Tuesday, 27 January 2015

apps ஆப்புகள்.

apps ஆப்புகள்

உலகம் கையிலே விவரம் பையிலே
உலவும் appsகள் உளவும் செயலிலே
நிலவும் வன்மைகள் நிசத்தின் பதிவுகள்
களவும் கையுமாய் மாட்டும் விதத்திலே.

சென்னையில வழிப்பறி
பெண்ணிடம் பகல் கொள்ளை
தட்டிப்பறிக்கிறான் தாலியை
கெட்டிக்காரி பெண்ணொருத்தி
கைபேசியில் பதிவு செய்கிறாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில்
வண்ணமாய்க் காட்சிகள்
பற்றிய தீயாக
பரவிட உலகமெலாம்
சுற்றி வளைத்தது
நற்றமிழ் காவல்துறை.
பற்றுவோம் இவ்வழி
பாவியரை படம் பிடிக்க.

ஊழியம் செய்வதற்கு
ஊதியம் பெறுபவர்க்கு
ஊழலாம் நோய் அதற்கு
ஊசிபோட apps இருக்கு.

சாலைகளில் மாதக்கடைசிகள்
காலை மாலை வேலைகள்
சோதனைச் சுங்கங்கள்
சோதிப்பதோ சட்டைப்பைகள்.
ஒருநூறில் உரிமங்கள்
இருநூறில் இன்சூரன்ஸ்கள்.

மாடியில் மறைந்திருக்கும் appsகள்
ஓடிவரும் உனக்கான ஆப்புகள்
பதிவாக்கிப் பரப்புதெங்கும் மாப்புகள்.
விதிதூக்கி விரட்டுதெங்கும் காப்புகள்

சட்டைப்பை ஒளித்திருக்கும் சாட்டைகள்--ஊழல்
கெட்டப்பை கிழித்தெடுக்கும் வேட்டைகள்
வாட்சப் வைபர் கைப் appsகள்
கேச்சப் சைபர் வைப் ஆப்புகள்.

அங்கங்கு அலுவலக மேசைகள்
எங்கும் நிறைந்ததாய் ஊழல்கள்.
சங்கம் ஊதட்டும் appsகள்
மங்கி ஒழியட்டும் கையூட்டுகள்.

இளைஞர் கைகளில் appsகள்-ஊழல்
களையக் கிளிக்குங்கள் காட்சிகள்.
பகிர்ந்து பரப்புங்கள் உண்மைகள்
அகிலம் நிரப்பட்டும் நன்மைகள்.

ஒழிக ஒழிக என்றால் ஒழியாது--இளைஞர்
விழித்தாலொழிய விடியாது.
தொழில்தன் நுட்பம் துணையாலே
ஒழிப்போம் ஊழல் செயலாலே.

கொ.பெ.பி.அய்யா.








Monday, 19 January 2015

அன்னை மொழி.

புதிய உலகம்.!

முன்னை மொழியே தமிழே வாராய்
அன்னை வடிவே அமுதே வாராய்.
பின்னை உலகின் வழியே வாராய்
வின்னை அலகின் ஒளியே வாராய்.

எதிர்ப்போர் செருக்கை ஒடுக்கி வாராய்.
மதிப்போர் சிறப்பை மிடுக்கி வாராய்.
அதிரும் எட்டுத் திக்கும் வாராய்.
நதிகள் இட்டுத் தெற்கே வாராய். ,

இளைஞர் நிறைந்தோம் தலையே வாராய்.
அலையென விரைவோம் விளைவே வாராய்.
ஊழல் களையும் ஊழியம் வாராய்.
வேளை இதுவென விதியே வாராய்.

ஆணை செய்யவே அவசரம் வாராய்.
ஆவன எய்யவே அவசியம் வாராய்.
சேனை இளைஞரை செலுத்திட வாராய்.
தேவை எழுச்சியை உணர்த்திட வாராய்.

காலம் மாற்றும் காட்சியே வாராய்..
கோலம் ஏற்றும் ஆட்சியே வாராய்..
வாலைக் குமரர் தேற்சியே வாராய்..
நாளைச் சுமையின் ஏற்பே வாராய்.

சிந்தனை வளமே செழிக்க வாராய்.
தந்தனை நலமே தழைக்க வாராய்..
உந்தனை உயிரே உணர்வே வாராய்.
வந்தனை புதிய உலகே வாராய்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 7 January 2015

விழியறியா வழி.

விழியறியா வழி

விளங்காதவனை விளங்க வைப்பது வீண்வேலை.
விளங்கியவனை விளக்குவது வெட்டி வேலை
விளங்குபவனை விளக்கினால் அறிவு  வேலை.
விளங்கி நீ விளக்கினால் நல்ல வேலை.

ஆகாத காரியங்கள் தொடர வேண்டாம்
அறைகுறை ஞானம்கொண்டு தொடங்க வேண்டாம்.
ஆத்திரத்தில் அவசரமும் கொள்ள வேண்டாம்.
நேத்திரம் மூடிக்கொண்டு பயணம் வேண்டாம்.

பாத்திரம் அறியாமல் இணைவ தெப்படி?
வாத்தியம் பழகாமல் முனைவ தெப்படி?
வேகாத கல்லை ஏனோ வேக வைப்பாய்
வேகுமுன் பருப்பை ஏனோ இறக்கி வைப்பாய்.

இருமுனை தொடாத காதல் எதற்கு?
மறுமுனை அறியாத ஏவல் எதற்கு?
திருப்பங்கள் செய்யாமல் திருப்பு முனையா?
விருப்பங்கள் நிகழாமல் விளைவும் வினையா?

ஆகும் என்றறி வதையே ஆய்ந்து தொடு
ஆவதையும் அளந்தறிந்து தேர்ந்து எடு
விழியறியா வழிகளையும் விலக்கி விடு.
மொழியறிந்து செயல்வினை முடுக்கி நடு.

கொ.பெ.பி.அய்யா.