முயற்சிகளே
பயிற்சிகள் !
இறைவன் ஒருவன்
இருக்கின்றான்,
அருளால் அவனே கொடுக்கின்றான்.,
என்றே படுத்தும் கிடந்திட்டால்--தானே
எந்தப்
பருப்பும் வேகாதே.
உணவைப்பெறவும் பயிர் செய்யணும்
உழவர் அதற்கும் முயன்றிடனும்.
கனவையுங்கூட
காண்பதற்கும்--நீயே
கண்ணில் உறக்கம் தூண்டிடனும்..
செத்த எலிக்கும் விலையுண்டு.
விற்றுப் பெருக்கிய கதையொன்று.
பூனைக்காரன் தேவை கண்டு--வளர்வான்
மூளைக்காரன் காசு வென்று.
எலிவிற்ற காசில் வைக்கோலும்
அதுவிற்ற இலாபம் கைமேலும்.
சில்லறை பெருகி பணமாகும்--அன்று
சொல்லுற பெயரெல்லாம் அவனாகும்.
பூனைக்காரன் தேவை கண்டு--வளர்வான்
மூளைக்காரன் காசு வென்று.
எலிவிற்ற காசில் வைக்கோலும்
அதுவிற்ற இலாபம் கைமேலும்.
சில்லறை பெருகி பணமாகும்--அன்று
சொல்லுற பெயரெல்லாம் அவனாகும்.
வீணில் எதுவும் ஆவதில்லை
பேணும் செயலும் தோற்பதில்லை.
ஒன்றில் முயன்று மேலொன்று--தொடரும்
நன்றில் உயரும் நாளொன்று.
விற்று விற்று
வியாபாரியாவான்.
கற்று கற்று அதிபருமாவான்.
முயற்சிகள்தானே
பயிற்சிகளாகும்--அயரா
பயிற்சிகள்தானே
திருவினையாகும்..
கொ.பெ.பி.அய்யா.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment