Wednesday, 18 December 2013

தண்ணீர் குடமெடுத்து.....தெம்மாங்ஙகு.

தண்ணிக் குடம் எடுத்து(தெம்மாங்கு)

தண்ணிக் குடம் எடுத்து
தனிவழியே போற புள்ள!
எண்ணி அடி எடுத்து
எண்ணுவதும் என்ன புள்ள?
முன்ன ஒளிச்சு வச்சு
முன் னழகு மறச்சயோ!.
பின் னழகு அள்ளுதடி-பாவி
என்னை அது கொல்லுதடி..-

எண்ணியும் நெனச்ச முகம்
தண்ணி யிலும் தெரிஞ்சிருச்சோ!
உன்பு ருவ மையெடுத்து
என்னுருவம் வரைஞ்சிருச்சோ!
கண்ணு படப் போகுதுண்ணு
கையலம்பி அழிச்சிரிச்சோ
பின்னும் மனசு தானே--எழுதி
உன்னுள்ளே  பதிஞ்சிரிச்சோ!


மச்சான் இருப் பேன்னு
மறச்சு சாக்குச் சொல்லி நீ
தண்ணிக் குடம் இடுக்கி 
தண்ணி யோட சிறுக்கி நீ
தண்ணிக்குப்போறேன்னு
கன்னி நீ வந்தயின்னா
எண்ணிச் சிரிப்பாரடி--அதில்
என்னை இழுப்பாரடி. 

எனக்கும் மீச அரும்பலயோ!
உனக்கும் ஆச புரியலயே !
பின்ன என்ன இழுக்குதடி
என்ன அது காந்தமடி!
தின்னத் தான துடிக்குதடி
சித் தெறும்பு கடிக்குதடி.
என்ன நானும் சொல்வனடி-மனசு
என்னென் னமோ பண்ணுதடி.

கானக் கருங் குயிலே!
மானே அருங் கிளியே!
தேனே தீங் கனியே!
திகட்டாத செங் கரும்பே!
பேசா மப் போனயின்னா
தாங்காது மனசு மீனா!
கூசாதடி  நீயும் வீணா!--முத்தம்
கொடுப்பதாரு நானா நீனா?

அன்னம் போல் நட நடந்து
என்ன நீ  கட கடந்து
சின்னச் சிரிப் புதிர்ந்து
மின்னும் மனம் புரிந்து.
மருகியுன்ன நானும் தேடி
உருகு றேனே மானே வாடி! 
நின்னு ஒன்னு சொல்வாயடி --இல்ல
கொன்னு மண்ணு தள்வாயடி.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment