Wednesday, 25 December 2013

காவிரித்தாய்.

தமிழகம் தலை நமிர்ந்தது.

தமிழக  அரசே-
நின்
தன்னிகரில்லா தன்மானம்
வென்றது.
இனி
காவிரித்தாய் கரை
நிறப்பி வருவாள்.

அரசிதழ் வெளியீடு
அபாரச் சாதனை.

காவிரி மேலாண்மை
தேவைக்குத் தீர்வு செய்யும்.-
பெரும்
முயற்சிகளே
திருவினையாச்சு.

நஞ்சை நனையட்டும்.
நாடு செழிக்கட்டும்.
தஞ்சை சேறானால்தான்
தமிழுக்குச் சோறுண்டு.

வேளாண்மை வாழட்டும்.
விலைவாசி குறையட்டும்.
தமிழகமே
இன்று நீ
தலை நிமிர்ந்தாய்.

அம்மா என்றால் சும்மாவா!
அசத்தி விட்டாயம்மா.
பின்னி விட்டாயம்மா.
பிறந்த நாள் பரிசாக.

வாழ்க நீ பல்லாண்டு.    

கொ.பெ.பி.அய்யா.     



No comments:

Post a Comment