எத்தனை முறை
எச்சரித்தேன்
என்னை
மதித்தாயா நீ?
வீணாசை
விபரீத விளைவாச்சோ!-என
ஊழல்
கைதியிடம் மனம்
சொல்லிக்காட்டி
நொந்திருக்கும்.
இவன் உன்
கட்சிக்காரன்
என்ற
தகுதியைவிட இவனிடம்
வேறென்ன
தகுதியுண்டோ!
சிந்திக்க
விட்டனரா உன்னை?
இன்னும்
அடிமைதானா நீ?
பழகிப்போன
உன்னிடம்
உன்னுரிமையை
நீ
சரியாகப்
பயன்படுத்தெனச்
சொன்னால்
கேட்கவா போகிறாய்-என
வாக்காளனிடம்
வாக்குச்சீட்டு
சொல்லித்தானிருக்கும்.
பாவம் நீ!
நல்லாத்தான்
எழுதியுள்ளாய்.
நானும்
பெருமை அடைகிறேன்--ஆனாலும்
நீ
இருக்கும் வரை என்னைத்
தேடமாட்டார்களே!-என
விரல்களிடம்
எழுத்து ஆதங்கப்பட்டிருக்கும். .
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment