Sunday, 16 December 2018

அம்மா இரஙகற்பா.

அம்மாவிற்கு இரங்கற்பா

அம்மா அம்மா வா என்றே
அகிலம் இன்று அழுகிறதே.
தாயே தாயே நீ என்றே
தமிழே உன்னை தொழுகிறதே.

அம்மா உன்னை இல்லை என்றால்
நம்ப மனமும் மறுக்கிறதே.
சும்மா சொல்லும் சொல்லாக்கி
அம்மா நீயும் எழுந்து வா!

ஜே என்றாலே ஜெயம் என்பார்.
ஜெயம் என்றாலே நீயென்பார்.
எமனிடம் தோற்றதும் பொய்தானோ!
இமயம் சாய்ந்ததும் மெய்தானோ!

புரட்சித் தலைவர் ஆன்மா நீ
புரட்சித் தலைவி புகழே நீ
உழைத்துக் களைத்து அவர்நிழலே
அழைத்து அமரம் ஆனாயோ!

நிரந்தரம் முதல்வர் நீ என்றோம்.
வரந்தரும் இறைவி தானென்றோம்
நிறைந்தும் தமிழகம் நீயாக
பரந்தும் துணைசெய் தாயாக.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 7 December 2018

சிந்திக்க ஒரு நிமிடம்.

ஒரு கணம் சிந்தியுங்கள்.!

இனியேன் இருப்பது எல்லாம் முடிந்தபின்
    என்றேநீ எண்ணியும் முடியுமுன்
நுனிநொடி தன்நின்று நெஞ்சம் துணிந்துபின்
    நுண்ணறி வாய்ந்து நெறிமுன்
மனிதர் தோற்றும் முயன்றுமே வென்றார்பின்
மின்னும்பார் ஆயிரமே பாதைமுன்.

உயிரும் விலையோ உள்ள பொருளோ!
  உன்னால் பெறவும் ஒன்றோ !
மயிரோ மழிக்கவும் மீட்டவும் வருமோ!
      மன்னுயிர் போக்கலும் நன்றோ!
வயிறொன்றுந் தானது வாழ்வில் பொறுப்போ
     வெங்கான் விலங்கது வென்றதோ!

பொறுமை யிழந்த புரியாஉணர்ச்சியோ!
    பூமி விடுதலை பயனோ!
வறுமை பயந்துமே வாழ்வை மறுப்பதோ!
  வட்டந்தன் சுற்றம் விடுவையோ!
உரிமை உனக்கார் உடைமை குறித்ததோ!
உன்னுயிர் நீக்கல் உனதோ!

கொலையும் தற்கொலை கொல்வதே பாவம்!
இலையோ துணிவு எதிர்க்கவும்.
அலையோ மீள அவசரக் கோவம்
நிலையோ ஆள நிலமும்.
தொலையோ வாழ்வு தொலைப்பது சாபம்
கலையாம் உலகம் கடக்கவும்.

கொ.பெ.பி.அய்யா