Friday, 20 December 2013

உஷார்.

உஷார்!

சுயநலக்   கூட்டங்கள் 
சுற்றிச் சுற்றி  வளையுமே..
தயக்கமில்லாமலே பொய்
தைரியமாய்  சொல்லுமே.

உனக்காக  உழைப்பதாக
உண்மைகளை மறைக்குமே.
தனக்காக  உன்னையுந்தான்
தர்மம் விலகச்  செய்யுமே.

செய்யாததை செய்ததாக
சீண்டி  யுன்னை கெடுக்குமே.
பொய்யானதை புரிந்தவரை
புறக்கனித்தால்  நல்லதே..

கொ.பெ.பி.அய்யா.






 



No comments:

Post a Comment