Wednesday, 11 November 2015

காதல் எளிதல்ல.

காதல் வெல்லும்.

காதலது எளிதல்ல
கந்தனவன் சளைக்கவில்ல
காதலை வென்றெடுக்க-முருகன்
சாதித்ததும் கொஞ்சமல்ல.!

வேடனாய் மானைத்தேடி
வேலனாய் மாதைப்பாடி
கண்டதும்  வள்ளிநாடி-பட்ட
கட்டங்கள்  எளிதல்ல!

கொள்ளிமலை கானகத்தில்
வள்ளியிடம் நெருங்கருகில்
தள்ளாடுங் கிழவனாக-செந்தூரன்
தரித்தவேடம் எளிதல்ல!!

ஏலேலங் காட்டுக்குள்ளே
எத்தனையோ அவலங்கள்!.
நம்பிராசன்  நாட்டெல்லை-கார்தியன்
நம்பியதும் எளிதல்ல.

தும்பிக்கையான் புண்ணியத்தில்
தோற்கவில்லை அக்ககாதல்.
நம்பிக்கை இருந்தாலும்-துணிந்த
நையான்டி எளிதல்ல!

ஏளனங்கள் எத்தனை!
இழிவுகள்தான் எத்தனை!
இறைமகனே ஆனாலும்-அழகன்
வென்ற காதல் எளிதல்ல!!

உறுதியான  காதலுடன்
இருத்தித்தான் நின்றிட்டால்
குமரன் துணை செய்திடுவான்--தான்
கொண்டகாதல் காத்திடுவான்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment