Friday, 18 September 2020

பொறுமையுடன் வாழ்க!

பொறுமையுடன் வாழ்க

பிழைக்கத் தானே  உலகம்.
உழைக்கத் தானே  உடலும்.
கவலைக் கென்ன தேவை.
கவனம் பண்ணு வாழ்வை.!

தன்பலம் எழுப்பிடு.
பின்புலம் மறந்திடு.
வெறும் பேச்சு விலக்கிடு.
பொறுப்பாச்சு புறப்படு.

வரவினை நினைவிடு.
செலவினைக் கணக்கிடு.
வீணான ஆடம்பரம்.
தானாளும் சங்கடம்.

திட்டமாய் அடியெடு.
எட்டுவதைக் குறியிடு
கிடைப்பதில் நிறைந்திடு.
அடைவுக்குள் அளவிடு.

நிலையினை உணர்ந்திடு
விலையினை தேர்ந்திடு
கடன்படாக் கரந்தொடு.
உடன்படு வரம்பொடு.

பெருமைக்கு மாவிடிப்பு.
வறுமைக்குள் மூழ்கடிப்பு.
பொறுமையுடன் வாழ்வது.
அருமையது தேர்வது.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 14 September 2020

தமிழன் வாழ்வான்.

பச்சைத்தமிழன் வாழ்வான்!

எல்லாம் எனக்குத் தெரியும்
என்றே தானே அலைவான்.
மெய்யுமிங்கே அறியாமல்
அய்யோவெனப் போவான்!

பிறரைப் படிக்கத் துணியாதான்
தன்னை வளர்க்கமாட்டான்
பிறவிப் பயனுமடையாமல்
பேதையாகச் சாவான்.

மாற்றாரையும் உணராதான்
மனிதம் நலமே பழகாதான்
சுற்றாரெவரு மில்லாமல்
அனாதையாக மாழ்வான்.

இயற்கை மகிமை புரியாதான்
இறையினருளை உணராதான்
செயற்கை கவரும் மயக்கத்தில்
சிக்கித்ததானே மாய்வான்.

உயிர்கள் போற்றா எவனுமே
மயிரினுங் கேவலமாவானே.
பயிரும் வாடப் பொறுப்பானோ
பச்சைத்தமிழன் வாழ்வானே!

கொ.பெ.அய்யா.

Saturday, 5 September 2020

மிச்சமென்ன?

பதவி மேலே பதவி ஏறி
பணம் மட்டுந் தானே குறி--ஒருநாள்
பாடை யிலே சவ்வாரி

Monday, 31 August 2020

நம்பிக்கை.

நம்பினால் நம்புங்கள்!

என்னாலிது முடியுமென
எண்ணித் துணிந்தும்--பின்
என்னதான் நேருமென
பின்னித் தயங்காதும்,
முன்னேற முயல்வதும்;
நம்பிக்கை.

அன்னாளில் எவரோ
சொன்னாரென்றே-ஐயோ
தன்னில் நம்பாது
முன் முயலஞ்சியும்,
பின்தங்கி மயங்குவதும்;
பேதமை..

இறைவன் என்பவன்
இருப்பானோ!--அவன்
இருந்தால் என்னைப்
பொறுப்பானோ வென,
இருவேறு ஐயமும்,
தெளியாமை.
.
இதிலெது சரியென்று
வாதிட முனைந்து-அதன்
பதிலுக்குப் பதிலாய்
சாட்சிகள் புனைந்தும்,
தீர்வதும் தானாம்,
அறிவாகும்..

எவரெவர்க்கு சரியது
எதெது மதித்து --அதை
அவரவர்க்கு உரியது
அதுவென சகித்தும்,
இயல்வாய் வாழ்வதும்,
நன்மையாம்.

கொ.பெ.பி.அய்யா

Wednesday, 26 August 2020

கவிததையோ!கற்பனையோ!

கவிதை ஒன்று எழுதினேன்...
காட்டிக் காட்டி மொழிகிறேன்.
கருத் தென்ன சொல்வரோ!
கூட்டில் என்னைக் கொள்வரோ!

வடிக்கும் அற்புதச் சிலையோ!
செதுக்கும் சிற்பக் கலையோ!
கைகளில் வளர்ந்த அழகோ!
பொய்களில் மலர்ந்த கவிதையோ!

கருத்தைத் தேடுவனல்ல அறிஞன்.
கருத்தை விதைப்பவன் கவிஞன்"
உருவாக்கப் படுவனல்ல ஞானி:
பிறப்பால் கவிஞனும் விஞ்ஞானி.

கருத்து  வடிக்கப்படுவது பாட்டு,
பாட்டு செதுக்கப்படுவது கவிதை.
பொருளும் இசையும் அழகு,
எட்டும் இலக்கியம் பழகு!.

