உன்னைநீ கற்றுக்கொள்!
துள்ளடா விழித்துநீ பாரடா!
நில்லடா எழுந்துநீ கேளடா!
சொல்லடா உணர்ந்துநீ யாரடா!
செல்லடா நிமிர்ந்துநீ நேரடா!
வந்த வேலை என்னடா?
சென்ற நாளை எண்ணடா!
இந்த வேளை உன்னடா!
முந்து காலை முன்னடா!
மலை என்ன எதிர்க்குமோ!
அலை உன்னை மறிக்குமோ!
தொடர்ந் தறைந்து மோதினால்
நிலை கரைந்து விலகாதோ!
விடியாத இரவுண்டோ!
படியாத விலங்குண்டோ!
பயிலாத விடையுண்டோ!
முயலாத அடைவுண்டோ!
உன்னைநீ கற்றுக்கொள்!
தன்னைநீ பெற்றுக்கொள்!
என்னயில்லை உன்னுள்ளே!
உன்னைமிஞ்சி ஒன்னுமில்லே!
கொ.பெ.பி.அய்யா.
துள்ளடா விழித்துநீ பாரடா!
நில்லடா எழுந்துநீ கேளடா!
சொல்லடா உணர்ந்துநீ யாரடா!
செல்லடா நிமிர்ந்துநீ நேரடா!
வந்த வேலை என்னடா?
சென்ற நாளை எண்ணடா!
இந்த வேளை உன்னடா!
முந்து காலை முன்னடா!
மலை என்ன எதிர்க்குமோ!
அலை உன்னை மறிக்குமோ!
தொடர்ந் தறைந்து மோதினால்
நிலை கரைந்து விலகாதோ!
விடியாத இரவுண்டோ!
படியாத விலங்குண்டோ!
பயிலாத விடையுண்டோ!
முயலாத அடைவுண்டோ!
உன்னைநீ கற்றுக்கொள்!
தன்னைநீ பெற்றுக்கொள்!
என்னயில்லை உன்னுள்ளே!
உன்னைமிஞ்சி ஒன்னுமில்லே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment