Tuesday, 7 May 2019

வா மழையே வா!


மழையே மழையே வா! -உன்
மௌனம் கலைவாயே-நீ
தொலையாமல் கலையாமல்
வா மழையே வா வா!

காயும் நிலமெல்லாம்-உன்
தாய்மை வேண்டுதே-நீ
தாயாய் சுரந்து பாலாய் பொழிந்து
வா மழையே வா வா!

உன் தயவே அல்லாதே-உன்
பெருமை சொல்லாதே-நீ
ஆளும் உலகம் வாழாது தாயே
வா மழையே வா வா !

வறண்ட தமிழகத்தின்-உன்
வரவாய் வசந்தத்தின்-நீ
கருணை வடிவாய் பந்தத்தின்
வா மழையே வா வா!

கொ பெ.பி.அய்யா.

Friday, 3 May 2019

காதல் சொல்ல வார்த்தையில்லை

என்ன சொல்லத் துடிக்கிறாள்

என்ன சொல்லத் துடிக்கிறாள்..
இதயம் துள்ள ஒடிக்கிறாள்..
ஆனாலும் தான் நடிக்கிறாள்
அவள் என்னைப் படிக்கிறாள்.

சிரிப்பில் என்ன சொல்கிறாள்.
சிந்தைக்குள் மெல்கிறாள்
மரத்தைக் கட்டிக் கொள்கிறாள்.
கரத்தைப் பற்ற மொழிகிறாள்.

தாவணியை விரிக்கிறாள்`
தானுனக்கு என்கிறாள்.
பாவாடைக்குள் காற்றழைத்து
பாவி என்னை உசுப்புகிறாள்.

இழுத்து இழுத்து மூடுகிறாள்.
எல்லாம் உனக்கு என்கிறாள்.
பழுத்த கனிப் பருவம்தான்
பழகத்தான் அழைக்கிறாள்
.
கண்கள் சொல்லும் காதலை
கடை ஒதுக்கிக் காட்டுகிறாள்.
பெண்கள் வெல்லும் வித்தையை
பேசாமலே செய்கிறாள்.

காதல் சொல்ல வார்த்தையில்லை .
வேதங்களில் தேடுகிறாள்.
ஏதுமங்கே போதவில்லை.
பேதையவள் வாடுகிறாள்.

கொ.பெ .பி.அய்யா.