மழையே மழையே வா! -உன்
மௌனம் கலைவாயே-நீ
தொலையாமல் கலையாமல்
வா மழையே வா வா!
காயும் நிலமெல்லாம்-உன்
தாய்மை வேண்டுதே-நீ
தாயாய் சுரந்து பாலாய் பொழிந்து
வா மழையே வா வா!
உன் தயவே அல்லாதே-உன்
பெருமை சொல்லாதே-நீ
ஆளும் உலகம் வாழாது தாயே
வா மழையே வா வா !
வறண்ட தமிழகத்தின்-உன்
வரவாய் வசந்தத்தின்-நீ
கருணை வடிவாய் பந்தத்தின்
வா மழையே வா வா!
கொ பெ.பி.அய்யா.