சிலையோ கலையோ சிற்பமோ!
இலக்கின் நயமோ கற்பனையோ!
இரசனை அனுபவப் பொருளோடு:
உரையாடுங் கவிதை உயிரோடு.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 18 August 2020

ஆராய்ச்சி மணி.

ஆராய்ச்சிமணி!

மனுநீதிச் சோழமன்னன்
பசுவுக்கும் நீதி சொன்னான்.
ஆராய்ச்சி மணி ஓசை
நேராட்சி நம்பிக்கை!.

குற்றஞ் செய்தோன் மகனாயினும்
சுற்றம் பாராது நீதி செய்தான்.
பாலவயதுக் காரணமும்
பரிந்துரைக்க வில்லையே!.

பதினெட்டுங் குறைந்தானென
விதியவனுக் குதவுமென்றால்!
வயதுங்கூடக் குற்றஞ்  செய்ய
வாய்ப்பளிக்கக் கூடுமன்றோ!

சாட்சிகள் வலுவானாலே
சட்டங்களும் தண்டிக்கும்.
சாட்சியிருந்துஞ் சலுகையாலே
சட்டந் தர்மம் விலகலாமோ!

தில்லிகண்ட கொடுமையிலே
சொல்லொண்ணா வன்மைகளை
செய்தவனைச் சிறுவனென்றும்
சட்டமவனை  விடலாகுமோ!

சட்டத்தையுந் திருத்தலாம்.
சண்டாளரைத் தண்டிக்கலாம்.
விடமென்றறிந்த பின்னும்.
வீட்டுக்குள் ஒளிக்கலாமோ!

கொ.பெ.பி.அய்யா.

காலைப்பொழுது.

காலைப்  பொழுது.

சின்னஞ் சிறு பொழுது,,
சேவல் கூவி எழுப்புகிறது.
கண்ணங் கருமை கரைகிறது,
கதிரவன் வரவு வளர்கிறது.

ஊதல் காற்று இதமாக,
உலாவும் கீற்று இசையாக,
குயில்கள் பாட்டும் இரசமாக
மயில்கள் ஆட்டம் வசமாக..

நனைந்தும் பனியில் மலர்களோ
நடுங்கும் இரவுடன் கலந்ததோ!
மெல்ல இருளின் போர்வையோ
கள்ளம் விலகிக் கலையுதோ!

திங்களாய் மங்களப் பூவையர்,
மஞ்ள்  பூசி நீராடி
ஞாயிறு வாசல் வரவேற்போ!
பாயிரங் கோல அணிவகுப்போ!

ஆழ்ந்த களைப்பு உறக்கம்தான்.
ஆதவன் விழித்துச் சிவந்தெழுந்தான்.
வாழ்த்தும் புல்லினம் குலவையிட:
வாழ்வின் ஆதாரம் வளர்கின்றான்..

கொ.பெ..பி.அய்யா.

Saturday, 15 August 2020

வரலாறு படைப்போம்.

வரலாறு படைப்போம்!!

பழைமைச் சாத்திரங்களை
பாடைகட்டி யேற்றுவோம்.
புதுமை ஒழுக்கங்களை
மேடையேற்றிப் போற்றுவோம்.
சிறுமைச் செலவுகளை
சிக்கனத்தில் நிறுத்துவோம்.
வறுமைப் பேய்களை
வம்சத்தை அழித்திடுவோம்.

திருமணச் சடங்குகளை
திருத்தி அமைத்திடுவோம்.
வரதட்சனைக் கொடுமைகளை
வளராது வேரறுப்போம்.
அருமை இளைஞர்களை
அறவழி பேணச்செய்வோம்.
திருவளர்ச் சீர்களை
தெளிந்துமே தொடருவோம்.

வாழுமுறைக் கல்வியை
வகையுறக் கற்றிடுவோம்.
நாளும் வரும் புதுமைகளை
நயம்பட அறிந்திடுவோம்.
காலமோடும் விரையங்களை
கணக்கிட்டுத் தெளிந்திடுவோம்.
ஞாலமெழுதும் வரலாறுகள்
நமையெழுத உழைத்திடுவோம்.

கொ.பெ.பி.அய்யா

Tuesday, 4 August 2020

கண்துயில் மல்லிகையே!

உறங்கவோ!நெருங்கவோ!

என்முகம் நான் தொடவே;
என்கரங்கள் அஞ்சுதே!
உன்னை ஏன் தழுவேனோ!
கண்துயில் மல்லிகையே!

கட்டில் ஒன்று இரண்டாகி,
தொட்டில் சென்று பரணேறி;
விளக்கொளி காவலிலே:
விழித்தேங்கல் ஆனதோ!

கல்யாணம் ஆகி யென்ன!
பள்ளியறை போயு மென்ன!
கொரோனா சொல்லுமோ!
உறங்கவோ நெருங்கவோ!

கொ.பெ.பி. அய்யா

Monday, 3 August 2020

வறுமை இனி இல்லை.

வறுமை இங்க இல்லை என்றே
பெருமை பேச செய்தது--அன்று
வளமை செய்த நதிகள் எல்லாம்
சிறுமை யாகி வறன்டது--இன்று
மறுபிறவி எடுத்துக் காவிரி
கழனியெலல்லாம் செழித்தது.

Thursday, 30 July 2020

குப்பைகளைத் தள்ளு!

அம்மாவின் செல்லம் நீ!
அப்பாவின் உள்ளம் நீ!
வீடுநாடு போற்ற நீ!
வாழ்வினை ஆற்று நீ!

விவசாயம் வாழ நீ!
அவசியம் தேடு நீ!
இயற்கையை வணங்கு நீ!
இயல்புக்கு இணங்கு நீ!

குப்பைகளை தள்ளு நீ!
ஒபுபுதல் கொள்ளு நீ!
ஒழுக்கமே ஆற்று நீ!
பழக்கமே தேற்று நீ!

அரசியல் பழகு நீ!
விரசங்கள் விலக்கு நீ!
புதுமைகள் ஆக்கு நீ!
பழமைகள் தேக்கு நீ!

வாய்மையே பழக்கு நீ!
நேர்மையே துலக்கு நீ!
தூய்மைமையை விளக்கு நீ!
சீர்மையை நிலவு நீ!

வாழ வைத்து வாழ்க நீ!
சூழ வாழ்ந்து ஆள்க நீ!
செப்பும் மொழி போற்று நீ
தப்பும் வழி மாற்று நீ!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 25 July 2020

வருவாரா மாட்டாரா!


வருவாரா மாட்டாரா--நன்மை
வரவேற்பது நம்பாடு.
தருவாரா பெறுவாரா--அவசரம்
தமிழர்நம் நிலைப்பாடு.

ஆட்சிதான் மாற்றமா--இன்று
அதுவல்ல அவசரம்.
அரசியலின் மாற்றமே--அறிவு
புரிந்தவரின் தரிசனம்.

இரஜினி என்ற நல்லவர்--மாற்று
கஜினி அல்ல சொல்லவர்.
இது தருணம் ஒன்றுதான்--மறு
முறைக் கல்ல என்பதாம்.

காந்திமகான் போலத்தான்--தூய்மை
ஏந்தியரசு ஆளத்தான்.
கட்சிக்கவர் தலைவர்தான்--தமிழ்
ஆட்சிக்கொரு இளைஞர்தான்.

காமராஜர் எம்.ஜி.ஆர்--பாமரர்
சேமங் காக்க ஆண்டனர்.
நாமறிந்த நல்லவரில்--இந்நாள்
நேயம் இரஜினி போலயார்?

இரசிக னென்ற பேரோடு--தலைவன்
இரசனைக் கென்ன புகழோடு!
அதிசயம் நிகழட்டும்--இரஜினி
எழுச்சி உன்னில் விழிக்கட்டும்.

உன்னில் விழிக்கும் எழுச்சியே--தமிழ்
மண்ணில் செழிக்கும் புரட்சியே!
தயாரானார் இரஜினியே--தமிழ்
தாயார்க்கவர் இரட்சனே!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 17 July 2020

பயம் எதற்கு கொரோனாவுக்கு!

பயம் எதற்கு கொரோனாவுக்கு!
வயப் படுவோம் நாம் நமக்கு.
புதிய பாதை தேடுவோம்.
முகக் கவசம் சூடூவோம்.

விலகி உள்ளம் பழகுவோம்.
வணங்கிக் கூப்பி அளவுவோம்.
இடை வெளிகள் விலகுவோம்
தொடுங் கைகள் கழுவுவோம்.

வெளியில் பயணம் சிக்கனம்.
குளியல் உடனே அக்கணம்.
ஆடை நாளும் துவைத்திடுவோம்.
கூடும் கூட்டம் தவிர்த்திடுவோம்.

வாயும் மூக்கும் மூடவே!
தூய கவசம் அணிவதே!
சூடிய கவசம் மூடியே,
மீறும் இருமல் விடுகவே!

வாங்கும் பொருளில் கிரிமிகள்,
தூங்கும் இரகசியம் அறிந்திடணும்;
வெய்யில் வெளியில் சிலமணிகள்:
வெய்யக் கழுவியே புழங்கிடணும்.

அரசு மருத்துவ விதிமுறைகள்,
அறிந்து நடக்கும் செயல்முறைகள்.
எமனாம் கொரோனா ஒழிந்திடுமே!
நமக்கு நாமே மருந்தாமே!

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 15 July 2020

தமிழின் விளக்கம் அழகு முருகன்.

பழிப்பதும் இழிப்பதும் எதற்கு?
அதனா லென்ன முறுக்கு!
பழிக்கவும் இழிக்கவு முன்னே
படித்ததும் தெளிந்ததும் என்னே!

தமிழின் விளக்கம் முருகன்.
தமிழின் அழகின் அருகன்.
அமுதத் தமிழின் ருசியும்--அவனை
அறிந்தால் அடங்கும் பசியும்.

கவசம் என்பது காப்பு,
அவசியம் சொன்னது கோப்பு.
துவேசம் இதிலென்ன நோக்கு--மாசு
ஆபாசம் திரித்தலை நீக்கு.

இலக்கியம் தமிழின் சொத்து.
சிலாக்கியம் தமிழினப் பற்று.
அருகதை எவர்க்குப் பழிக்க--இல்லை
விடுகதை இதுவோ அழிக்க!

அவரவர் உணர்வு அவர்க்கு.
எவரெவர் உரிமை தகர்க்க?
அருத்தம் தெளிந்தால் பழகு--மெய்மை
பொருத்தம் முறிந்தால் விலகு!

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 14 July 2020

ஒருநிலம்-ஒருகுலம்-ஒருமதம்.

பாரென்ற ஊரொன்று உலகமே!
ஊரென்ற பேரொன்று பாரதமே!
குலமென்ற இனமொன்று மனிதமே!
இயலென்ற இறையொன்று சம்மதமே!

மதமெனும் சொல்லே சம்மதமே!
பொதுவெனும் நெறியே நம்மதமே!
கீதை பைபில் குர்ரா னெல்லாம்
போதனை வாழ்வியல் ஒரு சொல்லாம்.

வேளாங் கண்ணி கிருபை மாதா,
நாகூர் நாயகம் கருணை தர்கா;
கன்னியா குமரி பகவதி உதயம்:
சன்மார்க்கம் துலக்கும் சங்கம இதயம்.

இந்து முசுலீம் கிறித்துவரும்,
சொந்தம் உறவில் ஒருகுடும்பம்.
நிறத்தால் சொல்லும் சாதியில்லை:
பிறப்பால் இந்தியர் பேதமில்லை.

நீதிகள் பழக்கும் திருமறைகள்,
வேதங்கள் விளக்கும் பொதுமறைகள்.
ஒற்றுமை அடையாளம் இந்தியம்:
பற்றிய நெறிமுறை உலகியம்.

ஒருநிலம் ஓருகுலம் ஓரினமே!
பெருமை துலங்கிடும் பாரதமே!
உலகம் ஒன்றியம் ஓரரசு
துலங்கட்டும் இந்தியப் பேரரசு.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 12 July 2020

டி.வி மூடு!

உண்ணமை யெது பொய்யெது!
உள்ட்டா வாத்தான் தெரியுது!
கழுதையை குதிரையாக்கும்--விவாத
காட்சி பாவம் டி.வி மூடு

தெருச்சண்டை நாய்க் கூச்சல்,
ஒருமையிலே பேய்ப் பாய்ச்சல்;
பலகீனர் பாலகர்கள்--வன்மை
பழகல் தோசம் டி.வி மூடு.

கூலிக் காக மாரடிக்கும்,
கூடிப் பேசி நாறடிக்கும்;
வாயாடும் வெட்டிகள்--பொழுது
வீணாப் போக்கும் டி.வி.மூடு.

எலி செத்தா தேடும் வீச்சம்.
இழிவான காக்கா கூட்டம்;
மலிவான அரசியலின்--விவாத
மேடை விரசம் டி.வி.மூடு.

நன்மைகளைப் பாராட்டியும்,
உண்மைகளைப் பேசாட்டியும்;
பொய்யெனும் வைரசை--பரவச்
செய்யும் நாசம் டி.வி.மூடு

புண்படும் விவாதப் பேச்சு,
பண்பாடு ஆகிப் போச்சோ!
உரிமைக்கும் எல்லையே--மனித
அறிவு ஆகும் டி.வி.மூடு.

பெண்களை வில்லி ஆக்கும்
தன்மை கெட்ட நாடகங்கள்
ஒப்பாரி அவலங்கள்-வீடு
ஒப்பலாமோ டி.வி மூடு.

கொலைக் குற்ற விரசங்கள்
களவு கலை நுட்பங்கள்
கண்கூசும் கொடுமைகள்-காட்டும்
காட்சி வேண்டாம் டி.வி மூடு

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 9 July 2020

அம்மாவின் வாக்கு.

நூறாண்டு காலம் கழகம் ஆளும்
அம்மாவின் வாக்கு வேரூன்றி வாழும்.
புரட்சியில் உதித்த பொன்மனக் கழகம்,
நிரந்தரம் அண்ணா தி.மு கழகம்.(நூறா)

சத்தியத் தாயின் உத்தமப் புதல்வன்,
சத்தியப் பாதையின் புரட்சித் தலைவன்;
இரத்தத்தின் இரத்தம் தமிழர் இயக்கம்-அம்மா
புரட்சித் தலைவி புதுயுகம் தொடக்கம்.(நூறா)

தொண்டன் இங்கு தலைவ னாகிறான்.
எந்தன் என்பான் இடறி வீழ்கிறான்.
வாரிசு முறையாம் சர்வாதி காரம்--என்றும்
நேராத கழகமாம்  சனநாயகம்.(நூறா)

எவரும் உழைத்தால் முதல்வர் ஆகலாம்.
எடப்பாடி உரைத்த சத்திய வாக்கதாம்.
வாணிவக் கழகம் போலிது அல்ல-தமிழ்
மானுடக் கழகம் நூறாண்டு வெல்லும்.(நூறா)

கொ.பெ.பி.அய்யா.

விவசாயி முதல்வர்.

விவசாய விவசாயி!
விழித்துணர்ந்த யோகமோ!
விவசாயம் வாழவே,
விவசாயி முதல்வரே,
அவசரம் அவசியமோ!

வாடிய பயிர்கண்டு,
வாடிடும் கருணையே,
தேடிய வழிகண்டும்;
பாட்டாளி முதல்வரே:
மீட்டினார் காவேரி.

நாடெல்லாம் நீர்நிலைகள்,
நதிபெருக்கும் பேரணைகள்,
காடெல்லாம் கழனிகள்;
கண்ணிறைந்த பசுமைகள்:
கண்டதும் தமிழகமே!

வீணாகும் வெள்ளநீர்,
தானாக செல்லும்சீர்,
ஊனப்பட்ட நதிவழிகள்;
ஆழப்பட தூரெடுத்த:
சோழனவர் பழனிச்சாமி.

விவசாய மண்டலம்,
நவதானியக் களஞ்சியம்,
பாதுகாத்த விவசாயி,
சாதித்தமிழ் முதல்வராம்
சாதித்த பழனிச்சாமி.

தொடரட்டும் தமிழாட்சி,
படரட்டும் வள(ம்)மாட்சி,
கடரட்டும் சனித்தனம்;
இடரட்டும் திரியோகணம்:
விடிந்தது விடியலே!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 5 July 2020

பசுமை இந்தியா.

முத்துக் குவியலாய் பனிமலைகள்,
மெத்தக் கொடைகளாய் அரணிலைகள்;
கத்தும் கடலலைகள் மிரட்டவே:
கெத்துப் பரதப்படை அணிவகுப்பே!

எதிரி யெவருண்டோ எதிர்க்கவே!
பதறும் பலங்கொண்டோம் உலகிலே.
ஓருயிர் இந்தியர் ஒருங்கிணைவே!
பாரினில் நின்றதார் அருஞ்சிறப்பே!

மொழி பல்லாயிரம் ஒரு குரலே!
இனம் எல்லாமே ஒரு குலமே!
மதங் கொள்ளாத மதமறங்கள்:
விதஞ் சொல்லாத இந்தியமே!

நதிகள் பாயுங் கடைமடைகள்,
விதிகள் மேவும் பொதுவுடைமை;
பசுமை இந்தியா நடைமுறைகள்:
வலிமை என்பதே படைநிரைகள்.

ஆலைகள் நிறம்பும் பாரதம்.
வேலைகள் வழங்கும் பாரிடம்.
ஆயுதம் வேறுண்டோ வெல்லவே!
ஆனதில் மாறுண்டோ வல்லரசே!

கொ.பெ.பி அய்யா.

Friday, 3 July 2020

உன்னுயிர் நாங்கள்.

எம்மை நீ தூங்க வைக்க,
உன்னை நீ காவல் வைத்தாய்.
நம்பிக்கை உன் நிழலே--எமது
நிம்மதிக்கு ஆறுதலோ!

பனிமலை மீதில் நீ,
பகலிரவு எண்ணாமல்;
எம்முயிரை உன்னுயிராய்:
எண்ணி நீ காவல் செய்தாய்.

தாயாக விழித்திருந்து,
தவமாக தனித்திருந்து;
உன்னுயிரை பணயம் வைத்து:
மன்னுயிரை வாழ வைத்தாய்.

இந்தியாவே குடும்பம் என
சந்ததிக்கு சாட்சி யானாய்.
உன்னுயிரே எம்முயிரே
இன்னுயிராய் உயிர்க்கிறதே!

எம்மில் நீ வாழ்கிறது,
இதயம் சொல்லி துடிக்கிறது.
நூறு முப்பது கோடியுயிர்:
சேரத் தப்பாது பேடியுயிர்.

தாயை பழிப்பவன்,
நாயினுங் கீழாவான்.
தாய்நாடு காப்பவன்
சேயெனும் தாயாவான்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 1 July 2020

எம்ஜிஆரு.

எம்ஜியாரு(குழந்தைப் பாடல்)

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

தமிழ் பேசும் இதயங்களில்
கனியாகத் தானே—அந்தக்
கனியோடு பசுமையான—இரட்டை
இலையாகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

சின்னச் சின்னப் பிஞ்சான
எண்ணங்களில் தானே-சத்து
அன்னமிட்ட நெஞ்சமான--கல்வித்
தந்தையாகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

ஏழை அவன் சிரிப்பினிலே
இறைவனாகத் தானே-என்றும்
வாழும் வழி காந்தியான--குடிசை
ஒளிவிளக்காகத் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

தர்மனாக வாழ்ந்த தமிழ்
தங்கத் தலைவரு—வாழ்வில்
தனக்கென வாழாத_கண்ட
கர்ணனவர் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

புரட்சி எனும் சொல்லுக்கான
புகழ் அவர்தானே—தமிழில்
வறட்சி எனும் சொல்லொழித்த
வாத்தியார் தானே.

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

எம்ஜியாரே சினிமா
என்பதுதே நிசமா--என்றும்
சூப்பர் ஸ்டாரு
என்பதுதும் எம்ஜிஆரு..

எம்ஜியாரு எம்ஜியாரு--அவர்
எங்கே வாழ்கிறாரு?—தமிழ்
எங்கே வாழ்கிறதோ—அவர்
அங்கே வாழ்கிறாரு.

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 20 June 2020

வேண்டாம் சீனப்பொருள்.

ஊராசை கொண்டசீனப் பேராசை,
ஆராதோ அடங்காதோ--சீனம்
நேர்ந்த மொத்தமும் தீர்த்தயிது:
வீரஞ்சலி காணிக்கை.

வீரம் விளையும் விதைகளைத்தான்
ஈரந்தழையப் புதைத்தோம்--பாரதத்
தீரம் விழித்து எழுந்திடத்தான்
சீனன் உசுப்பிவிட்டான்.

வேண்டாம் சீனப்பொருள்
தீண்டலும் பாவமே--அவன்
விடும் மூச்சும் விசப் பூச்சி
தொட்டாலும் போச்சு.

வஞ்சம் இல்லா இந்தியத்தாய்
வெஞ்சினங் கிளறினான்--இனியும்
எஞ்ஞனம் தப்புவான் நஞ்சகன்
மிஞ்சுவனோ சீனனாய்!

சீனாவுக்கு வக்க லாத்தோ!
வீணரிங்கு துரோகியர்--இடுக்கில்
தானா வளந்த இழிவவரோ!
தாயிலா கழிவவரோ!

இந்தியன் போலும் வேசமோ!
சந்ததியர் சீனாவோ--சிலர்
அடிமை  ஆகினர் சீனனுக்கோ!
குடிமையவர் இந்தியரோ!

இதயம் இல்லா விலங்கினம்
எதையுமே செய்யுமே--சீனக்
கதையதும் பதை பதைக்கும்
வைரசே தானவன்

சமத்துவ சமூக சித்தாந்தம்
சர்வாதி காரமோ--சீன
ஊடக மெல்லாம் கிளிகளோ!
தானாடா மொழிகளோ!

ஒற்றைக் குடைகீழ் உலகாள
வித்தை கொரோனாவோ--பூமி
சப்தம் ஓய்ந்தபின் சீனாவும்!
மட்டுந்தான் வாழுமோ!

நன்றி கெட்ட சீனப்பன்றி
கண்டதோ பகைமை--உலகம்
ஒன்று பட்டதும் அவசரம்
வென்றதும் மனிதறம்.

தோற்றுப் போன சர்வாதிகாரம்
நீர்த்துப் போனது--உலகம்
ஏற்றுக் கொண்ட சனநாயகம்
எங்கும் மலர்ந்தது.

கொ.பெ.பி.அய்யா.

Friday, 19 June 2020

வீரனாய் விலகியிரு.

