Wednesday, 19 October 2016

கோழையின் நாளை.

கோழையின் நாளை.

நாளை என்பது சமாதானமல்ல.-அது
கோழை சொல்வது பொருளானதல்ல.
பாலைக் காட்டில் தண்ணீர் தேடினால்-அது
ஆளை ஏய்க்கும் முன்னீர் கானலாய்.

வாய்ச்சொல் வீரன் வக்கனை பேசுவான்-பொய்
நாய் வாலாட்டி நன்றியும் மறப்பான்.
காய்களை மாற்றி தந்திரம் செய்வான்-பொய்
மாயங்கள் முழக்கி வேதங்கள் பழிப்பான். 

பேய்க்கதை பேசி பேதமை வெல்வான்-வெறும்
புறம்பழி குரைத்து பாவங்கள் செய்வான்
நேர்வழி மறைத்து ஊர்பழி ஏற்பான்-இறுதி
தீர்வழி மறந்து திண்ணையில் களிப்பான்.

கவிஞர்.கொ.பெ.பி.அய்யா.