காதலா? காமமா?
காதலைக்
காமம் எனக்
கருத்துப்
பிழை செய்யாதீர!
உறவுகள்
கலப்பதை
உள்ளங்கள
இணைவதை--தூண்டும்
உணரச்சிகளின்
ஈர்ப்பென
உளறாதீர்
உளறாதீர்!
அழகுக்கு
மயங்காது
அலையாது ஆசைகொண்டு.
உடல்தீண்டத்
துடிக்காது
உயிர்தொடும் உயிரது--காதலை
உணர்ச்சிப்ப்சி
காமமென்று
ஒப்பிடும் பாவம் வேண்டாம்.
மனந் தழுவிப் பேசுகின்ற
மனிதருக்குள்
வாழுகின்ற
புனிதமெனப்
போற்றுகின்ற
இனமறியாக் காதலை--காமம்
பாலினக்
கவர்ச்சியெனப்
பைத்தியராயப்
பிதற்றாதீர்!
உறவுக்குக்
குளிர்ந்திடும்
பிரிவுக்குச்
சுட்டிடும்
வரவும் செலவும் எனவும்
கரவிலாக் காதலை--இயல்
காமமென வரணம் பூசி
தீமையும் செய்யாதீர்!
உயிர்கள்
கலந்திடும்
உணர்வுகள்
மலர்ந்திடும்
இயல்புகள்
புரிந்திடும்
இயற்கைக்
காதலை--தெய்வ
தர்மமாய் போற்றுங்கள்.
கர்மமாய் ஏற்றுங்கள்.
உலகம் நிலைத்திட
உறவுகள் தழைத்திட
கலகம் மறந்திட
கருணை நிறைந்திட--இன
பேதங்கள் வீழ்த்துவோம்.
காதலை வாழ்த்துவோம்.
கொ,பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment