Saturday, 20 June 2020

வேண்டாம் சீனப்பொருள்.

ஊராசை கொண்டசீனப் பேராசை,
ஆராதோ அடங்காதோ--சீனம்
நேர்ந்த மொத்தமும் தீர்த்தயிது:
வீரஞ்சலி காணிக்கை.

வீரம் விளையும் விதைகளைத்தான்
ஈரந்தழையப் புதைத்தோம்--பாரதத்
தீரம் விழித்து எழுந்திடத்தான்
சீனன் உசுப்பிவிட்டான்.

வேண்டாம் சீனப்பொருள்
தீண்டலும் பாவமே--அவன்
விடும் மூச்சும் விசப் பூச்சி
தொட்டாலும் போச்சு.

வஞ்சம் இல்லா இந்தியத்தாய்
வெஞ்சினங் கிளறினான்--இனியும்
எஞ்ஞனம் தப்புவான் நஞ்சகன்
மிஞ்சுவனோ சீனனாய்!

சீனாவுக்கு வக்க லாத்தோ!
வீணரிங்கு துரோகியர்--இடுக்கில்
தானா வளந்த இழிவவரோ!
தாயிலா கழிவவரோ!

இந்தியன் போலும் வேசமோ!
சந்ததியர் சீனாவோ--சிலர்
அடிமை  ஆகினர் சீனனுக்கோ!
குடிமையவர் இந்தியரோ!

இதயம் இல்லா விலங்கினம்
எதையுமே செய்யுமே--சீனக்
கதையதும் பதை பதைக்கும்
வைரசே தானவன்

சமத்துவ சமூக சித்தாந்தம்
சர்வாதி காரமோ--சீன
ஊடக மெல்லாம் கிளிகளோ!
தானாடா மொழிகளோ!

ஒற்றைக் குடைகீழ் உலகாள
வித்தை கொரோனாவோ--பூமி
சப்தம் ஓய்ந்தபின் சீனாவும்!
மட்டுந்தான் வாழுமோ!

நன்றி கெட்ட சீனப்பன்றி
கண்டதோ பகைமை--உலகம்
ஒன்று பட்டதும் அவசரம்
வென்றதும் மனிதறம்.

தோற்றுப் போன சர்வாதிகாரம்
நீர்த்துப் போனது--உலகம்
ஏற்றுக் கொண்ட சனநாயகம்
எங்கும் மலர்ந்தது.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 19 June 2020

வீரனாய் விலகியிரு.

வீரனாய்  வீட்டிலே விலகியிரு.
சூரனாய் மூஞ்சிக்கு கவசமிடு.
தனிமை தானது ஆயுதம்:
தனக்குள் ஆனது சூலாயுதம்.

தன்னைத் தானே காப்பதுவும்,
தன்னில் வலிமை சேர்ப்பதுவும்,
மனிதர் பிறர்நோய் தடுப்பதுவும்:
தனிமை விரதம் தான்கவசம்.

கொரனா கொடிய நோய்க்கிரிமி,
இருமலில் வெடிக்கும் தீய்ப்பரவி.
கைகள் தானது தொடர் தேடல்;
வாய்கள் ஒன்பதும் நுழைவாசல்.

கைகள் சுத்தம் கறை கழுவு.
மெய்கள் முற்றும் நிறை முழுகு.
உள்ளும் உடலும் பிழை விலக்கு.
சொல்லும் செயலும் நலம் பழக்கு

தொற்றாத ஒட்டாத இடைவெளியே:
செத்தாகக் கொரனா தொடர்முறிவே!
கிட்டவே கொஞ்சநாள் தவநெறியே,
கட்டாயம் மிஞ்சுவோம் புவிநிறைவே!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 18 June 2020

வாடகை மூளை.

கொரனாவின் அட்டகாசம் குலைநடுங்கச் செய்யுது.
வரலாறாய் தாயரசு போராடி முந்துது--ஆனால்
சிரித்துக் கூடி சிலதுகள் ஓரம் ஓடி ஓதுங்குது.
சொறிஞ்சு நின்னுதூரமே களங்காண அஞ்சுது..

நாவளரும் புற்றால் நல்லசொல் பேசாது.
தீவளரும் சொல்லால் பொல்லது கூசாது
வாடகை மூளையால் உள்ளது தோணாது
கூடாரம் காலியானால் எல்லாமே வீணது.

Tuesday, 9 June 2020

மனிதம் மறப்பதோ!

நம்மால் எதுவும் முடியா தில்லை மனிதா,
நன்னாள் பொழுதும் விடியா தில்லை இனிதா.
தானே அதுவே  செத்துப்போகும் கொரனா.
நாமே விலகி பழகி வாழ்ந்தால் நலமே!.

பாரா தென்ன பழகா தென்ன நோவா!
தீரா தென்ன தெளியா தென்ன நோயா!
காலம் மாறும் கோலம் போன்றே கொரனா:
தானே மாறும் நோயும் தீர்ந்தும் நலமே!.

நோயைக் கூட காசாய் மாற்றும் ஆவி,
தாயைக் கூட  வாயால் ஏய்க்கும் பாவி.
வீணில் ஆய்ந்த நாசந் தானோ கொரனா:
மேனி கூசா வேசிச் செயலிது நலமோ!.

ஆறறி வாண்டு வாழ வாழ்ந்தால் மனிதன்.
ஏழறி வூன்ற தொலைத்தா யேனடா மனிதம்?
செயற்கையோ திமிரோ செய்வினை கொரனாவோ!
இயற்கையோ இறைவனோ மறக்கலும் நலமோ!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 7 June 2020

தலைமுறை நேத்திரமே!

தமிழ் மகள் நேத்திராவே!

தமிழ் மகள் நேத்திராவே--புது
தலை முறை நேத்திரமே--கனி
உதிர்காலம் பின்னாலே--ஏழை
எதிர்காலம் உன்னாலே.

பாடு பட்ட கோடியதும்--நீ
தேடுங் கல்வி நாடியதும்--நெஞ்சம்
மூடித் தானே ஈந்தாயோ--மகளே
வாடும் வயிறு ஆய்ந்தாயோ!

கோடி கோடி சேர்த்தாலும்--பத்து
மாடி கூடி வாழ்ந்தாலும்--வேறு
பெருமை உண்டோ பிறந்ததில்--ஏழை
திருமை கண்டாய் நிறைந்ததில்.

மதுரை கண்ட பெருமையாம்-கொரனா
எதிர்க்க நின்ற சிறுமியாம்--பல
இலட்சம் என்ன நிச்சயம்--கருணை
உச்சம் கொண்டாய் இலட்சியம்.

முடி திருத்தும் தொழிலாளி--மனிதம்
படி உயர்த்தும் முதலாளி--நல்ல
தந்தை மோகன் பேராள--உந்தன்
சிந்தை தாகம் தமிழ்கூறும்.

தமிழாள பிறந்த நீ--உயர்
தமிழர்கு அமுதம் நீ--காலம்
ஏங்குகிற வாழ்வு நீ--புகழ்
ஓங்கிநீள வாழ்க நீ.

(பொருள்:-நேத்திரம் --கண்)

கொ.பெ.பி.அய்யா.