Saturday, 28 December 2013

வாழ்க செந்தமிழ்!

வாழ்க செந்தமிழ்!

பெரிய மனத்தாள் தெறிய குணத்தாள்
அரிய இனத்தாள் செறிய தனத்தாள்.!
நெறியெனக் கொண்ட நித்திய தமிழே!
உரியன மொழிந்து உயர்ந்தாய் வாழி!

விரிந்த எழுத்து நந்த வனத்தில்
புரிந்து தேடிக் கொண்ட மணத்தில்.
குறியாய் கவனம் கொண்டும் செம்மை
நெறியாய் தமிழாய் நடந்தாய் வாழி!.

இத்தனை வளமும் உற்றனை ஒருத்தி.
அத்தனை நிலமும் கொண்டனை பொருத்தி.
சொத்தாய் முத்தாய் தாயாய் தமிழாய்
 வித்தாய் சத்தாய் விளைவாய் வாழி!

ஆழி சூழ் உலகும் ஆளும் தமிழே!
வாழி நாள் வளரும் வாழும் தமிழே!
மேவிய செந்மிழ் மூத்த மொழியே!   
கூவிய முதல்தமிழ் அம்மா வாழி!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment