Wednesday, 25 December 2013

இராமசாமி

இராமநாதசுவாமி.

இராமநாத சுவாமியை
நாமமிட்டு சேவிக்க
சேமமே நாளெல்லாம்.
ஜெயமாகும் யாவுமே!

அமைதிக்கடல் காவலில்
அமைந்திருக்கும் நாதனே!
அருகிருக்க ஈழமோ!
ஆரடித்தும் வீழுமோ!!

ஓடிக்கோடி தீர்ததங்கள்
உள்ளாடி வந்திட்டோம்!
ஓடாதோ துயரங்கள்!
ஒழியாதோ பகைமைகள்!

அலையாடும் ஆழியே!
அடக்கி  வைத்த சாமியே!.
வலையாடும் மீனவர்க்கோ
வருமின்னல் நியாமோ!

ஈழமகள் சீதையே
இலங்கனிடம் மீட்கவே
போராடி வென்றோனே!
புதுஈழம் ஏற்று நீ!!

காலன் பஜ்ஜே வீழ்ந்தானோ!
ஈழமகள் மீண்டாளோ!
பாலமிட்டும் தமிழோடு
பண்டுறவு கொண்டாளோ!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment