Saturday, 21 December 2013

பாவம் பாரதி!



பாரதியே ந்தாலும்!

பாரதியே ந்தாலும்
பாட்டெழுதித்  தந்தாலும்
யாரதில் கவனம் வைப்பார்
நாட்டோரே சொல்லுங்கள்?

அந்திக்காலம் வழியனுப்ப 
அவனுக்கன்று ஆறுபேர்தான்.
இந்தியாவை விழிக்கச்செய்ய
இவன்பட்ட பாடு என்ன?

மனம் படும் நிகழ்வுகள்-
கணம் விடும் அறிவுகள்-
புணர்ச்சி இடும் எழத்துக்கள்-
உணர்ச்சி தொடும் கவிதைகள்.

கவிஞனென்ன பாவம் செய்தான்?
கருத்தைத்தானே சொல்ல வந்தான்.
இருக்கும்வரை வறுமை தந்தோம்.
இறந்தபின்னே பெருமை கொண்டோம்.

தமிழுக்கென்றும் அருமை செய்வார்-
தரணிநின்றும் விதிகள் சொல்வார்.
கமழும் புகழ் கவிஞர்களின்
அமுதக்கவி அறிவில் வைப்போம்.

கொ.பெ.பி.அய்யா.





No comments:

Post a Comment