காதல் வெல்லும்.
காதலது எளிதல்ல
கந்தனவன் சளைக்கவில்ல
காதலை வென்றெடுக்க-முருகன்
சாதித்ததும் கொஞ்சமல்ல.!
வேடனாய் மானைத்தேடி
வேலனாய் மாதைப்பாடி
கண்டதும் வள்ளிநாடி-பட்ட
கட்டங்கள் எளிதல்ல!
கொள்ளிமலை கானகத்தில்
வள்ளியிடம் நெருங்கருகில்
தள்ளாடுங் கிழவனாக-செந்தூரன்
தரித்தவேடம் எளிதல்ல!!
ஏலேலங் காட்டுக்குள்ளே
எத்தனையோ அவலங்கள்!.
நம்பிராசன் நாட்டெல்லை-கார்தியன்
நம்பியதும் எளிதல்ல.
தும்பிக்கையான் புண்ணியத்தில்
தோற்கவில்லை அக்ககாதல்.
நம்பிக்கை இருந்தாலும்-துணிந்த
நையான்டி எளிதல்ல!
ஏளனங்கள் எத்தனை!
இழிவுகள்தான் எத்தனை!
இறைமகனே ஆனாலும்-அழகன்
வென்ற காதல் எளிதல்ல!!
உறுதியான காதலுடன்
இருத்தித்தான் நின்றிட்டால்
குமரன் துணை செய்திடுவான்--தான்
கொண்டகாதல் காத்திடுவான்.
கொ.பெ.பி.அய்யா.
காதலது எளிதல்ல
கந்தனவன் சளைக்கவில்ல
காதலை வென்றெடுக்க-முருகன்
சாதித்ததும் கொஞ்சமல்ல.!
வேடனாய் மானைத்தேடி
வேலனாய் மாதைப்பாடி
கண்டதும் வள்ளிநாடி-பட்ட
கட்டங்கள் எளிதல்ல!
கொள்ளிமலை கானகத்தில்
வள்ளியிடம் நெருங்கருகில்
தள்ளாடுங் கிழவனாக-செந்தூரன்
தரித்தவேடம் எளிதல்ல!!
ஏலேலங் காட்டுக்குள்ளே
எத்தனையோ அவலங்கள்!.
நம்பிராசன் நாட்டெல்லை-கார்தியன்
நம்பியதும் எளிதல்ல.
தும்பிக்கையான் புண்ணியத்தில்
தோற்கவில்லை அக்ககாதல்.
நம்பிக்கை இருந்தாலும்-துணிந்த
நையான்டி எளிதல்ல!
ஏளனங்கள் எத்தனை!
இழிவுகள்தான் எத்தனை!
இறைமகனே ஆனாலும்-அழகன்
வென்ற காதல் எளிதல்ல!!
உறுதியான காதலுடன்
இருத்தித்தான் நின்றிட்டால்
குமரன் துணை செய்திடுவான்--தான்
கொண்டகாதல் காத்திடுவான்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment