Wednesday, 4 November 2015

தேவர்திருமகன்.

தெய்வத் திருமகன்.

தெய்வத் திருமகன் தீரமுத்து ராமலிங்கம்
உய்வித்த நாடிது ஒன்றென வாழ்வதிங்கும்--அவர்
செய்வித்த சீரருமை செய்கடன் காப்பதென்றும்
கைவைத்து சத்தியம் கடமையெனக் கொள்வமென்றும்.

உடல்தான் தேசியம் ஒன்றா முணர்வால்
உயிர்தான் தெய்வீகம் உள்ளு மறிவால்-அறிந்து
விவேக மற்றவீரம் வீணவனும் கோழையென்பார்
வீரமிலா விவேகம் வெற்றவன் மூடனென்பார்

சமத்துவ நாடாய் சமைத்திடப் பாடாம்
அமைப்பதில் முன்னோடி அவர்மூதைத் தேடதாம்--கட்டாயம்
தொகுத்த முப்பத்தாறு தொல்வயல்ப் பட்டிகளை
பகுத்தும் கொடுத்தார் பரமத்தலித் பாமரர்கை .

பக்தியெனும் சத்தியமும் பற்றியவர்  தூயவர்
முக்தியிங்கே கண்டவர்தான் முற்றிப்பசும் பொன்னாரும்--தெய்வமுன்
கீழோரேன் மேலோரேன் கேள்விதான் பாவமேன்?
தாழுடைத்து மீனாள்முன் தான்சமூக நீதிசெய்தார்.

குற்றப் பரம்பரைச் சட்டமதன் கட்டவிழ்த்து
பெற்றவினம் முக்குலமும் பட்டஇழி முற்றழித்து-மேலும்
கற்றுவளம் பெற்றுயர உற்றவழி தான்வகுத்து
உற்றதினம் வந்தநாளே விட்டுடல் தான்பறந்தார்.

கொ.பெ.பி.அய்யா.

குறிப்பு:--கட்டு+ஆயம்=கட்டாயம்.(ஆயத் தீர்வை கட்டப்படும் நெல்விளையும் நன்செய் வயல்கள்)

பட்டிகள்--சொந்தமான பண்ணைக் கிராமங்கள்.

No comments:

Post a Comment