Sunday, 8 November 2015

தனித்தமிழ்

தனித்தமிழ்.

ஒலி பிறந்த பொழுதே
தமிழ் பிறந்தது-அது
மொழியெனப்  பலவாய்
உலகம் விரிந்தது.

இயற்கை கடைந்த இசைக்கும் அமுதம்
பயிற்சி கடந்தும் பழகும் தமிழும்
இயக்கம் தனித்தும் இனிக்கும் நிலைக்கும்
முயன்றும் கலப்பும் முயற்சி பழிக்கும்.

புண்ணியம் சேர்க்கும் பொதிகை மரபே!
தன்னியம் காக்கும் தமிழின் வரவே!
அந்நியம் நோக்கும் அவலம் துறவே!
மண்ணியம் தேக்கும் மணந்தான் உறவே!

மயக்கம் விரிக்கும் மடமை ஐயோ!
வியக்கும் தமிழை விலக்கம் உய்யோ!
பயக்கும் அறிவும் படியா தமிழோ!
நயக்கும் பிறவும் நமதன்னை நிகரோ!

இப்படி நாமும் தப்படி ஆனால்
எம்மொழி வாழும் செம்மொழி தானால்.
கல்லா மொழியும் சொல்லால் மட்டும்
நில்லா தொழியும் கல்வெட்டு இட்டும்.

கொ.பெ.பி.அய்யா.

No comments:

Post a Comment