Wednesday, 18 December 2013

இதய சங்கமம்.

இதய சங்கமம்!


இரும்புக்கோட்டை எதற்காகும்
துருவழிக்குமே---கற்பினும்
சிறப்பான தூய நட்பே
உறுதிக் காப்பாகும்!

பிறைபோன்று வளர்வதுதான்
நிறையும் நட்பாகும்--அறிவு.
குறைந்தோரின் பழக்கமோ
கரையும் நிலவாகும்!

படிக்கப்படிக்க ஞானந்தரும்
வடித்த நூலது--அன்பில்
பழகப்பழக பழமை கூடும்
வளமை நட்பாகும்!

சிரித்துப்பழக நண்பரென்றால்
கிறுக்கன் போதுமே--தவறு
இடித்துக்குட்டித் திருத்துவோரே
இயல்பு நண்பராம்!

நேரே கண்டு தழுவுதல்தான்
நட்பு என்றில்லை--நேர்
எண்ணங்களே இருந்தாலாகும்
இதய சங்கமம்!

முகம் பழகும் பழக்கமெல்லாம்
முகவுறை மட்டும்---காதல்
அகம் தழுவும் கேண்மையே
ஆன்ம நட்பாகும்!

நல்வழிக்கு  நடத்துபவன்
நல்ல நண்பனாம்---அவன்
அல்லல் நேரும் போதுங்கூட
தோள் கொடுப்பானாம்!

தன் துயரில் உழ்ல்வதாக
தானே துடிப்பான்--மென்மை
பெண் மானங்காப்பது போல்
கண்ணனாவானே!

நட்பினும் உயர் மேன்மை
நடப்பனில் உண்டோ--அது
எப்போதும் உதவத்தேடும்
ஏட்டியம் வங்கி!

அளந்தாய்ந்து தொடர்வதல்ல
ஆக்கமுறும் நட்பாம்---வெறும்
அலங்காரப் பேச்செல்லாம்
ஆவதில்லை நட்பாம்!


கொ.பெ.பி.அய்யா.










No comments:

Post a Comment