Thursday, 24 December 2015

ஆதியில் வார்த்தை.

ஆதியிலே வார்த்தை இருந்தது.

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.
3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.
4. அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.
5. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
யோவான் 1:1-5
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எல்லாம் வல்லவா.

ஆதியில் சத்தியம் வார்த்தை இருந்தது-அது
தேவனிடம் நித்தியம் தேவனாய் இருந்தது.
தேவனால் யாவுமாய்  உருவானது.-அவரே
ஏசுவாக தேவனோடு  ஜீவனாய் இருந்தார்

ஏசில்லாமல் ஏதுமில்லை ஆதியு மில்லை-எல்லாம்
ஏசுதானே ஜீவனுள்ள தேவனு மெல்லை
ஜீவன்தானாய் மனிதருக்கு ஒளியாகினார்--வல்ல
தேவன்தானே இருளி லொளிக்கு வழியாகினார்.

ஆதிதானே ஆவியாகத் தேவ னானது--அதுவே
தேவனாக ஏசுவாக ஜீவ னானது.
பாவிகளால் தூயாவி தானானது--புவியில்
ஏசுவாய் மனிதனாய் பாட மானது.

பாவிகளை இரட்சித்து தூய்மை யாக்கினார்--பாவிகள்
சாபங்களை சிலுவைக்கு தீப மாக்கினார்.
பாவங்களின் பாவமாய் தானுமாகினார்--மீண்டும்
ஆவியாய் விடுவித்து வான மேகினார்.

கொ.பெ.பி.அய்யா.


Tuesday, 22 December 2015

நெடும்புனல்

நெடும்புனல் 3

பதறி ஒடுங்காதே!
பாவம் எண்ணாதே!
பின்னால் ஒளியாதே!
பீதி நம்பாதே!
புண்படப் பேசாதே!
பூச்சியாய் வாழாதே!
பெண்டீரை இகழாதே!
பேதம் பழகாதே!
பைத்தியனாய் திரியாதே!
பொறாமை கொள்ளாதே!
போர்க்குணம் புதைக்காதே!
பௌசு பாராட்டாதே!
அப்பியாசம் தள்ளாதே!

மண்ணை துறக்காதே!
மாதாவை மறக்காதே!
மிகுந்தது மறைக்காதே!
மீட்டது சிதைக்காதே!
முன்சொல் மறுக்காதே!
மூத்தோரை வெறுக்காதே!
மெத்தனம் பேணாதே!
மேடைமொழி கேளாதே!
மொழி பிற  பகையாதே!
மோதல் தொகையாதே!
மையல்வெறி மாளாதே!
மௌசு மயங்காதே!
அம்மாமடி ஆறாதே!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 17 December 2015

பொன்னூஞ்சல்.

பொன்னூஞ்சல்

தேடிய தங்கம் தெருவில் கிடைத்ததில்
வாடிய நெஞ்சம் விரியும்போல்-ஊடியும்
கோடிய காதல் குமுதம் மலர்ந்தன்ன
கூடியும் பொன்னூஞ்ச லாடும்.

தொலைந்த பொருளும் தெரிந்த நிலையில்
அலைந்த மனமும் அடங்கினாற்போல் -காலை
கலைந்த உறவும் கலவுமாலை சேர்ந்தும்
குலைந்துமே பொன்னூஞ்ச லாடும்.

அடர்ந்த இரவும் விடிந்த பொழுதில்
அடைந்த விடுதலை ஆரவாரம்போல்-கோடித்
தடித்துப் பிரிந்து திரும்பிய நட்பும்
தொடுத்துமே பொன்னூஞ்ச லாடும்.

வீடு துறந்தும் காடு நிறைந்தும்தீர்
தேடுமுனி யோகமும் தோற்பன்போல்-ஈடெதும்
ஈடோதாய் நன்றி இழந்தான் முகர்ந்தும்கண்
ஓடியும் பொன்னூஞ்ச லாடும்.

பாட சாலை படிக்கத்தான் விடுத்தது
மூடிய பட்டிக்குள் முடங்கியபோல்-தேடியும்
வாடிய மழழையும் வாசலில் தாயவளும்
நோடியே பொன்னூஞ்ச லாடும்.

கொ.பெ.பி.அய்யா.












Wednesday, 16 December 2015

நெடும்புனல்2

நெடும்புனல். 2

சண்டைக்கு முந்தாதே!
சாதிக்கப் பிந்தாதே!
சிந்தை அடக்காதே!
சீற்றம் முடக்காதே!
சுதந்திரம் பிழைக்காதே!
சூதனம் பழகாதே!
செருக்கு முறுக்காதே!
சேவை வெறுக்காதே!
சைவம் அழிக்காதே!
சொல்லுக்கு மயங்காதே!
சோம்பி ஒடுங்காதே!
சௌதாயம் வேண்டாதே!
அச்சம் தூண்டாதே!

தமிழை கழிக்காதே!
தாய்தந்தை ஒதுக்காதே!
திமிர் பேசாதே!
தீவினை முனையாதே!
துணைக்குத் தயங்காதே!
தூய்மை கெடுக்காதே!
தெய்வம் பழிக்காதே!
தேசம் மறக்காதே!
தையலர் இழிக்காதே!
தொண்மை விலக்காதே!
தோல்விக்கு அஞ்சாதே!
தௌலம் பிசகாதே!
உத்தமம் மாறாதே!


மறந்த சொற்கள் -தெரிந்த பொருள்கள்
-----------------------------------------------------------
(பிழைக்காதே-தவறாகப் பயன்படுத்தாதே)
(பிறரை அழிக்க எண்ணாதே)
(தையலர்-பெண்டீர்)
கொ.பெ.பி.அய்யா.
(சௌதாயம்-சீதனம்,நன்கொடை,கையூட்டு)
(தொண்மை-பழமை-மரபு)
 (தௌலம்-துலாக்கோல்- தர்மம்--நடு நிலை)
(உத்தமம்-சத்தியம்-மேன்மை-தர்மம்)

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 15 December 2015

நெடும்புனல்3

நெடும்புனல்.

அம்மையப்பர் மறவாதே!
ஆக்கம் மறுக்காதே!
இயன்றது மறைக்காதே!
ஈகை ஒளிக்காதே!
உரம் விலக்காதே
ஊக்கம் மழுக்காதே
எண்ணம் கலங்காதே!
ஏற்றம் தயங்காதே!
ஐநிலம் பகையாதே!
ஒழுகாது ஓதாதே!
ஓரமொழி பேசாதே!
ஔவியம் எண்ணாதே!
ஃ என சோராதே!

கடவுளைப் பழிக்காதே!
கடமை கடத்தாதே!
கிடந்து கழிக்காதே!
கீழ்மை சேராதே!
குதர்க்கம் பேசாதே!
கூவித் திரியாதே!
கெட்டது கேளாதே!
கேடு பேணாதே!
கையூட்டு விழையாதே!
கொள்கை தவறாதே!
கோஷம் பழகாதே!
கௌடனை பாராதே!
அக்கடானு அலுக்காதே!

தொடரும்.........................

கொ.பெ.பி. அய்யா.

Sunday, 13 December 2015

பேர்சொல்லும் பிள்ளை.

பேர் சொல்லும் பிள்ளை.!

அள்ளியும் முத்தம் ஆடவும் வேண்டும்.
பிள்ளையும் பெற்றம் பேறும் கொண்டும்.
கொள்ளவும் வேறு என்னதான் வேண்டும்!
வள்ளல் நீயும் வாழ்கவே ஆண்டும்.

கொஞ்சும் நெஞ்சம் கர்வம் ஏறுது.
பஞ்சம் அஞ்சிய பாவம் போனது.
மஞ்சம் கெஞ்சிய  மாயம் தீர்ந்தது.
எஞ்சும் துஞ்சமும் ஏனினி வேண்டுது!

வாழ்வும் நீயென வாழ்வது கடமை.
நாளும் தேடல் நானுந்தன் அடிமை.
வாழுங் கல்வி வளர்வுன் உடமை.
ஆளுஞ் சிந்தை அடையும் பெருமை.

இவனது தந்தை இவனென ஊரும்.
அவனது பேரில் அடையாளம் கூறும்.
தவமாம் தாயார்  தன்பிள்ளை சிறப்பும்
இகமும் முற்றும் யாமாறும் பிறப்பும்.


கொ.பெ.பி.அய்யா.

Monday, 7 December 2015

சென்னை கண்ட பாடம்.

சென்னையும் கண்டது.

மொழியும் இனமும் மதமும் எங்கே!
மனிதம் மட்டும் மதித்தது இங்கே.
உறவும் முறையும் உயிரென ஒன்றே.
பரவும் சமூகம் பயின்றது இன்றே!

இடரில் மனிதன் இடறும் போதே
படரும் பழமை பரிவினில் தானே
உடுக்கை இழந்தான் உணர்வினைப் போலே
முடுக்கும் உதவி மனிதம் தானே.

உயிரும் உயிரும் உறவெனக் கண்டே,
உயிரும் தடையோ உறுதியும் கொண்டே,
உதவும் மனிதம் உலகினில் உண்டே.
இதுவும் நிசமே இறப்பில்லை தொண்டே!

சென்னையும் கண்டது முன்னைய சொந்தம்.
தன்னையும் கண்டது நன்னய பந்தம்.
மகத்துவம் கண்டது சகத்துவம் என்றும்.
இகத்துவம் கண்டது சமத்துவம் ஒன்றும்.

பேரிடர் பாடமும் ஆறிட வேண்டாம்.
யாரிடம் பேதமும் கூறிட வேண்டாம்.
ஊரிடம் வாசமும் மாறிட வேண்டாம்.
பாரிடம் பாசமும் மீறிட வேண்டாம்.

கொ.பெ.பி.அய்யா.

அம்மா.

அம்மாதான் அம்மா!

நான் இருப்பேன் நின்னருகே
ஏன் கலக்கம் என்னுறவே!
வீண் மயக்கம் என்னதான்!
தான் துடைப்பேன் அம்மாநான்!

என்நெஞ்சம் உன் வாசம்.
உன்தஞ்சம் என் நேசம்.
நம்சொந்தம் முன் பந்தம்
அம்மா நான் என்றென்றும்.

எண்ணும் போதும் சும்மாதான்.
எண்ணித் தேடும் அம்மாநான்.
என்னை முந்தி சிந்தைதான்.
உன்னை கண்டு ஆறும்நான்.

அம்மா துணை இருக்கிறேன்.
அஞ்சும் வினை அறுக்கிறேன்.
தும்முந் துயர் பொறுப்பேனோ!
அம்முன் அர வணைப்பேனே!

அம்மா தான் அம்மாவாம்.
சும்மா தான் மற்றெல்லாம்.
என்னுயிர் போல் போற்றும்
உன்னுயிர் நான் அம்மா.

கொ.பெ.பி.அய்யா.



Saturday, 5 December 2015

மனிதநேயம் தெரிகிறது.கட்டுரை

மனித நேயம் வெளிப்படட்டும்.

அன்பான அகில உலகில் வாழும் தமிழ்ப் பேரினமே!அனைவர்க்கும் அன்பான வேண்டுகோள்.நூறாண்டு கால வரலாற்றில் இதுவரை தமிழகம் சந்தித்திராத இயற்கைப்பேரிடரை தமிழகம் இன்று கண்டு தாங்கொண்ணா இன்னலை சந்திக்க நேர்ந்துள்ளது என்பது வேதனையிலும் வேதனை.தமிழத்தில் குறிப்பாக சென்னை மாநகரும் அதன் சுற்றுப்புறமும் இத்துயர நிகழ்வால் அப்படியே முற்றிலும் தலைகீழாகப் புரட்டிப்போடப்பட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.

கூடியமட்டும் அரசு எந்திரங்கள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை மீண்டும் மீட்டிக்கொண்டு தர அல்லும் பகலும் அயராது பாடுபட்டுக்கொண்டுதான் இருக்கிறது என்பதும் ஒப்புக்குச்சப்பாக சொல்லவில்லை.உண்மையை மறைத்து இந்த நேரத்திலும் இக்கோர நிகழ்வை சிலர் அரசியல் ஆக்குவதுதான் வருத்தமாக உள்ளது. மானுட சுய மாச்சர்யங்களுக்கு இது களமோ தருணமோ அல்ல.ஒட்டுமொத்த மனித குலமும் பாகுபாடின்றி மனித நேய வெளிப்பாடோடு கைகோர்த்து இணைந்து நம் மனித இனத்தை இப்பேரிடரிலிருந்து மீட்டு மீண்டும் வாழவைக்க ஒருமனதோடு செயல்படவேண்டும் என்பதே இதயமுள்ளவர்களின் இன்றைய ஏகோபித்த வேண்டுகோளாய் உள்ளது என்பதே உண்மையிலும் உண்மை.

