Wednesday, 18 December 2013

நான் வளர்கிறேன்.

வாழ்க வளர்க!

எழுத்தில் நான்
வளர்கிறேனோ
இல்லையோ!
நானதிலே நலமாக
வாழ்கிறேன்..

இலக்கியம்
என்னையேற்குமோ
இல்லையோ!
நானதன் காலடியில்
கிடக்கிறேன்..

வாசகர்கள்
என்னை வாசிக்கின்றனரோ
இல்லையோ!
நானவர்களை
நேசிக்கிறேன்.

கவிஞர்கள்
என்னை வரவேற்கினரோ
இல்லையோ!
நானவர்களை
வணங்குகிறேன்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment