன் நினைப்பு கொல்லுதம்மா
கட்டறுந்த காத்திடிபோல் கத்துதம்மா!

சென்னையிலே கண்டமுண்ணு
சோசியரும் சொல்லலயே!
கண்டபடி சுத்துனது தப்பாப் போச்சே
கொரனா தொற்றுனதால் தனிமை ஆச்சே!

ஊரெல்லாம் ஒரு பேச்சு:
ஊரடங்கும் போட்டாச்சு.
சமத்தாட்டம் நான் அடங்கி இருந்திருந்தா;
இப்படி தனிமையிலே ஏங்கிடவும்
வேண்டாமே!
நாளையும் தேதி பார்த்து நில்லம்மா.

பெண்ணாகப் பிறந்தாயோ!
கண்ணீரில் நனைந்தாயோ!
என் ஆயுள் கெட்டியம்மா உன்தாலி காக்குமம்மா!
அண்ணாந்து பார்த்தாலும்
ஆகாயம் நீயம்மா!
இன்னொரு பிறவி வந்தா எனக்கு நீ தாயம்மா!

வீட்டுக்கு அடங்காப் புள்ள;
வீணானது எத்தனையோ!
இதோ எந்தன் தெய்வங்கள் டாக்டர்கள்.
நோயோட காலம் நாளும் இருவாரம்மா!
தீர்த்தனுப்பும் தமிழரசு வாழ்த்தம்மா!

கொ.பெ.பி.அய்யா.

மனிதம் வாழட்டும்.

கட்சிகள் தோற்றம் போதும்!.
காட்சிகள் மாற்றம் வேணும்.
பொய்கள் கேட்டது போதும்--நேர்மை
மெய்மை ஆய்ந்திட வேணும்.

மாற்றும் ஆட்டைகள் போதும்!.
மாற்றம் நேர்ந்திடல் வேணும்.
தூற்றும் அரசியல் போதும்--தூய்மை
ஆற்றும்  நெறியியல் வேணும்.

மேடைப் பேச்சுகள் போதும்!.
வாய்மைக் கூற்றுக்கள் வேணும்.
ஓட்டு வேட்டைகள் போதும்--அறிவு
ஏற்றிடும் மாற்றங்கள் வேணும்.

வாரிசுப் பழமை போதும்!.
ஆள்வினைத் திறமை வேணும்.
அடிமைச் சிந்தை போதும்--சுயமாய்
விடுதலை அறிவு வேணும்.

வணிக அரசியல் போதும்!.
புனித வாழ்வியல் வேணும்.
கணிக்கும் தேர்தல் போதும்--வாழும்
மனிதம் தேரந்திடல் வேணும். 

கொ.பெ.அய்யா.

Saturday, 9 May 2020

இராசியான முதல்வர்.

இராசியான தமிழ் முதல்வர்,
நேசம் அம்மா தலைப் புதல்வர்;
வாசியான எடப் பாடியார்--இந்திய
தேசம்புகழ் விவசாயி வாழ்கவே!

விவசாயி பெற்ற மகன்,
விவசாயம் செய்யும் உழவன்;
விவசாயம் நாட்டு நலன்--தமிழக
மவுசான முதல்வர் வாழ்கவே!

தவம் என்ன செய்தோமோ!
விவசாயி முதல்வர் ஆனார்.
அவசியம் இவர் அன்றோ--வாழும்
விவசாயம் வாழ வாழ்கவே!

அவதாரம் அம்மா சன்னதி
தவசியார் பன்னீர் அய்யா
துணை முதல்வர் துணையோடு--தீய
வினை முடித்து வாழ்கவே!

அண்ணாவழித் தலைவர் ஆட்சி,
அம்மாவழி பழனியார் ஆட்சி;
சொன்ன முன்னோர் நிரந்தரம்--பூமி
உள்ளவரை ஆளும் வாழ்கவே!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 8 May 2020

மகா உலகப்போர்!

மகா உலகப் போர் இதை,
எகத்தாளமா சிலபேர் கதை;
அவுல் கிடைத்தார் போல் அதை
கொரனாவை  மெல்கிறார்கள்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்!

வடை போச்சே என்பதல்ல,
உயிர் போச்சே என்று சொல்ல.
அரசு சொல்லும் வழி முறையில்
வாழ்ந்தால் உயிர் தப்பலாம்--சாமி
யாரோடு போர் என்றீர்
கொரனாவோடு போர் கண்டீர்.

வாள் வேண்டாம் தோள்கொடு!
தாள் பூட்டி வீடடுள் இரு!
தொடர் அறுந்தால் தோற்றுவிடும்.
இடர் அறிந்து ஓடிவிடும்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்

எதையிங்கு கொண்டு வந்தோம்!
அதையங்கு எடுத்துச் செல்வோம்!
பேசிப்பேசி என்ன கணடோம்?
ஊசிப்போன வடையானோம்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்

எவரெவர் நம்பிக்கையோ!
அவரவர்க்கு சோதனைகள்.
அப்படித்தான் பேரிடர்கள்-
இப்படித்தான் சாதனைகள்--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்!