வீரனாய்  வீட்டிலே விலகியிரு.
சூரனாய் மூஞ்சிக்கு கவசமிடு.
தனிமை தானது ஆயுதம்:
தனக்குள் ஆனது சூலாயுதம்.

தன்னைத் தானே காப்பதுவும்,
தன்னில் வலிமை சேர்ப்பதுவும்,
மனிதர் பிறர்நோய் தடுப்பதுவும்:
தனிமை விரதம் தான்கவசம்.

கொரனா கொடிய நோய்க்கிரிமி,
இருமலில் வெடிக்கும் தீய்ப்பரவி.
கைகள் தானது தொடர் தேடல்;
வாய்கள் ஒன்பதும் நுழைவாசல்.

கைகள் சுத்தம் கறை கழுவு.
மெய்கள் முற்றும் நிறை முழுகு.
உள்ளும் உடலும் பிழை விலக்கு.
சொல்லும் செயலும் நலம் பழக்கு

தொற்றாத ஒட்டாத இடைவெளியே:
செத்தாகக் கொரனா தொடர்முறிவே!
கிட்டவே கொஞ்சநாள் தவநெறியே,
கட்டாயம் மிஞ்சுவோம் புவிநிறைவே!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 18 June 2020

வாடகை மூளை.

கொரனாவின் அட்டகாசம் குலைநடுங்கச் செய்யுது.
வரலாறாய் தாயரசு போராடி முந்துது--ஆனால்
சிரித்துக் கூடி சிலதுகள் ஓரம் ஓடி ஓதுங்குது.
சொறிஞ்சு நின்னுதூரமே களங்காண அஞ்சுது..

நாவளரும் புற்றால் நல்லசொல் பேசாது.
தீவளரும் சொல்லால் பொல்லது கூசாது
வாடகை மூளையால் உள்ளது தோணாது
கூடாரம் காலியானால் எல்லாமே வீணது.

Tuesday, 9 June 2020

மனிதம் மறப்பதோ!

நம்மால் எதுவும் முடியா தில்லை மனிதா,
நன்னாள் பொழுதும் விடியா தில்லை இனிதா.
தானே அதுவே  செத்துப்போகும் கொரனா.
நாமே விலகி பழகி வாழ்ந்தால் நலமே!.

பாரா தென்ன பழகா தென்ன நோவா!
தீரா தென்ன தெளியா தென்ன நோயா!
காலம் மாறும் கோலம் போன்றே கொரனா:
தானே மாறும் நோயும் தீர்ந்தும் நலமே!.

நோயைக் கூட காசாய் மாற்றும் ஆவி,
தாயைக் கூட  வாயால் ஏய்க்கும் பாவி.
வீணில் ஆய்ந்த நாசந் தானோ கொரனா:
மேனி கூசா வேசிச் செயலிது நலமோ!.

ஆறறி வாண்டு வாழ வாழ்ந்தால் மனிதன்.
ஏழறி வூன்ற தொலைத்தா யேனடா மனிதம்?
செயற்கையோ திமிரோ செய்வினை கொரனாவோ!
இயற்கையோ இறைவனோ மறக்கலும் நலமோ!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 7 June 2020

தலைமுறை நேத்திரமே!

தமிழ் மகள் நேத்திராவே!

தமிழ் மகள் நேத்திராவே--புது
தலை முறை நேத்திரமே--கனி
உதிர்காலம் பின்னாலே--ஏழை
எதிர்காலம் உன்னாலே.

பாடு பட்ட கோடியதும்--நீ
தேடுங் கல்வி நாடியதும்--நெஞ்சம்
மூடித் தானே ஈந்தாயோ--மகளே
வாடும் வயிறு ஆய்ந்தாயோ!

கோடி கோடி சேர்த்தாலும்--பத்து
மாடி கூடி வாழ்ந்தாலும்--வேறு
பெருமை உண்டோ பிறந்ததில்--ஏழை
திருமை கண்டாய் நிறைந்ததில்.

மதுரை கண்ட பெருமையாம்-கொரனா
எதிர்க்க நின்ற சிறுமியாம்--பல
இலட்சம் என்ன நிச்சயம்--கருணை
உச்சம் கொண்டாய் இலட்சியம்.

முடி திருத்தும் தொழிலாளி--மனிதம்
படி உயர்த்தும் முதலாளி--நல்ல
தந்தை மோகன் பேராள--உந்தன்
சிந்தை தாகம் தமிழ்கூறும்.

தமிழாள பிறந்த நீ--உயர்
தமிழர்கு அமுதம் நீ--காலம்
ஏங்குகிற வாழ்வு நீ--புகழ்
ஓங்கிநீள வாழ்க நீ.

(பொருள்:-நேத்திரம் --கண்)

கொ.பெ.பி.அய்யா.

Monday, 25 May 2020

காந்தி கண்ட கனவென்ன!

அக்காலம் மன்னராட்சி,
இக்காலம் மக்களாட்சி.
வருங்காலம் என்னாட்சி?
வாரிசுகள் வந்தாச்சி.

மனம் வீழும் களமானால்
பணம் ஆளும் நிலமாகும்.
உரிமையை விற்ற பின்னே
அடிமையே அவர் பின்னே!

விலைக்கு வாங்கும் அதிகாரம்:
வறுமைக்கு நீட்டுமா உதவிக்கரம்?
அரசியலும் வணிகம் ஆச்சோ!
பொது வாழ்வும் பொய்யாச்சோ!

உரிமை பெற்றும் அடிமையோ!
பெருமை என்ன உரிமைக்கோ!
விதைத்த உயிர் வீணாச்சோ!
சிவத்த நிலம் தரிசாச்சோ!

கட்சிகளை கலைக்கச் சொன்ன
காந்தி கண்ட கனவென்ன!
சுயேச்சைகள் தழைக்கும் என்றால்!
சுதந்திரம் நிலைக்கும் என்றார்.

எண்ணி மீண்டால் குடியாளும்.
பம்மிக் கொண்டால் முடியாளும்.
மக்கள் பயம் பொதுவானால்
தக்க நேரம் இதுவாகும்,

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 24 May 2020

வழிவழி தலைமுறை.

சுயமாய் சிந்தனை அறிய மாட்டான்,
பிறரின் நிந்தனை உணர மாட்டான்;
எவனோ ஒருவன் தூண்ட லிலே:
இவனே படுவான் தூண்டி யிலே.

சும்மா தானும் இருக்க மாட்டான்,
சொன்னால் கேட்டும் அடங்க மாட்டான்,
தன்னால் தானே தான் சுட்டு:
புண்ணாள் ஆவான் கேடு கெட்டு.

நல்லதும் தானே எண்ண மாட்டான்,
நன்மை செய்யவும் விட மாட்டான்;
தடால் ஒன்றைப் போட் டுடைப்பான்:
தன்னால் இருப்பைக் காட்டி டுவான்.

வளர்வோர் பிறரை வளர்க்க மாட்டான்,
கழலும் மூத்தோரை தடுக்க மாட்டான்;
உரிமை எல்லாம் பறித்து வைப்பான்:
அடிமைகள் மட்டும் இருத்தி நிற்பான்.

நல்லார் கூட்டம் சேர்க்க மாட்டான்,
வல்லார் ஏற்றம் வாழ்த்த மாட்டான்;
எல்லாம் நானே மேல் என்பான்:
கொள்கை தானே கோள் செய்வான்.

வழிவிடத் தகுதி பார்க்க  மாட்டான்,
வழிவழி முடிக்க ஏற்க மாட்டான்;
தலைவன் வழியே நான் என்பான்:
தலைமுறை தொடர வழி செய்வான்.

கொ.பெ.பி.அய்யா.

கல்லடி!

உச்சத்திற்கே கல்லடியா!

சொன்னாலும் கேவலம் ,
சொல்லாட்டி சாவலாம்.
என்னடா அரசியவ்--இது
சின்னப் புள்ள சகவாசம்.

கூரை மேல சோறு போட்டா,
கூடுவதும் ஆயிரங் காகா;
மேடை மேலே காசு போட்டா:
போடும் கூச்சல் விவாதப் பேச்சா!

அரை வேக்காடு அரசியல் பேச்சு:
தரம் பார்க்கா இழிவியல் ஆச்சு.
நரிக் கூட்டப் பஞ்சா யத்து
நெறியாளர் கேளிக் கூத்து.

ஜனநாயக நாட்டில் இங்கே
ஜனாதன தர்மம் எங்கே?
உச்சத்திற்கே கல்லடியா?
மிச்சத்திற்கு என்னடியோ!

கூசுதே மேனியெல்லாம்:
பேசாதீர்  விவாதம் இன்னும்.
காணொலி மறையட்டும்.
வானொலி நிறையட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

சுயமாக யோசி!

சுயமாக யோசி.

சொந்தங்களுக்குள் ஆலோசி.
அந்நியர்களின் ஆலோசனையால் புண்ணியம் இல்லை.

விலைக்கு வாங்கும் ஆலோசனை வளர்ச்சிக்கு உதவாது.பயிற்சிக்கும்
பலன்தராது.

அந்நியர் ஆலோசனையில்
கவரச்சி இருக்கும்
மலர்ச்சிசெய்யாது.
பொய்யிருக்கும் மெய்யிருக்காது.

கொ.பெ.பி.அய்யா.