புதுப் பெண்ணும் பேசலாகுமோ!
தென்றலே என்னைத்
தீண்டாதே- கண்டால்
அவருங் கோவிப்பார்.
எவருந் தீண்டா
என்னையே -அவருந்
தழுவ அனுமதியேன்.
பெரியவர்கள் வந்து
பேசட்டும் -பேசி
நாளுங் குறிக்கட்டும்.
அதுவரை அவரும்
பொறுக்கட்டும்--ஆற்று
நீரல்ல நானுந்தான்.
போகிற போக்கில்
கூறி விடு--புதுப்
பொண்ணும் ரொம்பப்
பேசலாகுமோ!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment