Thursday, 25 October 2018

நாளை நமதல்ல.

நாளை என்பது சமாதானமல்ல.

நாளை என்பதும் சமாதானமல்ல.

நாளை என்பது சமாதானமல்ல.
கோழையின் நழுவலே நாளை எனும் சொல்லே.
பாலைக் வனத்தில் நீர் தேடல் போலே
நாளை என்பதும் கானல் நீர் தானே.

வாய்ச்சொல் வீரன் வாய் மொழி வாக்கு.
மாயமான் மாரீசன் பொய் வழி போக்கு.
தேனாய் ஒழுக்கும் தான்பேசும் அடுக்கு
தானாய் விழுங்கும் மீன்பாயும் வழுக்கு.

எல்லாம் அறிந்தவன் என்பவன் கூற்று
வல்லான் அறிவும் மழுங்கிடும் மாற்று.
நல்லவன் போன்ற நாடகப் பேச்சு.
நம்பினால் ஆண்ட நாடும் போச்சு.

கற்றதும் மற்றதும் கலைகளில் தெளிக.
உற்றதும் பெற்றதும் நிலைகளில் புரிக.
செத்ததும் உத்ததும் உணர்வினில் அறிக.
முத்ததையோ சொத்தையோ முனைவினில் முடிக.

கொ.பெ.பி.அய்யா.

Pitchiah Kpp at 23:48
சின்ன வயசு உறவுகள்.

என்னமோ தெரியல 
இன்னமும் மறக்கல.
சின்ன வயசு உறவுகள்
நெஞ்ச விட்டு அழியல.

பள்ளிக் காலம் பழகிய
கள்ளம் போல் அரும்பிய
உள்ளம் ரெண்டு நெருங்கிய
வெள்ளை க்காதல் மறக்கல.

அண்ணன் தம்பி பிறவிகள்
வண்ணம் இல்லா உறவுகள்
ஒன்று பட்ட பரிவுகள் 
துண்டு பட்டும் அழியல.

வாண்டுகளாய் நண்பர்கள்
கூண்டு விட்ட அன்பர்கள்
ஆலமர ஊஞ்சல் ஆட்டி 
ஆடியதும் மறக்கல.

பாலினம் வேற்றுமையை
வாலிபக் கதைகளை
தோழமை அரட்டைகள்
கேளிக்கை அழியல.

பள்ளி செல்ல மறுத்ததும்
துள்ளி ஆட துடித்ததும்.
வில்லர்களாய் விடலைகள்
அள்ளியதும் மறக்கல.

பள்ளிப் பாடம் பிடிக்கல.
வீட்டுப் பாடம் முடிக்கல.
வாத்தியாரு பயத்தில
ஓட்டம் இன்னும் அழியல.

கொ.பெ.பி.அய்யா.

அம்மா.

பாவம் அந்தப் பெண்மணி.!

ஜனநாயகம் பேசுவோர் பலர் ஜனநாயகம் மதிப்பதேஇல்லை.அது வெறும் பேச்சுக்கலை என்பதைப் புரிந்து கொள்ளாதவள் பாவம் அந்தப் பெண்மணி!

பழைய வரலாறை தெரிந்து புரிந்து கொள்ளாமல் ஒருவழி பாதையில் நுழைந்தவள் மறுவழிப் பாதை இல்லை என்று அறிந்து கொண்டபோது எந்த வழிப் பாதையில் நுழைந்தாளோ அந்த வழிப் பாதையில் எப்படியோ ஒருவிதமாக திரும்பி வந்ததும் அவள் நல்லநேரமே.எஞ்சியுள்ள நாட்களில் இனி தான் எண்ணியதைப் பெற முயற்சிக்கலாம்.அல்லது தனக்காகக் கொஞ்சம் வாழ்வதோடு நாட்டு மக்களுக்காகவும் வாழ்வது பற்றியும் யோசிக்கலாம்.

மகளே!நீ இருந்த இடம்.ஒரு தனியொரு ஏகாதிபத்தியம் நிறைந்த இடம்.அங்கே அவர்களின் சொந்தத்திற்கே எல்லா உரிமைகளும்.மற்றவர்கள் அவர்களுக்காக தங்களைத் தியாகம் செய்துகொள்ளத் துணியவேண்டும்.யாரும் தங்களுக்காக வாழக் கூடாது.அவர்களுக்காகவே மற்றவர்கள் வாழ்ந்தாக வேண்டும்.அதுதான் அவர்களின் இயக்கம் கொண்டுள்ள கொள்கை லட்சியம் எல்லாம்.அப்படி இருந்தால் அவர்களிடம தாக்குப்பிடிக்கலாம்.எப்போது அன்னியர் ஒருவர் அவர்களின் வாரிசை மிஞ்சுவதாக முந்துவாரோ அல்லது மக்கள் செல்வாக்கைப் பெறுகிறார் என்று தோன்றுவாரோ.அப்போதே அவர் ஓரம் கட்டப்படுவார் அல்லது தூக்கிவீசப்படுவார்.அப்படி வீசப்பட்டவர்கள்தான் புரட்சியார்,போர்வாளார் எனப்போற்றப்பட்டவர்கள் எல்லாம்.இன்னும் எத்தனையோ லட்சியவாதிகள் எல்லாம் அப்படித்தான் கழட்டிவிடப்பட்டனர் என்பதை நாடறியும்.ஆனால் பாவம் நீ ஏன் அறியவில்லை.

நீ ஏதோ ஒன்றை எதிர் பார்த்துக் காத்திருந்திருப்பாயானால் அது இதுவாகத்தான் இருந்திருக்கும்.ஏனென்றால் என்றும் இவர்களிடம் பொதுவான எதிர்பார்ப்பு எல்லோர்க்கும் இது ஒன்றுதான் நிச்சயம்.பாவம் யாரை நீ முந்த நினைத்தாயோ.?நூறோடு நூற்று ஒன்றாக இருந்திருந்தால் நீயும் வேரோடு விழுதாக அவர்களுக்கு தாங்கலாகவே இருந்து காலத்தை ஓட்டியிருக்கலாமே.சரி விடு என்றிருந்தாலும் ஒருநாள் இது நிகழ்வது உறுதிதான்,அது இன்று நிகழ்ந்த்ததும் நல்லதுதான்.

இனிமேல்தான் உனக்கு நல்லநேரம் ஆரம்பம்.நல்லஇடமாகபார்த்துஉன்னை இணைத்துக்கொண்டு இனியாவது உனக்காக முடிந்தால் நாட்டுக்காகக் கொஞ்சம் பயனுள்ள வகையில் வாழ்வாயாக.

கொ.பெ.பி.அய்யா.