காலம் தீண்டாக் கல்வி.
கல்வி சிறந்தொரு செல்வமும் உண்டோ!
காலமும் தீண்டாத கற்பகம் அன்றோ!
ஏவும் அதிகாரம் எழுந்தும் கைதொழும்
நாவில் கலைமகள் நடனமும் கண்டோ!
தின்னவும் தூங்கவும் தேவையோ பிறவி!யும்
மண்ணிதில் தாங்கலும் மாளவோ முடிவிலும்
பயனென்ன செல்வமோ பாடையில் ஏறுமோ!
பயனாகிக் கல்விபோல் புகழ்பின் கூறுமோ!
கற்றதும் கையுள் கடுகும் சிறிது.
கல்லாது விண்ணிலும் மண்ணிலும் பெரிது.
கற்றார் செருக்கு கனமது விடுத்து
பெற்றார் பயனை பெருக்குவீர் கொடுத்து.
நேருக்கு நேரஞ்சா ஊக்கமாம்.கல்வி
வேராய் விழுதுமாய் சோராதும் நல்கி
நிலவின் அழகாய் முகமும் மலரும்
ஒளிரும் சுடராய் அகமும் மிளிரும்.
எண்ணும் கல்வி வண்ணம் கற்று
எண்ணிய எல்லாம் திண்ணம் பெற்று
பொன்போலும் சொல்லென உன்போலும் யாரென
மண்ணிங்கு எங்குமே உன்புகழ் வாழ்க!
பயனுறக் கற்று நயனுறச் செய்க
பிறவியின் புண்ணியம் வரமெனச் சொல்ல.
நீராய் நிலமாய் நிறைவான் பிராணமாய்
தீயாக நீயாக தாயாக வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.
கல்வி சிறந்தொரு செல்வமும் உண்டோ!
காலமும் தீண்டாத கற்பகம் அன்றோ!
ஏவும் அதிகாரம் எழுந்தும் கைதொழும்
நாவில் கலைமகள் நடனமும் கண்டோ!
தின்னவும் தூங்கவும் தேவையோ பிறவி!யும்
மண்ணிதில் தாங்கலும் மாளவோ முடிவிலும்
பயனென்ன செல்வமோ பாடையில் ஏறுமோ!
பயனாகிக் கல்விபோல் புகழ்பின் கூறுமோ!
கற்றதும் கையுள் கடுகும் சிறிது.
கல்லாது விண்ணிலும் மண்ணிலும் பெரிது.
கற்றார் செருக்கு கனமது விடுத்து
பெற்றார் பயனை பெருக்குவீர் கொடுத்து.
நேருக்கு நேரஞ்சா ஊக்கமாம்.கல்வி
வேராய் விழுதுமாய் சோராதும் நல்கி
நிலவின் அழகாய் முகமும் மலரும்
ஒளிரும் சுடராய் அகமும் மிளிரும்.
எண்ணும் கல்வி வண்ணம் கற்று
எண்ணிய எல்லாம் திண்ணம் பெற்று
பொன்போலும் சொல்லென உன்போலும் யாரென
மண்ணிங்கு எங்குமே உன்புகழ் வாழ்க!
பயனுறக் கற்று நயனுறச் செய்க
பிறவியின் புண்ணியம் வரமெனச் சொல்ல.
நீராய் நிலமாய் நிறைவான் பிராணமாய்
தீயாக நீயாக தாயாக வாழ்க!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment