கோழையின் நாளை.
நாளை என்பது
சமாதானமல்ல.-அது
கோழை சொல்வது பொருளானதல்ல.
பாலைக் காட்டில் தண்ணீர்
தேடினால்-அது
ஆளை ஏய்க்கும் முன்னீர்
கானலாய்.
வாய்ச்சொல் வீரன் வக்கனை
பேசுவான்-பொய்
நாய் வாலாட்டி நன்றியும்
மறப்பான்.
காய்களை மாற்றி தந்திரம்
செய்வான்-பொய்
மாயங்கள் முழக்கி வேதங்கள் பழிப்பான்.
பேய்க்கதை பேசி பேதமை வெல்வான்-வெறும்
புறம்பழி குரைத்து பாவங்கள் செய்வான்
நேர்வழி மறைத்து ஊர்பழி ஏற்பான்-இறுதி
தீர்வழி மறந்து திண்ணையில் களிப்பான்.
கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.