இன்றும் அரசோடு இணைந்து சமூக ஆர்வலர்களும்,எண்ணற்ற தொண்டு நிறுவனங்களும் பொதுமக்களும்,மாணவச்செல்வங்களும் அயராது உதவிக்கரங்கள் நீட்டி உழைத்தும் வருகிறார்கள் என்று எண்ணும்போது இன்னும் மனிதநேயம் மரித்துப்போகவில்லை என்றே தெளிவாகத் தோன்றுகிறது.

என்னதான் அரசு எந்திரங்கள் படாத பாடுபட்டாலும் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் எந்த ஒரு மீட்புப்பணிகளும் முழுமையான வெற்றியை எட்டமுடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

ஆகவே உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் இனத் தோழமைகளே தாங்கள் எல்லோருமே தாய்மண்ணின் மீது தளராப் பற்றுடையவர்கள் என்பதையும் தமிழ்ப்பேரினம் அறியும்.கருணை உள்ளம் கொண்டோர் என்பதும் தாங்கள் அவ்வப்போது தமிழுக்குக் காட்டும் பாசமும் பரிவும் வெளிப்படையானது என்பதும் நம்மினம் நன்றியோடு புரிந்துதான் வைத்துள்ளது.இந்த அவசரமான
காலத்திலும் தங்களின் பொன்னான கொடையுள்ளத்தை கொண்டு தங்களால் இயன்றதை வாரி வழங்கி நமது சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவேண்டி தங்களைப் பணிவன்போடு வேண்டி விரும்பி உரிமையோடு கேட்டுக்கொள்ளும் அதே நேரத்தில் உள்நாட்டிலும் வாய்ப்பும் வசதியோடும் வாழும் மனித உள்ளங்களையும், உதவிக்கரம் நீட்ட தமிழ்ப்பேரினம் சார்பாகக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

கொ.பெ.பி.அய்யா
https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12313509_929462587136817_3742254452265020584_n.jpg?oh=0e73a20dc6802c2698acc2646f36883e&oe=56D4A646

Sunday, 29 November 2015

அலையும் மலையும்.

எழுக!நிமிர்க!

இமயம் கூட எதிரில் பணியும்
சமயம் தேடி சமரில் முனைந்தால்.
எழுந்து நிமிர்ந்தால் எதுதான் துணியும்.
விழித்து வரிந்தால் விதிபோம் பயத்தால்.

எண்ணும் கருமம் எதுதான் கடினம்
முன்னம் தெளிந்து முடிக்கும் துணிவில்.
கண்ணும் கருத்தும் கடமை கவனம்
வண்ணம் நிறுத்தும் வடிக்கும் விளைவில்.

ஆகும் செயலே அவனியில் எல்லாம்.
வேகும் பொருளே வினையில் தொடர்ந்தால்.
மோதும் அலையே முயலும் திண்ணம்
போகும் மலையே பொடிந்தும் கரைவில்.

துடிக்கும் திறனே தொழிலும் படிக்கும்
வெடிக்கும் வெறியும் விரிக்கும் பயில்வில்.
முடிக்கும் மனமே முடுக்கி முடிக்கும்
இடிக்கும் தினவும் இயங்கும் அறிவில்.

கூர்ந்த பதிவில் குவியும் வினையும்
நேர்ந்த தெரிவில் நிறையும் முடிவில்.
தீர்ந்த ஐயமும் தெளிந்த ஞானமும்
ஆர்ந்து விளங்கும் அகிலம் பயனில்.

கொ.பெ.பி.அய்யா.


Monday, 16 November 2015

வேஷம் தெரியாதா.




ஊருக்குத் தெரியாதா?

ஊருக்குத் தெரியாதா-உன்னை
யாருண்ணும் புரியாதா-நீ 
போடுற வேசமும் ஆடுற நாடகமும்
பார்த்துதான் சிரிக்காதா!
பட்டதும் நினைக்காதா!

என்னென்ன பொய்யெல்லாம்-பாவி
இன்னும்தான் சொல்லுவ--உனக்கு
கண்ணென்ன நொள்ளையோ எண்ணமும் இல்லையோ
மனசும்தான் பேசாதா!
மனுசந்தான் நீதானா!

முன்னாடி பின்னாடி--பாரு
உன்னைத்தான் கண்ணாடி--கூறு
என்னதான் சொல்லுது சொன்னதும் உள்ளது.
ஊரேதான் கண்ணாடி
கூறாது பொய்யாடி.

கிழிஞ்சிறிச்சி வேட்டிரெண்டா--மானம்
அழிஞ்சபின்னும் வெக்கமுண்டா-தர்ம
வேலிதாண்டித் திருடியதும் வேட்டியப்போ கிழிஞ்சதும்
பார்க்கலையோ ஊருதான்
நாக்கில்லையோ பேசத்தான்,

வாசம்நீ பூசினாலும்-பொய்
வேசம்நீ போட்டாலும்.--அது
வாடிப்பின் நாறாதோ!வக்கனையும் கூறாதோ!
ஊரென்ன பாப்பாவா!
நீயென்ன மாப்பாவா!

அண்ணனும் போவதெப்போ--குந்தத்
திண்ணைகாலி ஆவதெப்போ--இந்த
எண்ணம்தான் எவருக்கும் எண்ணத்தில் சுத்தமில்லை
நம்பிவாழ நீதமில்லை
தம்பியாரும் அண்ணனில்லை.

கொ.பெ.பி.அய்யா.



Thursday, 12 November 2015

அம்மாதான் ஆரம்பம்.


அன்பின் பரிசு.

பாப்பா பாப்பா நீ சொல்லு
பாடம் முதலில் “அ” சொல்லு
அம்மாதானே ஆரம்பம்
அவளைப் போற்றி நீநில்லு.

இருக்கும் காலம் ஈடில்லை.
உனக்குள் ஊக்கம் ஊறில்லை.
எண்ணம் ஏக்கம் ஏறுமுகம்
ஐந்துள் அடக்கம் அன்னைமுகம்.

ஒழுக்கம் ஓதும் நன்பாடம்
விழுப்பம் ஆகும் பொன்போலும்.
ஔவை மொழியே செவ்வைநெறி
பவ்வியம் பழகி அவ்வழியறி.

பிறக்கும் நாளே பரிசாக
பெற்றால் தாயே உனையாக..
பரிசும் தந்தாள் அம்மாவும்
பதித்து முத்தம் அன்பாக.

மருத்துவம் தானே தாயவளே!
கருத்தும் காப்பும் நீயவளே!
வருத்தும் கல்வி தாயவளே!
பொருத்தும் செல்வம் நீயவளே!

அம்மா என்றால் அன்பேதான்.
அன்பே தெய்வம் அவளேதான்.
அவளே வாழ்வின் ஆதாரம்.
அவளொரு பிறவி அவதாரம்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 11 November 2015

காத்துக் கிடப்போம்

யாமேன் காத்துக்கிடப்போம்!

காத்துக் கிடப்போமோ!
காசுகவி செய்வோமோ !
அகங்கொண்டால் ஏற்றுக்கொள்!
திகட்டினால் விட்டுவிடு!

அழைத்தால் நுழைகிறோம்
அடைத்தால் கலைகிறோம்.
எமக்கில்லை நட்டம்!
உமக்குத்தான் கட்டம்!

வேலையென்றா எண்ணுகிறோம்!
யாரைக்கொண்டு வாழுகிறோம்?
உழுதுவிதை ஊன்றத்தான்
எழுதுகடன் ஆற்றுகிறோம்..

வந்ததும் எழுதத்தான்
தந்ததும் எழுத்தாணிதான்.
எந்தநாள் அவனறிவான்.
அந்தநாள் அடையத்தான்.

கொ.பெ.பி.அய்யா.

காதல் எளிதல்ல.

காதல் வெல்லும்.

காதலது எளிதல்ல
கந்தனவன் சளைக்கவில்ல
காதலை வென்றெடுக்க-முருகன்
சாதித்ததும் கொஞ்சமல்ல.!

வேடனாய் மானைத்தேடி
வேலனாய் மாதைப்பாடி
கண்டதும்  வள்ளிநாடி-பட்ட
கட்டங்கள்  எளிதல்ல!

கொள்ளிமலை கானகத்தில்
வள்ளியிடம் நெருங்கருகில்
தள்ளாடுங் கிழவனாக-செந்தூரன்
தரித்தவேடம் எளிதல்ல!!

ஏலேலங் காட்டுக்குள்ளே
எத்தனையோ அவலங்கள்!.
நம்பிராசன்  நாட்டெல்லை-கார்தியன்
நம்பியதும் எளிதல்ல.

தும்பிக்கையான் புண்ணியத்தில்
தோற்கவில்லை அக்ககாதல்.
நம்பிக்கை இருந்தாலும்-துணிந்த
நையான்டி எளிதல்ல!

ஏளனங்கள் எத்தனை!
இழிவுகள்தான் எத்தனை!
இறைமகனே ஆனாலும்-அழகன்
வென்ற காதல் எளிதல்ல!!

உறுதியான  காதலுடன்
இருத்தித்தான் நின்றிட்டால்
குமரன் துணை செய்திடுவான்--தான்
கொண்டகாதல் காத்திடுவான்.

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 8 November 2015

தனித்தமிழ்

தனித்தமிழ்.

ஒலி பிறந்த பொழுதே
தமிழ் பிறந்தது-அது
மொழியெனப்  பலவாய்
உலகம் விரிந்தது.

இயற்கை கடைந்த இசைக்கும் அமுதம்
பயிற்சி கடந்தும் பழகும் தமிழும்
இயக்கம் தனித்தும் இனிக்கும் நிலைக்கும்
முயன்றும் கலப்பும் முயற்சி பழிக்கும்.

புண்ணியம் சேர்க்கும் பொதிகை மரபே!
தன்னியம் காக்கும் தமிழின் வரவே!
அந்நியம் நோக்கும் அவலம் துறவே!
மண்ணியம் தேக்கும் மணந்தான் உறவே!

மயக்கம் விரிக்கும் மடமை ஐயோ!
வியக்கும் தமிழை விலக்கம் உய்யோ!
பயக்கும் அறிவும் படியா தமிழோ!
நயக்கும் பிறவும் நமதன்னை நிகரோ!

இப்படி நாமும் தப்படி ஆனால்
எம்மொழி வாழும் செம்மொழி தானால்.
கல்லா மொழியும் சொல்லால் மட்டும்
நில்லா தொழியும் கல்வெட்டு இட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

படித்தவர் பாடம் மறந்தார்.

படித்தவர் பாடம் மறந்தார்

படித்தவர் ஏனோ பாடம் மறந்தார்.
பாதை விலகியும் எங்கோ தொலைந்தார்.
படித்ததும் பொய்யோ!நடிப்பதே மெய்யோ!
பாவம் பழகி பழியும் சுமந்தார்.

கற்ற அறிவை விற்றும் வஞ்சமாய்
பெற்ற மனிதம் கெட்டும் லஞ்சமாய்
சுட்ட பணமதில் பட்டும் அடிமையாய்
செத்த மனமுடன் என்னடா முடிவாய்?

வேலைக்கு கூலி நாளும் கணக்கும்
நாளைக்கும் ஊதியம் சாகும் வரைக்கும்.
ஏழைக்கு என்ன வாழ்வில் இருக்கும்!.
ஊழல் உன்னால் சாவே பெருக்கும்.

தன்வயம் இல்லையோ! செய்கடன் செய்யவும்
பின்பயம் இல்லையோ! முன்கை நீட்டவும்
வெக்கம் இல்லையோ!பிச்சாந்தி கெஞ்சவும்
வக்கும் இல்லையோ!எச்சேந்தி ஒஞ்சவும்.

ஆறடி மண்ணும் ஆருக்கும் இல்லையே.
நீரடி சாம்பலும் பேருக்கும் மிஞ்சுமோ!
ஊரார் நோகத்தான் உழைப்பினை சுரண்டியே
நாறும் பிழைப்பினை நாடென்ன மணக்குமோ!

ஊசிப் போச்சடா தேசியப் பேச்சும்.
வீசும் மூச்சடா ஏழையர் ஏக்கம்.
கூச்சம் ஆச்சடா கூறத் தானடா!
வீச்சம் சீச்சீ வீணோ சுதந்திரம்!

கொ.பெ.பி.அய்யா.

Saturday, 7 November 2015

காலம் தீண்டாக் கல்வி

காலம் தீண்டாக் கல்வி.

கல்வி சிறந்தொரு செல்வமும் உண்டோ!
காலமும் தீண்டாத கற்பகம் அன்றோ!
ஏவும் அதிகாரம் எழுந்தும் கைதொழும் 
நாவில் கலைமகள் நடனமும் கண்டோ!

தின்னவும் தூங்கவும் தேவையோ பிறவி!யும்
மண்ணிதில் தாங்கலும் மாளவோ முடிவிலும்
பயனென்ன செல்வமோ பாடையில் ஏறுமோ!
பயனாகிக் கல்விபோல் புகழ்பின் கூறுமோ!

கற்றதும் கையுள் கடுகும் சிறிது.
கல்லாது விண்ணிலும் மண்ணிலும் பெரிது.
கற்றார் செருக்கு கனமது விடுத்து
பெற்றார் பயனை பெருக்குவீர் கொடுத்து.

நேருக்கு நேரஞ்சா ஊக்கமாம்.கல்வி
வேராய் விழுதுமாய் சோராதும் நல்கி
நிலவின் அழகாய் முகமும் மலரும்
ஒளிரும் சுடராய் அகமும் மிளிரும்.

எண்ணும் கல்வி வண்ணம் கற்று
எண்ணிய எல்லாம் திண்ணம் பெற்று
பொன்போலும் சொல்லென உன்போலும் யாரென
மண்ணிங்கு எங்குமே உன்புகழ் வாழ்க!

பயனுறக் கற்று நயனுறச் செய்க
பிறவியின் புண்ணியம் வரமெனச் சொல்ல.
நீராய் நிலமாய் நிறைவான் பிராணமாய்
தீயாக நீயாக தாயாக வாழ்க!

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 5 November 2015

கல்விச்செல்வம்.

கல்வி.

கற்றதும் அல்லாது பெற்றதும் என்னவோ.
நிற்றலும் மண்ணது உளதோ-கொற்றது
பற்றியும் தன்னது பக்கம் அமர்த்தும்
இற்றது முன்னது ஏதோ!

உறங்கவும் வீணா உணவுக்கும் தானா 
செறிந்த மனிதப் பிறவியோ-மண்ணில்
பிறந்தது மென்ன பயனுற வென்ன
பெறலின் செல்வமாம் கல்வி.

கற்றதும்  கைம்ண் கணக்கே தானும்.
பெற்றதும் சொன்னாள் பிராட்டியும்-கற்று
உற்றதும் தன்னே உயர்வும் அளவும்
மற்றவர் சொல்வார் மாண்பு.

தலைவழி வாசல் துணிவுறும்அறிவால்
புறம்பயம் பேசல் பொசுக்கி-அறமே
எழுந்தொளி ஞானம் எழிலாம் வெளிச்சம்
முழுநிலா முகமாம் மலர்.

கற்றது நல்லிணை நட்டல் அறிவினை.
பெற்றதாம் பேறினையும் பிறவி-மற்றெல்லாம் 
வெற்றணை வீணாய் வெறித்த தரிசதாய்
வற்றிய விறகாய் உடல்.

செல்வம் விற்றும் கல்வி கற்போம்.
உள்ளும் எல்லாம் கொள்ளும்-யாவும்.
செல்லும் எங்கும் சொல்லும் செல்லும் 
வெல்லும் ஏற்றம் போற்றும்.

கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 4 November 2015

தேவர்திருமகன்.

தெய்வத் திருமகன்.

தெய்வத் திருமகன் தீரமுத்து ராமலிங்கம்
உய்வித்த நாடிது ஒன்றென வாழ்வதிங்கும்--அவர்
செய்வித்த சீரருமை செய்கடன் காப்பதென்றும்
கைவைத்து சத்தியம் கடமையெனக் கொள்வமென்றும்.

உடல்தான் தேசியம் ஒன்றா முணர்வால்
உயிர்தான் தெய்வீகம் உள்ளு மறிவால்-அறிந்து
விவேக மற்றவீரம் வீணவனும் கோழையென்பார்
வீரமிலா விவேகம் வெற்றவன் மூடனென்பார்

சமத்துவ நாடாய் சமைத்திடப் பாடாம்
அமைப்பதில் முன்னோடி அவர்மூதைத் தேடதாம்--கட்டாயம்
தொகுத்த முப்பத்தாறு தொல்வயல்ப் பட்டிகளை
பகுத்தும் கொடுத்தார் பரமத்தலித் பாமரர்கை .

பக்தியெனும் சத்தியமும் பற்றியவர்  தூயவர்
முக்தியிங்கே கண்டவர்தான் முற்றிப்பசும் பொன்னாரும்--தெய்வமுன்
கீழோரேன் மேலோரேன் கேள்விதான் பாவமேன்?
தாழுடைத்து மீனாள்முன் தான்சமூக நீதிசெய்தார்.

குற்றப் பரம்பரைச் சட்டமதன் கட்டவிழ்த்து
பெற்றவினம் முக்குலமும் பட்டஇழி முற்றழித்து-மேலும்
கற்றுவளம் பெற்றுயர உற்றவழி தான்வகுத்து
உற்றதினம் வந்தநாளே விட்டுடல் தான்பறந்தார்.

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:--கட்டு+ஆயம்=கட்டாயம்.(ஆயத் தீர்வை கட்டப்படும் நெல்விளையும் நன்செய் வயல்கள்)

பட்டிகள்--சொந்தமான பண்ணைக் கிராமங்கள்.

Monday, 2 November 2015

எங்கே சொர்கம்.

எங்கே சொர்க்கம்.!

படிக்கப் படிக்கப் படித்ததும் தானே
படிந்தும் மனதிலும் பாடம் விளங்கும்.
நடப்பும் அறிவில் நடுவதும் தானே
படிப்பும் பயனும் ஆகும். 

பாடிப் பயின்றும் பழகிடும் பாட்டதும்
கூடி முயன்றும் குலவிடும் ஊற்றதும்
தேடித் திரளசைத் தேனாம் குரலிசை
நீடி நிறைக்கும் நெஞ்சம்.

வடிக்க வளரும் வரைவிலும் ஓவியம்
படிக்க மிளிரும் வண்ணமும் காவியம்.
செதுக்கத் துலங்கும் சிலைபோல் கலையாம்.
பதிக்கக் கவிதை பாடு.

ஊடிக்  கூடும் இன்பம் காதல்
கூடி வாழும் அன்பாம் வாழ்தல்.
தேடித் தேடும் செல்வம் ஈதல்
நாடும் ஞாலம் சொர்க்கம்.

கொ.பெ.பி.அய்யா.

காதல் இதுதான்.

காமம் அஞ்சுமோ!

ஆணென்னப் பெண்ணென்ன! ஆன்மா
கலந்தது பின்ன--கலப்பில்
நீயென்ன நானென்ன! கூடத்
தயக்கமு மென்ன!

நாணமும் பேணுமோ!ஈருயிர்
தானுருகிய பின்னே-கூடவும்
வேளையென்ன நாளென்ன! வாழவும்
சாத்திரமென்ன!

மண்ணெண்ன விண்ணென்ன! ஒன்றில்
ஒன்றான பின்னே--எண்ணும்
எண்ணென்ன சொல்லென்ன!மறைக்கும்
காம மென்ன!!

காமமென்ன காதலென்ன!கலந்து
நிறைந்த பின்னே--உருவில்
ஆளுமென்ன பேதமென்ன!அச்சமும்
கூச்சமு மென்ன!

ஊழென்ன கோளென்ன! காதல்
ஆண்டதும் பின்னே--நேரும்
வாழ்வென்ன சாவென்ன! இதனினும்
வேண்டுவ தென்ன!

கொ.பெ/பி.அய்யா

Saturday, 31 October 2015

ஞானம்.

ஞானம். தன்பட்டுத் தன்பட்டு--மனம்
பண்படவேண்டும் தென்பட்டுத் தென்பட்டு-ஞானம் தன்பட வேண்டும். முயன்று முயன்று-அனுபவம் பயின்றிட வேண்டும். அறிந்து அறிந்து-அறிவு விரிந்ந்திட வேண்டும். புரிந்து புரிந்து-புலமை தெளிந்திட வேண்டும். பழகிப் பழகி-மடமை விலகிட வேண்டும். விளங்கி விளங்கி-உறவு துலங்கிட வேண்டும். நெருங்கி நெருங்கி -சமூகம் மலர்ந்திட வேண்டும். இணங்கி இணங்கி-உலகம் சிறுத்திட வேண்டும். வணங்கி வணங்கி-அந்நியம் மறைந்திட வேண்டும். உணர்ந்து உணர்ந்து-மனிதம் உயர்ந்திட வேண்டும். அழிந்து அழிந்து -பகைமை
தொலைந்திட வேண்டும். உருகி உருகி -அன்பு பெருகிட வேண்டும். அருகி அருகி -பேதம் அழிந்திட வேண்டும். தேடி தேடி--நட்பைக் கூடிட வேண்டும். கூடிக் கூடி -தீர்வை தீர்த்திட வேண்டும். வேண்டும் வேண்டும் -இயற்கை இறையென வேண்டும். வேண்டாம் வேண்டாம்-செயற்கை
மதமது வேண்டாம். கவிஞர். கொ.பெ.பி.அய்யா.

Wednesday, 28 October 2015

முடியாத தும் உண்டோ!

உன்னைநீ கற்றுக்கொள்!

துள்ளடா விழித்துநீ பாரடா!
நில்லடா எழுந்துநீ கேளடா!
சொல்லடா உணர்ந்துநீ யாரடா!
செல்லடா நிமிர்ந்துநீ நேரடா!

வந்த வேலை என்னடா?
சென்ற நாளை எண்ணடா!
இந்த வேளை உன்னடா!
முந்து காலை முன்னடா!

மலை என்ன எதிர்க்குமோ!
அலை உன்னை மறிக்குமோ!
தொடர்ந் தறைந்து மோதினால்
நிலை கரைந்து விலகாதோ!

விடியாத இரவுண்டோ!
படியாத விலங்குண்டோ!
பயிலாத விடையுண்டோ!
முயலாத அடைவுண்டோ!

உன்னைநீ கற்றுக்கொள்!
தன்னைநீ பெற்றுக்கொள்!
என்னயில்லை உன்னுள்ளே!
உன்னைமிஞ்சி ஒன்னுமில்லே!

கொ.பெ.பி.அய்யா.

Monday, 26 October 2015

மனமே நீ என்னை.........!

மனமே நீ என்னை...........!


மனமேநீ என்னை மயக்காதே!-உன்
குணம்நான் அறிவேன் குழப்பாதே!
ஆளும் தலைவன் நானேதான்-மனமே
அடிமைக்கு இல்லை அதிகாரம்.

மனம்போல் பிழைப்பவன் வீழ்கிறான்-கேடு 
மறுக்கத் துணிபவன் வாழ்கிறான்.
ஐம்படைப்  போரே தகர்த்தாலூம் !--மனமே
ஆன்மா நேரே ஜெகத்தாளும்!

நரகமும் சொர்க்கமும் எங்குண்டு?--எண்ணம்
பழகும் விதத்தில் அங்குண்டு.
அருத்தம் பொருத்தம் சமமுண்டு.--மனமே!
தெரிவாய் புரிவாய் சுகமுண்டு.

கொடுக்கலும் வாங்கலும் நேரென்றால்--விட்டுக்
கொடுத்துப் பெறுதல் சமங்கண்டால்  
கூடும் உறவில் தடையோ!-மனமே!
தேடும் சுவர்க்கம்  நிசமே!

சந்தேக நஞ்சும்  பொல்லாதே-நெஞ்சம்
கொண்டாடும் வஞ்சம் கொல்லாதோ!
துன்பம் துயரம் தானன்றோ-மனமே!
சண்டாளம் நீயே நரகமோ!

தவப்படும் நெஞ்சம் நெறிப்படும்-எண்ணம்
அலைபடும் என்றால் தெறிப்படும்.
வசப்படும் சிந்தை அகப்ப்படும்-மனமே!
இசைப்படும் ஒன்றால் தகப்படும்.

துலங்கும் அனுபவம் புத்தியும்-ஆன்மா
விளங்க அறிவது சித்தியும்.
விலங்கு குணமும் விலகிட--மனமே!
விலங்கிடு சினமே நலந்தொட!

கொ.பெ.பி.அய்யா.

Sunday, 25 October 2015

பெண்பாவம்.

பெண் பாவம்!

உன்னைக் காணக் காய்கிறேன்
உருகி நானும் தேய்கிறேன்.
என்னை நொந்தும் கண்கலங்கி 
பெருகிச் சிந்தும் கண்ணீரோ!
கடலைக் கடக்கா பெண்ணேங்கி
கரையும் அபலை இக்கரையில்.

வானும் கூடத் தானிரங்கி
நானும் வாடப் பொறுக்காமல்
தானும் சிந்திக் கண்கழுவி
ஏன்தான் ஆற்றித் தேற்றுவதோ!
காண்பதும் நம்புங் கண்களுடன்
வீண்தான் நெஞ்சும் மயங்குவதேன்?

நிலவே நீயேன் விரைகிறாய்?
அலைந்தும் தேடி கரைகிறாய்.
உன்னைக் கண்டும் விண்மீன்கள்
கண்கள் சிமிட்டி ஒளிவதேனோ!
பகையோ உனக்கவை! பயமேனோ!
வகையென்ன அறிவாய்! அஞ்சுகிறேன்.

விடிந்தால்  வருவான் ஆதவனோ!
படர்ந்தால் பசலை புரிவானோ!
அறிந்தால் தொடர்வான் பாதகனோ!
அடைவாய் நிலவவே அவசரமே!
ஆண்துணை இல்லா பெண்பாவம்!
வீண்வினை சொல்லும் மண்சாபம்!

கொ.பெ.பி.அய்யா.

Friday, 23 October 2015

பாவம் விடாது.





பாவம் விடாது!

பாவிகளே! பாவிகளே! சண்டாளப் பாவிகளே!
பாவம் சும்மா விடுமோடா சிங்களப் பேய்களே!
சாபம் என்றும் பொய்க்காது சாவும் வீணாகாது.
தீபமதும் தீயும்முன் தீவிழுங்காத் தீராது..

உயிருடன் விளையாட்டா வயிரிங்கு எரியுதடா!
உயிரென்ன மயிராடா!உருப்படாப் பாவிகளா!
தின்னஉயிர் எத்தனை தீர்ந்ததோ வெறியுனக்கு?
கொன்றஉயிர் அத்தனையும் என்னபாவம் செய்தது?

தமிழென்ன அனாதையா தர்மந்துணை இருக்குது.
நிமித்தங்கள்  கணக்குண்டு நேரம்வரை காத்திரு!
பதிலென்ன கூறுவாய் பலிகொண்ட உயிர்களுக்கு.
விதியென்ன ஆறுமா வினையறுக்கப் பொறுத்திரு!

கோடிகோடி உயிர்களை கொண்டமகா சக்தியை
கூடிக்கூடி ஒன்றென குவிந்தமாக் காளியை.
தேடித்தேடி அழித்தாலும் கூடிக்கூடி தழைக்குமே!
ஓடிஓடி ஒளியவும் உனக்குஇடம் ஏதடா?

சூலம்தேடி வருகுதோ காலம்கூலி தருதற்கே!
நாளும்கூடி தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி தீர்க்குமே சாபம்பலி ஏற்குமே!
தீபஒளி அதுவரை தவமேற்று முடிக்குமே!

கொ.பெ.பி.அய்யா.


Friday, 16 October 2015

கைபேசி ஜாக்கிரதை.

கைபேசி ஜாக்கிரதை !

பெண்கேட்டு வந்தானென்று--கைபேசி
எண்ணேற்றித் தந்துவிட்டாள்.
பின்விசாரணை செய்வதற்குள்--பாவம்
பெண்ணவன் வசமானாள்..

கைபேசி பொல்லாதது--பொய்
காதலைத்தான் வளர்த்தது..
கொஞ்சும் மொழி பேசிப்பேசி--முதல்
மஞ்சம் கொண்டு சிதைத்தது.

வகை பலவாய் காமசுகம்--ஆசை
நகை பணமாய் உல்லாசம்.
மாப்பிள்ளை வேசம்போடும்--மோசடி
மன்னன் இன்று சிறைவாசம்.

எத்தனையோ திருமணங்கள்--பாவி
அத்தனையும் மறுமணங்கள்.
அத்தெறியும் தாலிக்கெல்லாம்--நீதி
உத்தறியும் நியாயமென்ன!

கொ.பெ.பி.அய்யா.

உண்டா இல்லையா

உண்டா!இல்லையா!

உண்டா!இல்லையா!கடவுள்?--கண்டவர்!
உண்டா?இல்லையா உலகில்?
கண்டேன் என்று சொன்னாலும்--கண்டு
உண்டென நம்பும் நன்றுண்டோ!

காற்றுக்கு என்ன வடிவமோ!--நேரே
காட்டு என்றால் முடியுமோ!
தொட்டால் மேனி உணர்வதோ!--இறையும்
உள்ளம் ஒன்ற ஒளிர்வது!

தன்னைக் கண்டு அறியவும்--அங்கே
முன்னை உண்டு கண்ணாடி.
இறையைத் தனக்குள் புரியவும்--நெஞ்சே
துணையாம் தியானம் உள்ளாடி..

இதயம் என்றொரு கருவிதான்--வெறும்
இரத்தம் செய்யும் செயலுதான்.
உள்ளம் என்றொரு உறுப்புண்டோ!--உள்ளின்
உள்ளான் உள்ளவன் இறையன்றோ!

பொருளாய் ஒன்றின் உருவமோ!--அதுவும்
வரையாமல் தானே வளருமோ!
வடிக்காமல் ஏதோ வடிவங்கள்--எதுவும்
படைக்காமல் உண்டோ சகலமும்!

இயங்கும் செயலும் உண்மையோ!--அனைத்தும்
இயக்கும் சக்தியும் ஒன்றுண்டோ!
இயற்கை அதுதான் மூலமோ--அறிவியல்!
இயக்கம் ஆதி பகவனோ!

கல்லிலும் செதுக்கும் விந்தையும்--கலை
சொல்லிலும் ஒருக்கும் சிந்தையும்.
எண்ணில் நிறுத்தும் ஒன்றையும்---சிலை
தன்னில் பொருத்தும் தெய்வமும்.

மண்ணும் கல்லும் கட்டிடமே!--கந்தன்
எண்ணும் போதே ஆலயமே!
கல்லாய் கண்டால் கல்லுதான்--நெஞ்சின்
உள்ளாய் கொண்டால் கண்ணனே!

கொ.பெ.பி.அய்யா.



Wednesday, 14 October 2015

விடை பெறூம் வேளை.

விடை பெறும் வேளை!

உதிர்ந்த மலர்கள்
உற்ற தாய் செடியிடம்
என்ன கூறி விடை பெறும்?

"கொடிதந்தாய் பூத்திருந்தேன்.
மடிதந்தாய் காத்திருந்தேன்.
பருவத்தின் வாசனையை
தெரிவித்தேன் தேடிவந்தான்.

ரீங்காரம் பாடிவந்தான்.
ஓங்காரம் கூடிவிட்டோம்.
காதலெனும் மந்திரம்
கண்டறிந்தோம் வண்டும் நானும்..

உண்டதன் நன்றிக்கு
தந்து போனான் சூலுக்கு
அரும்பியதுக் காய்க்கட்டும்!
திரும்பவதும் பூக்கட்டும்!

விடைபெறும் வேளைவரை
கடமைகள் தொடரட்டும்
பூமியதும் நிலையதே
சாமியதும் சுழலுட்டும்"

என்றே மலர் விடை பெற்று
கண்ணீரைக் காணிக்கையாய்
தந்துதிர்த்து செடி நீங்கி
தன்பயணம் முடித்திருக்கும்.

இப்படித்தான் உடலும் உயிரும்
அப்படித் துணிந்திருக்கும்.

"இதற்கு மேலும் வேண்டாம்
இந்த உலகம்.
இங்கே சொர்க்கம் இல்லை.
நரகம் மட்டுமே!

அதிவிரைவு செயற்கைமுறை
புதுவரவு வேளாண்மை
விதி முடிக்கும் நோயரக்கர்
வலிவதைத்து சிதைக்கிறார்.

செலவெட்டும் வரவில்லை.
உழவெட்டும் விலையில்லை.
மழையெட்டும் மரமில்லை
வளமெட்டும் நிலையில்லை.
நீருக்குப் போராடும்
நிலை வரும்முன்
இருவருமே ஒருவரையொருவர்
விட்டு விடுதலையாவோம்."

எனத்தான் துணிந்தும்
உடலும் உயிரும்
ஒன்றுக்கொன்று நன்றிக் கூறி
விடை பெற்றிருக்கும்.

கொ.பெ.பி.அய்யா.

சந்தித்த வேளை

சந்தித்த வேளை!

இரவும் பகலும் சந்தித்த வேளை
விடியலிடம் என்ன சொல்லி
இரவு பிரிந்திருக்கும்!

"இரவே நீ போ!போ!
கரிய இருளில் உனக்குள்
எதையெல்லாம் ஒளித்தாயோ
அதையெல்லாம் விட்டுவிடு!
அடைபட்ட எல்லாம்
விடுபட்டு ஒளிரட்டும்!
தடைபட்ட முடக்கம்
உடைபட்டு ஓடட்டும்!
அடங்கிய செயல்கள்
தொடரட்டும் தொடக்கம்!
வினைகளை முடுக்கிவிடு!
விடியட்டும் புத்துலகம்!"

எனத்தான் விடியல்
விரட்டியும் இருளை
விடுதலை பெற்றிருக்கும்.

"விடியலே நீ வாழ்க!இனி
வெளிச்சத்தில் உண்மையை
வெளிக்காட்டு!
உறக்கம் கலைத்து
உணர்வினை உசுப்பிவிடு!
மயக்கம் தொலைத்து
மனிதனை எழுப்பிவிடு!
விடுதலை விளக்கி
தொடுதலைக் காட்டிக்கொடு!
வேதம் ஆய்ந்தால்
பேதம் தீயும்.
ஆதி அறிந்தால்
சாதி மறையும்.
பொதுமறை நாட்டி
புதுவழி காட்டு!
ஒளிமுறை ஆண்டால்
இருள்திரை தீண்டாது"

எனச்சொல்லி இடித்துத்தான்
விடியலை விட்டும் 


இரவும் பிரிந்திருக்கும்!.

கொ.பெ.பி.அய்யா.

Tuesday, 13 October 2015

அடிமைதான் அடையாளமா.



எத்தனை முறை எச்சரித்தேன்
என்னை மதித்தாயா நீ?
வீணாசை விபரீத விளைவாச்சோ!-என
ஊழல் கைதியிடம் மனம்
சொல்லிக்காட்டி நொந்திருக்கும்.

இவன் உன் கட்சிக்காரன்
என்ற தகுதியைவிட இவனிடம்
வேறென்ன தகுதியுண்டோ!
சிந்திக்க விட்டனரா உன்னை?
இன்னும் அடிமைதானா நீ?
பழகிப்போன உன்னிடம்
உன்னுரிமையை நீ
சரியாகப் பயன்படுத்தெனச்
சொன்னால் கேட்கவா போகிறாய்-என
வாக்காளனிடம் வாக்குச்சீட்டு
சொல்லித்தானிருக்கும்.

பாவம் நீ!
நல்லாத்தான் எழுதியுள்ளாய்.
நானும் பெருமை அடைகிறேன்--ஆனாலும்
நீ இருக்கும் வரை என்னைத்
தேடமாட்டார்களே!-என
விரல்களிடம் எழுத்து ஆதங்கப்பட்டிருக்கும்.  . 

கொ.பெ.பி.அய்யா.

ஆசை ஆசை.

ஆசை! ஆசை!
இலக்கியம் செய்யத்தான் ஆசை! ஆசை!
இறப்பை வெல்லத்தான் ஆசை! ஆசை!
எழுத்தில் சொல்லத்தான் ஆசை! ஆசை!
கருத்தில் பரப்பத்த்தான் ஆசை! ஆசை!

ஆசை! ஆசை!
உலகம் சுருங்கத்தான் ஆசை! ஆசை!
கழகம் பெருக்கத்தான் ஆசை! ஆசை!
ஆட்சி விரியத்தான் ஆசை! ஆசை!
அகிலம் பரவத்தான் ஆசை! ஆசை!

Monday, 12 October 2015

இனிவருமோ இளமை!

இளமை நினைவுகள் 
எண்ண எண்ண இனிக்கும்.
இனி வாராதா என ஏங்கும்.
போனது போனதுதானே!
அசை போட்டு ஆன்மாவிற்கு 
ஆறுதல் தேடிக்கொள்ளலாம் 
வேறென்ன செய்யலாம்?


கவிஞனே!
நெஞ்சம் துடிக்க இடிக்கும் சொல் வீச்சு.
வஞ்சம் தீர்க்க உணர்த்தும் வரிகள்.
மஞ்சம் எறிந்துவிட்டு கொஞ்சுதற்கு வாவென
கெஞ்சும் உருக்கம் உதிர்க்கும் கண்ணீர் மொழிகள்!

மிஞ்சும் உயிர்களை கொஞ்சமேனும் காப்போம் வாவென
அஞ்சா நெஞ்சமாய் அறைகூவல் விடுக்கும் அன்பின் அலறல்.

எஞ்சிய கண்ணீரும் எண்ணில் சிந்தாதோ என்னில்!