பொன்னாகப் பேணி எல்லாம்.
நொடிகளெல்லாம் படிகள்
பழகி ஏறினால் பாதகமில்லை.
கடிதெனத் தயங்கினால்
காலம் உனக்கில்லை.
கல்லும் கலைவடிவாகும்.-அது
செதுக்கப் படும்போது..
சொல்லும் இலக்கியமாகும்--அது
விதையாய் விளையும் போது.
எண்ணம் துணையாகும்
எழுந்திடும் போது.
மண்ணும் பொன்னாகும்-அதை
உழுதிடும் போது.
உன்னால் முடியும் நன்மை
பொன்னாகப் பேணியெல்லாம்
இந்நாளே தொடர்கவே --உன்
பின்னாளும் வாழவே!
வேராய் வாழ்ந்திரு
வினையாய் விளைந்திரு!.
உலகே அழுதிடும்--உன்னை
இழந்திடும்போது
கொ.பெ.பி.அய்யா
நொடிகளெல்லாம் படிகள்
பழகி ஏறினால் பாதகமில்லை.
கடிதெனத் தயங்கினால்
காலம் உனக்கில்லை.
கல்லும் கலைவடிவாகும்.-அது
செதுக்கப் படும்போது..
சொல்லும் இலக்கியமாகும்--அது
விதையாய் விளையும் போது.
எண்ணம் துணையாகும்
எழுந்திடும் போது.
மண்ணும் பொன்னாகும்-அதை
உழுதிடும் போது.
உன்னால் முடியும் நன்மை
பொன்னாகப் பேணியெல்லாம்
இந்நாளே தொடர்கவே --உன்
பின்னாளும் வாழவே!
வேராய் வாழ்ந்திரு
வினையாய் விளைந்திரு!.
உலகே அழுதிடும்--உன்னை
இழந்திடும்போது
கொ.பெ.பி.அய்யா
No comments:
Post a Comment