Wednesday, 13 January 2016

தமிழே நீ சொல்லு.

தமிழே நீ சொல்லு!

தாயே!தகையே!தமிழே நீ சொல்லு!
தந்திரம் மந்திரம் எல்லாம் தள்ளு!
சாயா நீதியின் சாத்திரம் கற்ற நீ!
உந்திறம் கண்டுமே  உற்றது தேர்நீ!

தர்மம் நாடாளும் தமிழின் புண்ணியம்.
மர்மம் தான்நாளும் மரத்தது கண்ணியம்.
நாமே நாமாரும் நமக்கென எண்ணியும்,
யாரே!யாமாரும் நமக்கிணை திண்ணியம்.

தந்தை புரட்சியார் தாயோ!நாச்சியார்.
சிந்தை நிறைத்தவர் செத்தனர் மாட்சியார்!
சந்தை அரசியலில் சத்தியர் உண்டோசொல்!
முந்தை வரமதனில் முயன்றது  சண்டாளமோ!

காந்தியும் காமராசும் கண்டபொன் சிகரங்கள்.
இந்தியா பெற்றதும் எந்தமுன்  தவங்களோ!
மந்தியா பிந்தின மந்தைதன் அவலங்கள்.
நிந்தியா நிற்றதும் எந்தைபின் எதுவுங்கள்?

தேனார் சோதிக்க தீராய்வும் தேவையோ!
தூணார் சாதிக்க தேறுவதும் தேரவோ!
வீணார் ஓதுவார் வென்றபின் ஒதுக்குவார்.!
தானார் காட்டுவார் தன்தொழில் பெருக்குவார்..

கொ.பெ.பி.அய்யா.

Monday, 11 January 2016

ஆன்மிக அறிவொளி.

ஆன்மிக அறிவொளி.

ஆன்மிக அறிவொளி அழகா!
நோன்மிக நெறிவழி உலகா!
மாண்மிக மதிமொழி திலகா!
தான்மிக நிதியொலி விவேகா!
சகோதர சமயம் சமைத்தவா-எழுமின்!
யுகாதர உதயம் வா! வா!

சுடராய் சோபிக்கும் சுந்தரா!
அடராய் ஆலாபிக்கும் மந்தரா!
தொடராய் துலங்கும் தத்துவா!
விடையாய் வியாபிக்கும் வித்தகா!
இறைமறை இயற்றி இணைத்தவா-விழிமின்
நிறைமுறை நிமிர்த்த வா!வா!

பழகும் மனிதம் பழக்கவா!
இளகும் புனிதம் இறுக்கவா!
இழக்கும் உறவும் பிழைக்கவா!
விலக்கும் விளக்கம் துலக்கவா!
ஆற்றும் நெறிகள் ஒடுக்கவா--உழைமின்
போற்றும் பொதுமறை ஆற்றவா!

வெவேகானந்தா விளக்கமே வா!


கொ..பெ.பி.அய்யா.

Saturday, 9 January 2016

இரவே இனிமை.

இரவே இனிமை

இரவே இனிமை -அதில்தான்
தனிமைக்கு உரிமை.
அமைதியின் சுகவாசம்
இரவில்தான் பிரவேசம்.
ஆன்மாவின் உறவு
இரவில்தான் வரவு.
உழைத்தவன் வாசம்
இரவில்தான் நேசம்.
களைத்தவன் ராஜ்ஜியம்
இரவில்தான் பூஜ்யம்.
நினைவுகள் மறக்கும்
இரவுகள் இனிக்கும்.

தொலைந்த நாகரீகம்
கலைந்த பண்பாடு
சிதைந்த பழைமை
புதைந்த வழமை
மறைந்த அருமை
நிறைந்த சிறுமை
இதுதான் நிலைமை
இன்றைய புதுமை.

கொ.பெ.பி.அய்யா.


Thursday, 7 January 2016

மூச்சாறும் தமிழ்.

மூச்சு ஆறும் தமிழ்.

தாயினை தள்ளி வைத்தார்.
நாயினை பள்ளி வைத்தார்
கோவிலை மூடிவைத்து-தமிழ்
தேவியை ஈடு வைத்தார்.

முக வரியை மாற்றுகிறார்.
தக வியல்பை நீற்றுகிறார்.
சுயமதனை இழந்துமே-தமிழ்
தய வதனை தூற்றுகிறார்.

பயின்ற வழி அழிக்கிறார்.
முயன்ற விழி பழிக்கிறார்.
இயன்றதை துறந்துமே-தமிழ்
உயர்ந்த மொழி இழிக்கிறார்.

தன்னி யமும் வெறுக்கிறார்.
மண்ணி யமும் மறுக்கிறார்.
அன்னியம் நன்னியமோ--தமிழ்
புண்ணி யமும் துறக்கிறார்.

மெல்லவும் மூச்சு தேறும்.
வெல்லவும் பேச்சு ஆறும்.
குஞ்சொன்று அக்கினி-தமிழ்
விஞ்சென்று அது மீறும்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 6 January 2016

கடிதம் ஒன்று.

கடிதம் ஒன்று வந்தது.

கடிதம் ஒன்று வந்தது.
காற்று வந்து தந்தது.
படிக்கும் போது பறந்தது.
பாட்டாகக் கலந்தது.

எழுதாத எழுத்தது.
இயற்றாத பொருளது.
வடிக்காத வரியது.
முடிக்காத கவிதையது.

உயிரான உயிரது
உயிருள்ள உணர்வது.
ஆன்மாவின் வடிப்பது
ஆன்மாவுள் துடிப்பது.

வேதமெனும் பதிவது
வீரியத்தின் விதியது.
காதலெனும் திருவது,
காலத்தின் கருவது.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 4 January 2016

தாயம்மா

அறிவே தாயம்மா!

அறிவே தாயம்மா!
அன்பே நீயம்மா!
சிறகே தாயம்மா!
சிந்தனை நீயம்மா!

அம்மா உன் மடியம்மா!
அது என் உலகம்மா!
அம்மா உன் தோளம்மா!
அது என் நூலம்மா!

நீதானே நானம்மா!
நிழலாக தானம்மா!
உயிராக நானம்மா!
ஊனுனது தானம்மா!

நானென்று ஏதம்மா!
நினைவெல்லாம் உனதம்மா!
நாளென்று ஏதம்மா!
நடப்பதுன் வேதம்மா!

தமிழ்தானே மொழியம்மா!
தாய்தானே வழியம்மா!
மதமென்ன மறையம்மா!
மாதாமுன் நிறையம்மா!

ஆலயம் ஏனம்மா!
அம்மாநீ தானம்மா!
பூசையும் ஏனம்மா!
போற்றநீ தானம்மா!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 3 January 2016

இயற்ககையோடு........

இயற்கையோடு இசைந்து வாழ்க!

சுதந்திரம் சொல்லும் விலங்கினங்கள்
வதம்பட வில்லை சுனாமியினால்.
பறவைகள் எல்லாம் அறிந்துமுன்னால்
உறவுகளோடு பறந்தன தன்னால்.

இயற்கையோடு இசைந்து வாழும்
இயல்புயென்றும் இனித்து நாளும்
ஆதிமாறா ஐந்தறி வாளும்
மேதகாறா மெய்நெறி கூறும்.

கிடைப்பது உண்டும் கிரமங்காக்கும்
அடைவது கண்டும் அரவம்நீக்கும்.
உடைப்பது ஒன்றும் உணர்விலில்லை.
படைப்பது கொன்றும் பயமறிவில்லை.

வயிற்றுக்குத் தேடும் வாழ்க்கைதான்
இயற்றுக்குக் கூடும் ஏற்கைதான்.
உடமை யென்றும் ஏதுமில்லை
கடமை மிஞ்சும் தீதுமில்லை.

இயல்பில் இணைந்தால் எதிர்வினையில்லை.
இயற்கை இழந்தால் இயக்கமில்லை.
வியந்தது விழைந்தால் சாதகமில்லை.
பயின்றது புரிந்தால் பாதகமில்லை.

கொ.பெ.பி.அய்யா.