Sunday, 25 October 2015

பெண்பாவம்.

பெண் பாவம்!

உன்னைக் காணக் காய்கிறேன்
உருகி நானும் தேய்கிறேன்.
என்னை நொந்தும் கண்கலங்கி 
பெருகிச் சிந்தும் கண்ணீரோ!
கடலைக் கடக்கா பெண்ணேங்கி
கரையும் அபலை இக்கரையில்.

வானும் கூடத் தானிரங்கி
நானும் வாடப் பொறுக்காமல்
தானும் சிந்திக் கண்கழுவி
ஏன்தான் ஆற்றித் தேற்றுவதோ!
காண்பதும் நம்புங் கண்களுடன்
வீண்தான் நெஞ்சும் மயங்குவதேன்?

நிலவே நீயேன் விரைகிறாய்?
அலைந்தும் தேடி கரைகிறாய்.
உன்னைக் கண்டும் விண்மீன்கள்
கண்கள் சிமிட்டி ஒளிவதேனோ!
பகையோ உனக்கவை! பயமேனோ!
வகையென்ன அறிவாய்! அஞ்சுகிறேன்.

விடிந்தால்  வருவான் ஆதவனோ!
படர்ந்தால் பசலை புரிவானோ!
அறிந்தால் தொடர்வான் பாதகனோ!
அடைவாய் நிலவவே அவசரமே!
ஆண்துணை இல்லா பெண்பாவம்!
வீண்வினை சொல்லும் மண்சாபம்!

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment