சோற்றலைகள்..!
உழுது விதை விதைத்து
உள்ள களை தானெடுத்து
அழுத பிள்ளை அமர்த்தாமலே
அக்கறையாப் பாடுபட்டு
வளர்த்த பயிர் வாடி நின்றால்
வாடாதோ கடன் நெஞ்சம்!
காற்றலைகள் நளினம்பாட
நாற்றலைகள் நடனமாட .
கடலைகள் மிஞ்சும் வண்ணம்
கழனியெங்கும் கூத்தாட
சோற்றலைகள் சுமந்து வரும்
தோற்றமுந் தொலைந்ததோ!
நாட்டுப்புறப் பாட்டெல்லாம்
கேட்ட அந்த நாளெல்லாம்
வாட்டந்தீர உழைப்பெல்லாம்
ஈட்ட நல்ல மெட்டெல்லாம்
திரை காணும் அதிசயமாய்
திரிந்ததென்ன சோகமோ!
தண்ணீரோ கண்ணீரோ
உண்ணீரும் பஞ்சமோ!
வெந்நீரோ பாவியரின்
செந்நீரும் சுடுகிறதே!
அந்நியரும் யாரடா?
அந்நியன் ஒழிந்த பின்னும்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment