பாவம் விடாது!
பாவிகளே! பாவிகளே! சண்டாளப் பாவிகளே!
பாவம் சும்மா விடுமோடா சிங்களப் பேய்களே!
சாபம் என்றும் பொய்க்காது சாவும் வீணாகாது.
தீபமதும் தீயும்முன் தீவிழுங்காத் தீராது..
உயிருடன் விளையாட்டா வயிரிங்கு எரியுதடா!
உயிரென்ன மயிராடா!உருப்படாப் பாவிகளா!
தின்னஉயிர் எத்தனை தீர்ந்ததோ வெறியுனக்கு?
கொன்றஉயிர் அத்தனையும் என்னபாவம் செய்தது?
தமிழென்ன அனாதையா தர்மந்துணை இருக்குது.
நிமித்தங்கள் கணக்குண்டு நேரம்வரை காத்திரு!
பதிலென்ன கூறுவாய் பலிகொண்ட உயிர்களுக்கு.
விதியென்ன ஆறுமா வினையறுக்கப் பொறுத்திரு!
கோடிகோடி உயிர்களை கொண்டமகா சக்தியை
கூடிக்கூடி ஒன்றென குவிந்தமாக் காளியை.
தேடித்தேடி அழித்தாலும் கூடிக்கூடி தழைக்குமே!
ஓடிஓடி ஒளியவும் உனக்குஇடம் ஏதடா?
சூலம்தேடி வருகுதோ காலம்கூலி தருதற்கே!
நாளும்கூடி தீர்ப்பினை வேளையொன்றில் எழுதுமே!
பாவம்பழி தீர்க்குமே சாபம்பலி ஏற்குமே!
தீபஒளி அதுவரை தவமேற்று முடிக்குமே!
கொ.பெ.பி.அய்யா.

No comments:
Post a Comment