சென்னையும் கண்டது.
மொழியும் இனமும் மதமும் எங்கே!
மனிதம் மட்டும் மதித்தது இங்கே.
உறவும் முறையும் உயிரென ஒன்றே.
பரவும் சமூகம் பயின்றது இன்றே!
இடரில் மனிதன் இடறும் போதே
படரும் பழமை பரிவினில் தானே
உடுக்கை இழந்தான் உணர்வினைப் போலே
முடுக்கும் உதவி மனிதம் தானே.
உயிரும் உயிரும் உறவெனக் கண்டே,
உயிரும் தடையோ உறுதியும் கொண்டே,
உதவும் மனிதம் உலகினில் உண்டே.
இதுவும் நிசமே இறப்பில்லை தொண்டே!
சென்னையும் கண்டது முன்னைய சொந்தம்.
தன்னையும் கண்டது நன்னய பந்தம்.
மகத்துவம் கண்டது சகத்துவம் என்றும்.
இகத்துவம் கண்டது சமத்துவம் ஒன்றும்.
பேரிடர் பாடமும் ஆறிட வேண்டாம்.
யாரிடம் பேதமும் கூறிட வேண்டாம்.
ஊரிடம் வாசமும் மாறிட வேண்டாம்.
பாரிடம் பாசமும் மீறிட வேண்டாம்.
கொ.பெ.பி.அய்யா.
மொழியும் இனமும் மதமும் எங்கே!
மனிதம் மட்டும் மதித்தது இங்கே.
உறவும் முறையும் உயிரென ஒன்றே.
பரவும் சமூகம் பயின்றது இன்றே!
இடரில் மனிதன் இடறும் போதே
படரும் பழமை பரிவினில் தானே
உடுக்கை இழந்தான் உணர்வினைப் போலே
முடுக்கும் உதவி மனிதம் தானே.
உயிரும் உயிரும் உறவெனக் கண்டே,
உயிரும் தடையோ உறுதியும் கொண்டே,
உதவும் மனிதம் உலகினில் உண்டே.
இதுவும் நிசமே இறப்பில்லை தொண்டே!
சென்னையும் கண்டது முன்னைய சொந்தம்.
தன்னையும் கண்டது நன்னய பந்தம்.
மகத்துவம் கண்டது சகத்துவம் என்றும்.
இகத்துவம் கண்டது சமத்துவம் ஒன்றும்.
பேரிடர் பாடமும் ஆறிட வேண்டாம்.
யாரிடம் பேதமும் கூறிட வேண்டாம்.
ஊரிடம் வாசமும் மாறிட வேண்டாம்.
பாரிடம் பாசமும் மீறிட வேண்டாம்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment