உண்டா!இல்லையா!
உண்டா!இல்லையா!கடவுள்?--கண்டவர்!
உண்டா?இல்லையா உலகில்?
கண்டேன் என்று சொன்னாலும்--கண்டு
உண்டென நம்பும் நன்றுண்டோ!
உண்டா!இல்லையா!கடவுள்?--கண்டவர்!
உண்டா?இல்லையா உலகில்?
கண்டேன் என்று சொன்னாலும்--கண்டு
உண்டென நம்பும் நன்றுண்டோ!
காற்றுக்கு என்ன வடிவமோ!--நேரே
காட்டு என்றால் முடியுமோ!
தொட்டால் மேனி உணர்வதோ!--இறையும்
உள்ளம் ஒன்ற ஒளிர்வது!
தொட்டால் மேனி உணர்வதோ!--இறையும்
உள்ளம் ஒன்ற ஒளிர்வது!
தன்னைக் கண்டு அறியவும்--அங்கே
முன்னை உண்டு கண்ணாடி.
இறையைத் தனக்குள் புரியவும்--நெஞ்சே
துணையாம் தியானம் உள்ளாடி..
துணையாம் தியானம் உள்ளாடி..
இதயம் என்றொரு கருவிதான்--வெறும்
இரத்தம் செய்யும் செயலுதான்.
உள்ளம் என்றொரு உறுப்புண்டோ!--உள்ளின்
உள்ளான் உள்ளவன் இறையன்றோ!
பொருளாய் ஒன்றின் உருவமோ!--அதுவும்
வரையாமல் தானே வளருமோ!
வடிக்காமல் ஏதோ வடிவங்கள்--எதுவும்
படைக்காமல் உண்டோ சகலமும்!
கல்லிலும் செதுக்கும் விந்தையும்--கலை
சொல்லிலும் ஒருக்கும் சிந்தையும்.
எண்ணில் நிறுத்தும் ஒன்றையும்---சிலை
தன்னில் பொருத்தும் தெய்வமும்.
மண்ணும் கல்லும் கட்டிடமே!--கந்தன்
எண்ணும் போதே ஆலயமே!
கல்லாய் கண்டால் கல்லுதான்--நெஞ்சின்
உள்ளாய் கொண்டால் கண்ணனே!
கொ.பெ.பி.அய்யா.
பொருளாய் ஒன்றின் உருவமோ!--அதுவும்
வரையாமல் தானே வளருமோ!
வடிக்காமல் ஏதோ வடிவங்கள்--எதுவும்
படைக்காமல் உண்டோ சகலமும்!
இயங்கும் செயலும் உண்மையோ!--அனைத்தும்
இயக்கும் சக்தியும் ஒன்றுண்டோ!
இயற்கை அதுதான் மூலமோ--அறிவியல்!
இயக்கம் ஆதி பகவனோ!
இயக்கம் ஆதி பகவனோ!
சொல்லிலும் ஒருக்கும் சிந்தையும்.
எண்ணில் நிறுத்தும் ஒன்றையும்---சிலை
தன்னில் பொருத்தும் தெய்வமும்.
மண்ணும் கல்லும் கட்டிடமே!--கந்தன்
எண்ணும் போதே ஆலயமே!
கல்லாய் கண்டால் கல்லுதான்--நெஞ்சின்
உள்ளாய் கொண்டால் கண்ணனே!
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment