விடியட்டும் விலகச்சொல்லு!
மக்களுக்கே உழைத்திட்ட
மாமனிதம் போற்றிட்ட
மறுவில்லா அரசியல்--இன்று
மறைந்தவொரு விரசியல்.
காந்தியர் காமராசர்
ஏந்திய தேசியம்.
குடும்பவியம் ஆனதோ-இன்று
தடமாறிப் போனதோ!
குடும்பங்களே கட்சிகள்.
இடும்புகளே இயக்கங்கள்.
உடும்புப்பிடி நாற்காலி-இன்று
படும்பாடு போர்க்கோலம்.
விடியலைக் காட்டியவர்
விருதுபட்டிக் கோட்டியவர்.
பொடியனிடம் தோற்றபாவம்-இன்று
எறுமைகள் மேயும்சாபம்.
ஏமாறுந் தமிழனோ
இழக்கின்றான் சுதந்திரம்..
சோமாறும் எவனெவனோ-இன்று
கொழுக்கின்றான் தினந்தினம்.
அடிமைகளாய்த் தொண்டன்கள்
அடியாளாய்த் தண்டங்கள்.
கொடியேந்தும் கைமரங்கள்-இன்று
கொடிக்கென்ன கொள்கைகள்!
அடிமைத்தனம் ஒழித்திடத்தான்
உரிமைக்கணம் விழித்தது.
வழிவழித் தலைமுறைக்குள்-இன்று
ஒளித்தடிமை இலைமறைக்குள்.
விடியலைத் திருடத்தான்
விட்டிலைச் செருகுகிறான்!
விடியட்டும் விலகச்சொல்-இன்று
முடியட்டும் கழுவித்தள்!
வெக்கங்கெட்ட பயணங்கள்
நக்கி வாழும் நயனங்கள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்-இன்று
சிக்கி மீட்பு எப்போ!எப்போ!
மாற்றமென்றால் என்னய்யா?
மாற்றமொன்று சொல்லய்யா!
நாட்டாத புதியவன்-இன்று
நாட்டுவது தானய்யா!
விடுதலை விளைத்திட
விதையான உயிர்களே
விளைந்துதான் எழுவீரோ-இன்று
விடியலாய் விளைவீரோ!
கொ.பெ.பி.அய்யா..
மக்களுக்கே உழைத்திட்ட
மாமனிதம் போற்றிட்ட
மறுவில்லா அரசியல்--இன்று
மறைந்தவொரு விரசியல்.
காந்தியர் காமராசர்
ஏந்திய தேசியம்.
குடும்பவியம் ஆனதோ-இன்று
தடமாறிப் போனதோ!
குடும்பங்களே கட்சிகள்.
இடும்புகளே இயக்கங்கள்.
உடும்புப்பிடி நாற்காலி-இன்று
படும்பாடு போர்க்கோலம்.
விடியலைக் காட்டியவர்
விருதுபட்டிக் கோட்டியவர்.
பொடியனிடம் தோற்றபாவம்-இன்று
எறுமைகள் மேயும்சாபம்.
ஏமாறுந் தமிழனோ
இழக்கின்றான் சுதந்திரம்..
சோமாறும் எவனெவனோ-இன்று
கொழுக்கின்றான் தினந்தினம்.
அடிமைகளாய்த் தொண்டன்கள்
அடியாளாய்த் தண்டங்கள்.
கொடியேந்தும் கைமரங்கள்-இன்று
கொடிக்கென்ன கொள்கைகள்!
அடிமைத்தனம் ஒழித்திடத்தான்
உரிமைக்கணம் விழித்தது.
வழிவழித் தலைமுறைக்குள்-இன்று
ஒளித்தடிமை இலைமறைக்குள்.
விடியலைத் திருடத்தான்
விட்டிலைச் செருகுகிறான்!
விடியட்டும் விலகச்சொல்-இன்று
முடியட்டும் கழுவித்தள்!
வெக்கங்கெட்ட பயணங்கள்
நக்கி வாழும் நயனங்கள்.
மக்கள் பாவம் அப்பாவிகள்-இன்று
சிக்கி மீட்பு எப்போ!எப்போ!
மாற்றமென்றால் என்னய்யா?
மாற்றமொன்று சொல்லய்யா!
நாட்டாத புதியவன்-இன்று
நாட்டுவது தானய்யா!
விடுதலை விளைத்திட
விதையான உயிர்களே
விளைந்துதான் எழுவீரோ-இன்று
விடியலாய் விளைவீரோ!
கொ.பெ.பி.அய்யா..