பேர்வாங்கி ஆள்வதென்ன!
ஊரோங்கி வாழ்வதென்ன!
மூச்சு நின்றால் பேச்சில்லை
ஆணவங்கள் ஆவதில்லை--சாமி
யாரோடு போர் என்றீர்!
கொரனாவோடு போர் கண்டீர்!

யார் முடிப்பார் என்றாய்ந்து
நேர்ந்த திரு விளையாடலிது.
எதை உணர்த்தும் ஆட்டமிதோ!
அதை நடத்தி முடித்துவிட்டான்--வல்ல
இறையவனை மறுத்தார்க்கு
இயற்கை தந்த பாடமிது.

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 7 May 2020

சபாஷ்!

சபாஷ் சரியான போட்டி.
கொரனாவா!தமிழனா!
யுத்தம் உச்ச கட்டம்!
வெற்றி யாருக்கு?

பலம் காட்டி தன்சக்தி
விறையம் செய்கிறான் மொத்தமும்.
நிலை குலைந்த தடுமாற்றம்--கொரனா
வெறியாட்டம் ஆடுகிறான்.

எதிர்த் தவனைப் போராடி.
எதிர்சக்தி  கூடித் தமிழன்;
பலகீனம் படித்து விட்டான்--தன்
பலம் கூடி களம் வெல்வான்.

விரைவி லொரு நற்செய்தி
நிறைந்து மகிழும் தமிழகம்.
கொரனாவே வீழ்ந்தானென--என்றும்
கொட்டி முழங்கும் உலகமே!

கொ.பெ.பி.அய்யா.

நாளை என்பது சமாதானமல்ல.


நாளை என்பதும் சமாதானமல்ல.

நாளை என்பது சமாதானமல்ல.
கோழையின் நழுவலே நாளை எனும் சொல்.
பாலை வனத்தில் நீர் தேடல் போலே
நாளை என்பதும் கானல் நீர் தானே.

வாய்ச்சொல் வீரன் வாய் மொழி வாக்கு.

மாயமான் மாரீசன் பொய் வழி போக்கு.

தேனாய் ஒழுக்கும் தான்பேசும் அடுக்கு

வீணாய் வழுக்கும் வீண்மோசம் முடுக்கு.

கொ.பெ.அய்யா.

சின்ன வயசு உறவுகள்.


என்னமோ தெரியல 
இன்னசமும் மறக்கல.
சின்ன வயசு உறவுகள்
நெஞ்ச விட்டு அழியல.

பள்ளிக் காலம் பழகிய
கள்ளம் போல் அரும்பிய
உள்ளம் ரெண்டு நெருங்கிய
வெள்ளை க்காதல் மறக்கல.

அண்ணன் தம்பி பிறவிகள்
வண்ணம் இல்லா உறவுகள்
ஒன்று பட்ட பரிவுகள் 
துண்டு பட்டும் அழியல.

வாண்டுகளாய் அன்பர்கள்
கூண்டு விட்ட அன்பர்கள்
ஆலமர ஊஞ்சல் ஆட்டி 
ஆடியதும் மறக்கல.

பால் இனம் வேற்றுமையை
வாலிபம் கற்ற கதைகளை
தோழமை செய்த அரட்டைகளை
கேளிக்கையாய் அழியல.

பள்ளி செல்ல மறுத்ததும்
துள்ளி துள்ளி அழுததும்
வாத்தியார் இழுத்ததும்
நேற்று போல் நினைவிலும்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 6 May 2020

வணங்குவோம்!வாழ்த்துவோம்!

கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.
மறுபிறப்பு உலகமிதை--சுகமாய்
பிரசவித்த மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.

கைகால்கள் கழுவுவதும்--இரு
கைகூப்பி வணங்குவதும்
கலாச்சாரம் கற்றுத்தந்த--உயிர்
காப்புறுதி மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.

வாய்மூக்கு கவசமதும்--பகவான்
வர்த்தமானர் அறிமுகம்.
விலகியும் தனித்திருக்க--அன்றே
பழக்கிய மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.

சுத்தந்தான் சோறுபோடும்--காக்கும்
சுகாதாரம் மருத்துவம்.
ஊர்சுற்றக் கூடாதென--தமிழ்
உபதேசித்த மருத்துவரை
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.

தூய்மை போற்றும் பணியாளர்--நம்மை
காவல் காக்கும் காவலர்,
கருணைமனக் கொடையாளர்--செயல்
தமிழரசும் மருத்துவரே!
கைகூப்பி வணங்குங்கள்--இதோ நம்
கண்கண்ட தெய்வங்கள்.

கொ.பெ.பி.அய்யா.