Friday, 20 December 2013

அப்பனும் சுப்பனும்.

அப்பாவின் அருமை.

அப்பாவின் அருமை புரியும்
அம்மாவின் பெருமைச் சிரிப்பில்
சுப்பனின் திருமை தெரியும்--நல்ல
அப்பனின் பொறுமை வளர்பபில்.

காலமெல்லாம் கற்பனையில்
கோலமாய்க் கொண்டவனில்.
சீலமாய் அவள் தயவில்--உயிர்த்தான்
வாலறிவன் வேண்டித்தனில்.

பின் வாழும் உலகினுக்கு
தன் பேரு விளங்குதற்கு                                   நன்மகவு பெறுவதற்கு--நல்லாளை
தான் மணந்தான் வாழுதற்கு.

கருவறையிற் சுமந்தாளை
கனவோடு அணைந்தானை
உருவாக விதைத்தானை--போற்றுப்
பிரம்மனே அவன்தானை.

நாளெல்லாம் உழைத்திட்டான்.
தான் வாழ மறந்திட்டான்..
வாழ்வாக மகவைக கண்டான்--வாரிசே
வளர்நதிட வாழ்ந்திட்டான்.

பையதைச் சுமந்திட்டான்.
படிப்பினைத் தந்திட்டான்.
வையத்தில் உயர்த்திட்டான்--பிள்ளை
வளர்ச்சியில் நிறைந்திட்டான்.

உலகினை உணர்த்தினான்.
பழகிடப் பழக்கினான்.
விலக்கிட வேண்டாமை---தனையே
நிலையாக்கிச் செலுத்தினான்.

ஆதாரங் காட்டினான்.
அறிவொளி ஏற்றினான்
சேதாரம் இல்லாத--உயரச்
செயல் முறை ஊட்டினான்

ஆன்றோரே சூழ்ந்திருக்க
அவை முந்தி மகனிருக்க
ஈன்றாரைப் பிறர் வியக்க--மகிழ்ந்திட்டான்
சான்றோனாய் நிலம் மதிக்க.

கையிரண்டைப் பற்றியே
மெய்தழுவ அணைத்துமே
செய்நன்றி செய்வனென்றே--தந்தை
சேவடித் தொழுதுதிர்த்தான்.


கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment