Saturday, 30 April 2016

விழித்தெழு சிலிர்த்தெழு.

விழித்தெழு!சிலிர்த்தெழு!

விழித்தெழு மகனே!விழித்தெழு-உன்
வேளை வந்தது விழித்தெழு!
சிலிர்த்தெழு மகனே!சிலிர்த்தெழு-நீ
சிங்கம் என்று சிலிர்த்தெழு!

சுற்றிச் சுற்றிச் சூளுரைத்து-பகை
பற்றிப் பற்றிப் பாடறுத்து-
வெற்றி வெற்றி வினைமுடித்து-பறை
கொட்டிக் கொட்டு வென்றெடுத்து.

தமிழன் என்றொரு திமிரிருக்கு-உனக்கு
தருமம் என்றொரு தரமிருக்கு.
மானம் என்றொரு மதமிருக்கு-மரபு
வீரம் கொண்டெழு விடையிருக்கு.

செத்தது தமிழென்றோ கொக்கரித்தான்-அந்தச்
சிங்களன் சிறுபடை எக்கடையோ!
உத்தது உயிரென்றோ ஒப்பாரி--தமிழ்
பெற்றதும் பயமுண்டோ செப்பாரே!

பதவிக்கும் பொருளுக்கும் பற்றென்ன--இனம்
உதிரம் உனக்குள்ளே அற்றன்ன!
சிதையும் இனமங்கே செத்துவிழ--மனம்
பதைக்கும் குணமெங்கே பட்டுஎழ!
பற்றிச் சுற்றித் தீக்காடு--பரவி
முற்றி முற்றப் போக்காடு.
எட்டித் தீர்க்கத் துணிவில்லையோ-கை
கட்டிப் பார்க்கப் பதைக்கலையோ!.

நடந்தது எல்லாமே விதியென்றோ-அன்று
கிடந்ததும் செல்லாமை மதியன்றோ!
அதிகாரம் எதற்கு ஆளத்தானோ-அதற்கு
துதிராகம் உமக்கு வாழத்தானா!

கொடுமைகள் சொல்லி அழவேணும்-இங்கு
அடிமைக் கிலையோ உறவேணும்
படமோ பாவக் கூத்தோ-ஈழம்
விடைதான் விடிவே மகனே!.

அரசு என்ற பராசக்தி-ஆளும்
ஆட்சி மன்ற தீர்மானங்கள் -
நிரப்பிய என்ற தாளன்று--ஈழம்
மீட்சி வென்ற மேலொன்று..

கொ.பெ.பி.அய்யா.

Thursday, 28 April 2016

பார்த்து விலகு.

பார்த்து விலகு!

பார்த்து விலகு மனிதா- அரசியல்
பைத்தியம் திரியும் பொதுவா.
மனிதன் போலவே பேசும்-உன்னை
மயக்கத் தான்வலை வீசும்.

ஆவிகள் அலையும் மனிதா-அரசியல்
பாவிகள் அவரே அறிவாய்.
ஆசைகள் காட்டி மயக்கும்-உன்னை
அறிவினை நீற்றி வசக்கும்.

நல்லவர் போன்றே மனிதா-அரசியல்
நாடகம் செய்வார் புரிவாய்.
சொல்வோம் செய்வோம் என்பார்-உன்னை
கொள்ளை அடித்தே தின்பார்.

பொதுநலம் செத்தது மனிதா-அரசியல்
சுயநலம் தானது தெளிவாய்.
தொழிலாய் ஆனது அரசியல்-உன்னை
துறவியாய் விட்டது தெருவில்.

தேர்தல்க் காலம்  மனிதா-அரசியல்
தீர்தல்க் கோலம் வரைவாய்.
மயக்கும் மொழிகளைத் தள்ளு-உன்னை
பயக்கும் வழிகளை வெல்லு.!

பாசத் தமிழா மனிதா- அரசியல்
தோசம் கலைவோம் விரைவாய்.
சத்தியம் நெஞ்சில் ஏற்று-உன்னை !
சரித்திரம் ஆக்க மாற்று.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 25 April 2016

முன்னேர்.

முன்னேர் !

அழகு அழகு ஆட்சி அழகு. 
நிலவும் அவரின் அறவழி உலகு.
பழகு பழகு பன்திறம் அழகு.
என்றே செலவின் பின்வரும் உலகு.

திருவோர் எல்லாம் வாழ்த்தும் அழகு
மறுவோர் சொல்லும் மாற்றம் உலகு.
உலகம் போற்றும் வள்ளுவன் அழகு
உழவின் ஏற்றம் மாட்சயின் உலகு.

அமைதிப் பூங்கா அமைவது அழகு.
சமைக்கும் பாங்கா தொழிலதன் உலகு.
சூழாண்மை காக்கும் மேலாண்மை அழகு.
நூலாண்மை ஆற்றும் ஆளாண்மை உலகு.

ஏழையர் நன்மை தேர்வது அழகு.
ஆள்வகை செம்மை  நேரது உலகு.
முன்னேர் ஓட்டும் தன்நேர் அழகு.
முன்னோர் காட்டும் பின்னார் உலகு.

காலம் சொல்லும் கட்டிய அழகு.
ஆளும் வல்லம் எட்டிய உலகு.
ஊளைக் கோழையர் ஓட்டம் அழகு.
நாளை மூளையர் கூட்டம் உலகு.

கொ.பெ.பி.அய்யா.


Sunday, 24 April 2016

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்/.

இலை துளிர்த்து இல்லம் செழிக்கட்டும்
வளம் கொழித்து வாழ்வு மலரட்டும்.
நிலை உயர்ந்து நெஞ்சம் நிறையட்டும்
நலம் நிகழ்ந்து நாடு சிறக்கட்டும்.

உழவு பிழைத்து உரிமை நிலைக்கட்டும்
பழமை படித்து பசுமை தழைக்கட்டும்
நதிகள் இணைந்து நன்செய் விரியட்டும்.
விதிகள் திருந்தி வேளாண்மை திரும்பட்டும்.

இருளும் அகன்று பகலும் போன்றாகட்டும்.
மருளும் மடிந்து அருளும் தோன்றட்டும்.
வறுமை தகர்ந்து அருமை ஊன்றட்டும்.
பெருமை நுகர்ந்து சிறுமை மாண்டாகட்டும்

காந்தி சொன்னதும் கனவில் வென்றாகட்டும்.
காட்சியில் கண்டதும்  நினைவில் நின்றாகட்டும்.
ஆழ்ந்த இரவிலும் அணிந்த கன்னியாகட்டும்
ஓய்ந்த தெருவிலும் உலாவலாம் என்றாகட்டும்.

ஆட்சித் திறனதும் மாட்சிமை அரணாகட்டும்.
ஆளுமை உரம்கண்டு அற்றது பயமாகட்டும்..
பொற்கையன் ஆட்சிபோல் போற்றவும் சிறப்பாகட்டும்.
பெற்றதாய் நேர்த்திபோல் பெற்றதும் வரமாகட்டும்..

கொ.பெ.பி.அய்யா.