Monday, 2 November 2015

காதல் இதுதான்.

காமம் அஞ்சுமோ!

ஆணென்னப் பெண்ணென்ன! ஆன்மா
கலந்தது பின்ன--கலப்பில்
நீயென்ன நானென்ன! கூடத்
தயக்கமு மென்ன!

நாணமும் பேணுமோ!ஈருயிர்
தானுருகிய பின்னே-கூடவும்
வேளையென்ன நாளென்ன! வாழவும்
சாத்திரமென்ன!

மண்ணெண்ன விண்ணென்ன! ஒன்றில்
ஒன்றான பின்னே--எண்ணும்
எண்ணென்ன சொல்லென்ன!மறைக்கும்
காம மென்ன!!

காமமென்ன காதலென்ன!கலந்து
நிறைந்த பின்னே--உருவில்
ஆளுமென்ன பேதமென்ன!அச்சமும்
கூச்சமு மென்ன!

ஊழென்ன கோளென்ன! காதல்
ஆண்டதும் பின்னே--நேரும்
வாழ்வென்ன சாவென்ன! இதனினும்
வேண்டுவ தென்ன!

கொ.பெ/பி.அய்யா

No comments:

Post a Comment