Saturday, 28 May 2016

குயிலோ மயிலோ!

காட்டுக்குயில் பாட்டுத்தானா?

காட்டுக் குயில் பாட்டுத்தானா?
கூட்டு மயில் ஆட்டந்தானா ?
பாலை மழை போலத்தானா-வீணே
வாழும் நிலை வாழ்க்கைதானா?

என்ன சொல்லிப் பாடுகிறேன்!
என்ன வெல்ல ஆடுகிறேன்
என்ன இங்கே தேடுகிறேன்-நானே
என்ன எங்கே ஓடுகிறேன்.

சொல்ல வந்தது என்னவோ!
சொன்ன துந்தான் செல்லுமோ!
கொள்ள வந்ததும் என்னவோ-கூடவே
கொண்டு போவதும் செல்லுமோ!

பிறக்கும் போது சிரித்தேனா!
பிழை நினைத்தும் அழுதேனோ!
பறக்கும் போதும் அறிந்தேனா- எங்கே
நிலை நிறுத்தும் இடந்தானோ!

நிலம் என்றால் நிசந்தானா!
புலம் வென்றால் வசந்தானோ!
பூமி என்பதும் பூஜியம்தானா-அந்த
சாமி ஒன்றதும் ராஜியம்தானோ!

பேரென்ன சொல்லவோ!
ஊரென்ன கொள்ளவோ!
யாரென்ன சாதியோ-தூசே
நீரென்ன மீதியோ!

விதைச்சவன் தானதை சொன்னானா!
விளைவதைத் தானெல்லாம் கொண்டானோ!
புதைச்சவன் தானதைப் புரிந்தானா-இங்கே
முளைப்பதைத் தானுந்தான் மறந்தானோ!

எத்தனைக் காட்டுக்குயில் பாடின;
அத்தனைக் காற்றுவெளி போயின!
பித்தனைப் போலத்தான் ஞானியர்-இன்னும்
செத்தனை நாளத்தான் காணியர்.

கொ.பெ.பி.அய்யா.

சமர்ப்பர்ப்பணம்

உமக்கே சமர்ப்பணம்.

பழைய நணபர்கள் பறந்தனர்.
புதிய தோழர்கள் கிடைத்தனர்.
கிடைத்தவர்கள் தொடர்வதற்கும்
கடவுளைத்தான் இறைஞ்சுகிறேன்.

எழுத்துச் சோலை நண்பர்களே!
ஏற்ற நிழலுந் தந்தீரே!
ஆயிளுந்தான் கூடியதே!
சேயாகிப் பாடினேனே!

பழுதேதுங் கண்டதிலே
திருத்தங்கள் செய்தீரே!
பாதை கூட்டி ஆதரித்து
பயனுறச் செய்தீரே!

பாராட்டுப் பத்திரம்
சீராட்டித் தந்தததும்
நேராக உம் அன்பில்
சீராக சமர்ப்பணம்.

ஆயிரம்  செய்வதற்கும்
ஆயுளும் வாழ்வதற்கும்
தாயுளம் அன்பரே!
நேயறம் பெய்வீரே!.

கொ.பெ.பி.அய்யா

Tuesday, 10 May 2016

காதலை வாழ விடு.

காதல் வாழ்ந்திருந்தால்
மோதல் ஏதடா பூமியில்.
காதல் மறந்திரந்தால்
சாதல்தானடா வாழ்வினில

சாதி என்ன சாதியோ!
சண்டைதான் மீதியோ!
ஆதி சொன்ன சேதியோ!-ஆதி
மூலன் என்ன சாதியோ!

தொழில் முறைச் சமுதாயம்
தொடர்ந்திட்ட தொல்லையோ!
இழிவென்றும் ஏற்றமென்றும்-தொழிலை
எண்ணியதன் பாவமோ!

கூலி பெற்ற கூட்டங்கள்
கூடிவாழ்ந்த மடைமையோ!
கூட்டமே பேதமையோ!—பின்னே
குழுக்கள் ஆன சாதியோ!

தலைவர்கள் தோன்றலின்
தன்னலச் சதிதானோ!
நிலை குலைந்த பாமரரின்-வறுமை
நேர்ந்ததன் விதிதானோ!

உரிமைகளை! இழந்த ஏக்கம்
உணர்வுகளாய் எழுந்ததோ
எழுந்தநல் உணர்வுகள்--பெரு
எழுச்சியாய் மலர்ந்ததோ!

எழுச்சிகளைக் கனிகளாய்
எடுத்துக் கொண்ட தலைவர்கள்
வளர்ச்சிக்கு உதவுதாய்—பேத
உணர்வுகளைத் தூண்டினர்.

ஊரது ரெண்டு பட்டால்
கூத்தாடி கொண்டாட்டம்.
பாரெங்கும் சங்கங்களை—சாதி
பேர்களில் புத்துப்பித்தார்
சமநிலைப் பொருளாதாரம்
சலுகைகள் தானாதரம்.
நம்பிய நல்லோரும்—இன்று
நடப்பதுவும் பொறுப்பரோ!

எங்கிருந்து வந்ததோ!
இந்தச் சாதியோ!
என்றதுவும் சாகுமோ!-மனிதம்
வென்றதுவும் வாழுமோ!

காதல் வாழ்ந்திருந்தால்
சாதிகள் ஒழிந்திருக்கும்
பண்பதில் அன்பிருந்தால்—சாதி
பட்டுத்தான் அழிந்திருக்கும்.,

கொ.பெ.பி.அய்யா.