படித்தவர் பாடம் மறந்தார்
படித்தவர் ஏனோ பாடம் மறந்தார்.
பாதை விலகியும் எங்கோ தொலைந்தார்.
படித்ததும் பொய்யோ!நடிப்பதே மெய்யோ!
பாவம் பழகி பழியும் சுமந்தார்.
கற்ற அறிவை விற்றும் வஞ்சமாய்
பெற்ற மனிதம் கெட்டும் லஞ்சமாய்
சுட்ட பணமதில் பட்டும் அடிமையாய்
செத்த மனமுடன் என்னடா முடிவாய்?
வேலைக்கு கூலி நாளும் கணக்கும்
நாளைக்கும் ஊதியம் சாகும் வரைக்கும்.
ஏழைக்கு என்ன வாழ்வில் இருக்கும்!.
ஊழல் உன்னால் சாவே பெருக்கும்.
தன்வயம் இல்லையோ! செய்கடன் செய்யவும்
பின்பயம் இல்லையோ! முன்கை நீட்டவும்
வெக்கம் இல்லையோ!பிச்சாந்தி கெஞ்சவும்
வக்கும் இல்லையோ!எச்சேந்தி ஒஞ்சவும்.
ஆறடி மண்ணும் ஆருக்கும் இல்லையே.
நீரடி சாம்பலும் பேருக்கும் மிஞ்சுமோ!
ஊரார் நோகத்தான் உழைப்பினை சுரண்டியே
நாறும் பிழைப்பினை நாடென்ன மணக்குமோ!
ஊசிப் போச்சடா தேசியப் பேச்சும்.
வீசும் மூச்சடா ஏழையர் ஏக்கம்.
கூச்சம் ஆச்சடா கூறத் தானடா!
வீச்சம் சீச்சீ வீணோ சுதந்திரம்!
கொ.பெ.பி.அய்யா.
படித்தவர் ஏனோ பாடம் மறந்தார்.
பாதை விலகியும் எங்கோ தொலைந்தார்.
படித்ததும் பொய்யோ!நடிப்பதே மெய்யோ!
பாவம் பழகி பழியும் சுமந்தார்.
கற்ற அறிவை விற்றும் வஞ்சமாய்
பெற்ற மனிதம் கெட்டும் லஞ்சமாய்
சுட்ட பணமதில் பட்டும் அடிமையாய்
செத்த மனமுடன் என்னடா முடிவாய்?
வேலைக்கு கூலி நாளும் கணக்கும்
நாளைக்கும் ஊதியம் சாகும் வரைக்கும்.
ஏழைக்கு என்ன வாழ்வில் இருக்கும்!.
ஊழல் உன்னால் சாவே பெருக்கும்.
தன்வயம் இல்லையோ! செய்கடன் செய்யவும்
பின்பயம் இல்லையோ! முன்கை நீட்டவும்
வெக்கம் இல்லையோ!பிச்சாந்தி கெஞ்சவும்
வக்கும் இல்லையோ!எச்சேந்தி ஒஞ்சவும்.
ஆறடி மண்ணும் ஆருக்கும் இல்லையே.
நீரடி சாம்பலும் பேருக்கும் மிஞ்சுமோ!
ஊரார் நோகத்தான் உழைப்பினை சுரண்டியே
நாறும் பிழைப்பினை நாடென்ன மணக்குமோ!
ஊசிப் போச்சடா தேசியப் பேச்சும்.
வீசும் மூச்சடா ஏழையர் ஏக்கம்.
கூச்சம் ஆச்சடா கூறத் தானடா!
வீச்சம் சீச்சீ வீணோ சுதந்திரம்!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment