Sunday, 22 December 2013

கானாப் பாட்டு

அய்யோ பாவம்!!

கானாப்பாட்டுத்தானா--சும்மா
கலக்குறேனா நானா!!
வீணாப்போனேந்தானா!--அடியே
வெளியே வாயேன் மீனா!

கோயம் பேடு சந்தை-அங்கு
கூடுது  மாடு மந்தை!
மனசு மேயுது சேர்ந்தே-தினம்
வாடுது உன்னச் சுமந்தே!

கூவம் நதியும் மணக்கும்--நீ
குங்குமங் கரைச்சா சிவக்கும்!
பாவந் தீரும் குளிச்சா- உன்
பாவாடை துவச்சி நனைஞ்சா.

நிறைஞ்சி ஓடுது சேறு-நித்ய
ஜீவ அடையாறு!
சாக்கடைப் போக்குச் சாவாறு--என்
போக்கடை இதுவா வெளியேறு!.

கொடுங்கை யூரு குப்பை--ஊரு
குடலப்புரட்டுது கப்பே!
படுத்தேன் இங்கே இப்பே--ஒரு
பாட்டும் பாடடி ஒப்பே!

அய்யோ பாவம் தானானேன்--இன்று
மெய்யாக் கூவம் நானானேன்!
பொய்யே போதை சுகமே---மீனா
செய்யுங்காதல் நிசமோ!


கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment