Thursday, 26 December 2013

கவிஞன் புலம்பல்.

கவிகளைப் பூப்போம்.

அழகானக்  கவிதை,
அற்புதமான வரிகள்,
ஆழமானக் கற்பனை,
புதுமையான சிந்தனை,
புரட்சிகரமான கருத்து.;
இன்னும் என்ஆன்மா 
ஒன்னும்  தேடவில்லையே!

ஏனென எண்ணும் போது
எனக்கே என் மீது
எரிச்சல்தான் ஏற்படுகிறது.

வளரும் கவிஞனவன்
புலம்புவதும் இப்படித்தான்.
சுயபரிசோதனை செய்தும்
முயன்றும் முன்னேறுவான்.

வளர்த்தும் தன்னைத்தான்
உழுதும் பண்செய்வான்.
வளம்மெய் நிலந்தன்னில்
நலம்பெய் உளம்கொய்வான்.

கற்பனைத் தோட்டத்தில் 
பொற்கவிகள் பூக்கட்டும்
சொற்குவி வண்டுகள்
அற்புதங்கள் பாடட்டும்.

கொ.பெ.பி.அய்யா..







No comments:

Post a Comment