Sunday, 29 November 2015

அலையும் மலையும்.

எழுக!நிமிர்க!

இமயம் கூட எதிரில் பணியும்
சமயம் தேடி சமரில் முனைந்தால்.
எழுந்து நிமிர்ந்தால் எதுதான் துணியும்.
விழித்து வரிந்தால் விதிபோம் பயத்தால்.

எண்ணும் கருமம் எதுதான் கடினம்
முன்னம் தெளிந்து முடிக்கும் துணிவில்.
கண்ணும் கருத்தும் கடமை கவனம்
வண்ணம் நிறுத்தும் வடிக்கும் விளைவில்.

ஆகும் செயலே அவனியில் எல்லாம்.
வேகும் பொருளே வினையில் தொடர்ந்தால்.
மோதும் அலையே முயலும் திண்ணம்
போகும் மலையே பொடிந்தும் கரைவில்.

துடிக்கும் திறனே தொழிலும் படிக்கும்
வெடிக்கும் வெறியும் விரிக்கும் பயில்வில்.
முடிக்கும் மனமே முடுக்கி முடிக்கும்
இடிக்கும் தினவும் இயங்கும் அறிவில்.

கூர்ந்த பதிவில் குவியும் வினையும்
நேர்ந்த தெரிவில் நிறையும் முடிவில்.
தீர்ந்த ஐயமும் தெளிந்த ஞானமும்
ஆர்ந்து விளங்கும் அகிலம் பயனில்.

கொ.பெ.பி.அய்யா.


No comments:

Post a Comment