ஆடும் வண்டு!
சாயம் பூசியும் உதடுகளை
காயம் செய்யாதே நீயுமே!
நேயம் வாசித்துன் இதழ்களை
சிவக்க வைப்பேன் நானுமே!
மையும் வரைந்துமே புருவங்களை
பொய்யும் செய்வதேன் நீயுமே!
மெய்யில் சாய்ந்தென் விழிகளால்
பைய வரையுவேன் நானுமே!
சாந்து இட்டுமே நெற்றியிலே
சாயத் தயக்கமோ நீயுமே!
முகர்ந்து முத்தி முத்திரையாக
பகர்வேன் பொட்டு நானுமே!
நாணம் மூடிய பெண்மையிலே
வாழும் அழகு நீயுமே!
தேடும் வண்டு கூடும் பூவிலே
ஆடும் போதையில் நானுமே!
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment