Tuesday, 13 October 2015

அடிமைதான் அடையாளமா.



எத்தனை முறை எச்சரித்தேன்
என்னை மதித்தாயா நீ?
வீணாசை விபரீத விளைவாச்சோ!-என
ஊழல் கைதியிடம் மனம்
சொல்லிக்காட்டி நொந்திருக்கும்.

இவன் உன் கட்சிக்காரன்
என்ற தகுதியைவிட இவனிடம்
வேறென்ன தகுதியுண்டோ!
சிந்திக்க விட்டனரா உன்னை?
இன்னும் அடிமைதானா நீ?
பழகிப்போன உன்னிடம்
உன்னுரிமையை நீ
சரியாகப் பயன்படுத்தெனச்
சொன்னால் கேட்கவா போகிறாய்-என
வாக்காளனிடம் வாக்குச்சீட்டு
சொல்லித்தானிருக்கும்.

பாவம் நீ!
நல்லாத்தான் எழுதியுள்ளாய்.
நானும் பெருமை அடைகிறேன்--ஆனாலும்
நீ இருக்கும் வரை என்னைத்
தேடமாட்டார்களே!-என
விரல்களிடம் எழுத்து ஆதங்கப்பட்டிருக்கும்.  . 

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment