Tuesday, 31 March 2020

உலகம் அறியாத புதுமை!

உலகம் அறியாத புதுமை-கூடிப்
பழக முடியாத கொடுமை.

காற்றில் பரப்பிய விசமாக-கொரோனா
தூற்றிய நெருப்போ எமனாக.

குடும்பம் நலம் வாழத் தனிமை
இருந்தால் எதிர் காலம் இனிமை.
விலகி இருப்போம் சில நாள்
உலகில் பிழைப்போம் பல நாள்.

சீனா விதைத்த விதையாலே
வீணாய் புதைந்தார் கொரோனாலே.
விழித்தோம் நல்லது முன்னாலே
ஒழிப்போம் கொரோனாவை அஞ்சாதே!

வாழ்வதும் வீழ்வதும் நம் கையில்
போனால் வெளியே எமன் பையில்
வீட்டுக்கு உள்ளே வாழ்ந்திருப்போம்
நாட்டுக்கு நல்லது காத்திருப்போம்.

கொ.பெ.பி.அய்யா.

தொட்டாலும் பட்டாலும்.......!

மனிதனை மனிதன் தொட்டாலும்
தொடாமல் மூச்சுப் பட்டாலும்
தொற்றிக் கொள்ளும் கொரோனாவோ-சமூகத்தை
சுற்றிக் கொல்லும் விலகிப் போ!

கிட்டக் கிட்டச்  சேராதே.
விட்டு மூன்றடி நெருங்காதே.
மனிதனைத் தானே ஊடகமாய்-கொரோனா
மனிதரில் பரப்பிட ஏறி வரும்.

தும்மல் இருமல் மூச்சடைத்தால்
சும்மா மெத்தனம் கூடாது.
மருத்துவ சோதனை செய்தாலும்-வாரம்
பொறுத்து தனிமை காத்திடலாம்.

இறைவன் அவனிடம் கையேந்தி
இறைஞ்சி தனித்தே சுபம் வேண்டி
சமூகம் வாழ வீடிருப்போம்-வைரஸ்
கொரோனா ஒழிய தவமிருப்போம்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 29 March 2020

தனித்து போராடு

ஊரெல்லாம் கூடித் திரிந்தால்
கொரோனாவும் ஊர் சுற்றும்.
ஊரடங்கி தனித்திருந்தால்-அது
பேரடங்கி அழியும் செத்தும்.

வீரனெறால் தனித்து இரு
வீட்டுக்குள்ளே அடங்கி இரு
தனிமையிந்த ஆயுதந்தான்-கொடிய
கொரோனாவைத் தெறிக்க விடும்.

தனிமை கூட வேள்விதான்
தவம் அது போலத்தான்.
இனிமை ஆகும் வாழ்வுதான்-உலகில்
இனியில்லை கொரோனாதான்.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 28 March 2020

அடிச்சாத்தானா!

அடிச்சாத்தான் அறிவு வருமா?
படிச்ச பாடமும் புரிஞ்சு தெளியுமா?
ஓடு ஓடுணு அடிச்சாத்தான் தெரியுமோ
வீடு வீடுணு கிடக்கத்தான்.

சட்டம் போட்டா மதிக்கத் தெரியாதா!
சாவு வருதுணா ஒளியத் தெரியாதா!
யாரக் காப்பாத்த நாங்க வேகிறோம்
ஊரக் காபாத்தணா உனக்கு புரியாதா?

காவக்காரன்னா இளக்காரமா போச்சுதா?
கம்ப எடுத்தாத்தான் போலீசணு புரியுதா?
மரியாதை புரிஞ்சா மவுசு குறையுமோ!
மனுசனா இருங்க எனக்கென்ன வேல!

கொ.பெ.பி. அய்யா

உன்னை நீ நம்பாதே!

என்னைக் கொரனா
என்ன செய்யும்-என்றே நீ
உன்னைக் கூட நம்பாதே!
தன்னைத் தானே தனிமை செய்.
இன்னும் மருந்து வேறென்ன!

மூன்றாம் உலகப்போர்
வேண்டாம் விலகிப் போ!
தொட்டாலே அக்கப்போர்
எட்ட நீ கொரனா போ!

மனிதருக்குள் அணுகுண்டாய்
மறைஞ்சிருக்கு கொரனாவாய்
மூன்றாம் உலக யுத்தமாய்
தோன்றியதோ கொரனாவாய்!.

கொ.பெ.பி. அய்யா.

Friday, 27 March 2020

உயிர்மேல் ஆசை இல்லையா.

உயிர்மேல் ஆசை இல்லையா;
உங்களுக்கு குடும்பம் இல்லையா;
சுயபுத்தி தான் இல்லையா;
சொல் பேச்சும் கேட்பதில்லையா?

உலகில் என்ன நடக்கிறது;
உயிர்கள் எத்தனை பறக்கிறது;
மிச்சம் மீதி இருக்கனுமா?
மொத்த மாத்தான் தொலையனுமா?

கொரோனா என்றால் என்னென்று
புரிந்ததா புரிய வில்லையா?
எமனென்றால் எவன் என்று
இவன்தான் அவன் இன்று.

பத்திரமாய் வீட்டுக் குள்ளே
மொத்தமாய் ஒளிஞ்சுக் கிட்டா
சத்தியமா கொரோனா சாவான்
உத்தமம் உங்களுக்கு.

கொ.பெ.பி.அய்யா.






Thursday, 26 March 2020

கும்மி கொட்டடி

கொட்டடி கொட்டடி கும்மிகள் கொட்டடி
கொரோனாவை ஒழித்தோமென
கும்மிகள் கொட்டடி.

தட்டடி தட்டடி கைகளத் தட்டடி
தியாகிகள் மருத்துவர் சேவையை வாழ்த்தி
தட்டடி தட்டடி கைகளத் தட்டடி.

கூட்டிப் பெருக்கி வீட்டக் கழுவி
வாசலத் தெளிச்சி வண்ணக் கோலங்களிட்டு
விளக்கை ஏற்றி தேசத்தைப் போற்றுங்கடி.

ஆளுமரசு நீளும் வயசு
வாழும் மேலும் மவுசு.
கொட்டடி கொட்டடி கும்மிகள் கொட்டடி
கொரோனாவை ஒழித்தோமென
கும்மிகள் கொட்டடி.

கொ.பெ.பி.அய்யா.

உசுரு ரொம்ப முக்கியம்.

உசுரு ரொம்ப முக்கியங்க
மசுரு இல்லீங்க.
கொரோனாட்ட மாட்டிக்கிட்டா
கொடுமை தானுங்க.
பத்திரமா வீட்டுக்குள்ள
பதுங்கிக் கொள்ளுங்க-உசுர
பதுக்கிக் கொள்ளுங்க.

வீட்டவிட்டு வெளியே வந்தா
வீணாப் போவீங்க.
எட்டிப் பாத்தா கொரோனாதான்
எமனா வாராங்க.
நாட்டரசு பேச்சக் கேட்டா
நல்லா இருப்பீங்க-குடும்பம்
நல்லா இருக்குங்க.

உங்களால ஊரழிய
வேணாம் கேளுங்க.
அங்க இங்க எஙகதாங்க
கொரோனா வீழுங்க
உங்க கையில் ஓட்டிக்கிட்டா
உசுரு வாழுங்க-நம்ம
உசுர வாங்குங்க.

உசுரு ரொம்ப முக்கியங்க
மசுரு இல்லீங்க.
கொரோனாட்ட மாட்டிக்கிட்டா
கொடுமை தானுங்க.
பத்திரமா வீட்டுக்குள்ள
பதுங்கிக் கொள்ளுங்க-உசுர
பதுக்கிக் கொள்ளுங்க.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 25 March 2020

வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க!

உங்க
காலைத் தொட்டு வணங்குகிறேன்
கவனங் கொள்ளுங்க-சாமி
கவனங் கேளுங்க.
கொரோனாவ ஒழிக்க நல்ல
மருந்து தானுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

வேளை இப்போ சரியில்ல
காலில் விழுகிறேன்-பாவி
எமனாகக் கொரோனாதான்
எஙகுந் திரியுறான்-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

நாடு ரொம்ப ஆபத்துல
வாடி அழுதுங்க-நாசக்
கேடு கெட்ட கொரோனால
பாடா படுதுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

கொஞ்ச நாளு பொறுத்துக்கோங்க
கெஞ்சிக் கேக்குறேன்-கொடிய
நஞ்சான கொரோனாவும்
அஞ்சி ஓடும்ங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

அரசு சொல்லும் பேச்ச நல்லா
புரிஞ்சு கொள்ளுங்க-நம்ம
உசுரு நமக்கு முக்கியம்னு
உணர்ந்து கொள்ளுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

எதிர்காலம் இனிமையாக
தனிமை பேணுங்க-ஓயாம
கை கால்கள் சுத்தமாக
கழுவ வேணுங்க-நீங்க
வீட்டுக்குள்ளே இருந்துக்கோங்க
வெளியே வேணாங்க.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 23 March 2020

சொன்ன பேச்சக் கேளுங்க!

சொன்ன  பேச்சக் கேளுங்க-அரசு
சொன்ன பேச்சக் கேளுங்க!
இன்னும் ரொம்ப நாளைக்கு
மண்ணில் நீங்க வழுங்க!

கொரோனாவைப் போலங்க-வேற
கொடிய நோய் இல்லங்க.
அரக்கன் அந்த நோயங்க
அடியோடு ஒழிப்போங்க!

வேண்டாங்க வேண்டாங்க-யாரும்
வெளியே வர வேண்டாங்க!
தனிமைதான் மருந்துங்க
தைரியமா வாழுங்க!

எச்சரிக்கை வேணுங்க-எங்கும்
எச்சில் துப்ப வேண்டாங்க!
கைய்ய நல்லா கழுவுங்க
மெய்யா சுத்தம் செய்யுங்க!

கூட்டங் கூட வேண்டாங்க-கூடி
பேச்சு மூச்சு வேண்டாங்க!
தொட்டுப் பழக வேண்டாங்க
தூரம் நின்னு பேசுங்க!

பயப்படவே வேண்டாங்க-வதந்தி
வசப்படவே வேண்டாங்க!
சொன்ன சொல்ல நம்புங்க
ஒன்னும் இல்ல வம்புங்க!

கொ.பெ.பி.அய்யா.