பாரத விலாசம்.
கானாப்பாட்டு சென்னைதான்--தமிழ்
தேனாக்கொட்டு மழலைதான்.
கானான்னா என்னதான்--சென்னை
கானமுன்னா இனிமைதான்.
சென்னைத் தமிழ் ஓசைதான்--இனிமை
பிள்ளைத் தமிழ் ஆசைதான்.
கன்னித் தமிழ் அருமைதான்--பழமை
வெள்ளைத் தமிழ் பெருமைதான்.
கானான்னா என்னதான்--சென்னை
கானமுன்னா இனிமைதான்.
சென்னைத் தமிழ் ஓசைதான்--இனிமை
பிள்ளைத் தமிழ் ஆசைதான்.
கன்னித் தமிழ் அருமைதான்--பழமை
வெள்ளைத் தமிழ் பெருமைதான்.
பல
மொழிகள் பேசி வாழும்--சென்னை
பாரதத்தின்
விலாசம்.
இந்தியத்தின்
ஒருமை போற்றும்--சென்னை
ஒன்றுதானே பெருமை காட்டும்.
வெள்ளக்காரன்
வந்தவன்--இடத்தை
விலைக்கு
வாங்கிக் கொண்டவன்.
விற்றவன் பேராலே--சென்னப்பன்
பட்டணம் என்றானே,
விற்றுப் பிழைக்க வந்தவன்--நாட்டை
மொத்தமாக அள்ளினான்.
விட்டு வெள்ளை போனாலும்--கொள்ளை
மட்டும் மீளவில்லையே!
மொத்தமாக அள்ளினான்.
விட்டு வெள்ளை போனாலும்--கொள்ளை
மட்டும் மீளவில்லையே!
அள்ளுகிறார்
கொள்ளையோ--விற்று
அடிக்கணக்கில்
மண்ணையோ!
உள்ள தமிழ் ஏழையோ--இன்னும்
முடக்கும் நடை பாதையோ!
உள்ள தமிழ் ஏழையோ--இன்னும்
முடக்கும் நடை பாதையோ!
மதரசாக்கள் ஜோரு-அதனால
மதராஸ்னு பேரு
மதராஸ்னு பேரு
சாதி மதம் பாவம்--அத்த
சாவடிச்சது கூவம்.
சோழ
பல்லவர் ஆட்சி--சென்னை
சூழக்
கோவில் ஆச்சி.
கலை
வளர்ந்த ஊராம்--இன்று
கலை மறந்த பேராம்.
நாலு
நூறு ஆண்டு-எட்டும்
நமது
சென்னை வயது.
கூவம் அடையாறு--மணக்கும்
பாவம் சென்னை ஊரு.
பாவம் சென்னை ஊரு.
அண்ணாசாலை நீளம்--நூறு
அண்ணாமலை பாலம்
வானம் ஓட்டை ஆச்சு--அடுக்கு
மாடிக் கூட்டை தேச்சு.
மாடிக் கூட்டை தேச்சு.
கல்விக்கான
கழகங்கள்--இங்கு
காலம்
வென்ற சின்னங்கள்.
சொல்லித்தரும்
பெருமை-என்றும்
அள்ளித்தரும் அருமை
கோவிலுன்னா
கோபுரம்--அது
கூறுவதும்
கம்பீரம்.
இந்தியாவின்
வாசலாம்--அது
இந்த
சென்ட்ரல் ஸ்டேசனாம்.
எக்குமோரு
பாரு---அது
தெற்கு தமிழ் தேரு.
எத்தனைதான் ரயிலு--கூட்டம்
அத்தனையும் புள்ளு.
அத்தனையும் புள்ளு.
ஆசியாவில்
பெருசுதான்--அது
தேசியத்தின்
புதுமைதான்.
கோயம்பேடு
தாசுமகால்--இது
கூடும்
பஸ்டாண்டுதான்.
சென்னையின்னா
மெரினாதான்--தமிழ்
அன்னை
மடி அங்கேதான்!
தமிழுயுரப்
பிறந்தவர்கள்--அவள்
தாலாட்டில்
ஆறுகிறார்.
வள்ளுவரின்
கோட்டம்--கலை
வண்ணத்தமிழ்
தோட்டம்.
சொல்லும்
குறள் புகழை---ஆனால்
சொல்ல மறந்தார் தமிழை.
இயல் இசை நாடகங்கள்.---தமிழ்
கலை வளர்க்கும் மன்றஙகள்
சினிமான்னா சென்னைதான்--தமிழ்
நடிகை மட்டும் இல்லைதான்.
சினிமான்னா சென்னைதான்--தமிழ்
நடிகை மட்டும் இல்லைதான்.
திராவிடத்தின்
தலை நகராய் -அன்று
தேர்ந்திருந்த
சென்னையாய்
தமிழுக்கே
சொந்தமாய்--என்று
தலை
நிமிரும் சொல்லுவாய்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment