பேர் சொல்லும் பிள்ளை.!
அள்ளியும் முத்தம் ஆடவும் வேண்டும்.
பிள்ளையும் பெற்றம் பேறும் கொண்டும்.
கொள்ளவும் வேறு என்னதான் வேண்டும்!
வள்ளல் நீயும் வாழ்கவே ஆண்டும்.
கொஞ்சும் நெஞ்சம் கர்வம் ஏறுது.
பஞ்சம் அஞ்சிய பாவம் போனது.
மஞ்சம் கெஞ்சிய மாயம் தீர்ந்தது.
எஞ்சும் துஞ்சமும் ஏனினி வேண்டுது!
வாழ்வும் நீயென வாழ்வது கடமை.
நாளும் தேடல் நானுந்தன் அடிமை.
வாழுங் கல்வி வளர்வுன் உடமை.
ஆளுஞ் சிந்தை அடையும் பெருமை.
இவனது தந்தை இவனென ஊரும்.
அவனது பேரில் அடையாளம் கூறும்.
தவமாம் தாயார் தன்பிள்ளை சிறப்பும்
இகமும் முற்றும் யாமாறும் பிறப்பும்.
கொ.பெ.பி.அய்யா.
அள்ளியும் முத்தம் ஆடவும் வேண்டும்.
பிள்ளையும் பெற்றம் பேறும் கொண்டும்.
கொள்ளவும் வேறு என்னதான் வேண்டும்!
வள்ளல் நீயும் வாழ்கவே ஆண்டும்.
கொஞ்சும் நெஞ்சம் கர்வம் ஏறுது.
பஞ்சம் அஞ்சிய பாவம் போனது.
மஞ்சம் கெஞ்சிய மாயம் தீர்ந்தது.
எஞ்சும் துஞ்சமும் ஏனினி வேண்டுது!
வாழ்வும் நீயென வாழ்வது கடமை.
நாளும் தேடல் நானுந்தன் அடிமை.
வாழுங் கல்வி வளர்வுன் உடமை.
ஆளுஞ் சிந்தை அடையும் பெருமை.
இவனது தந்தை இவனென ஊரும்.
அவனது பேரில் அடையாளம் கூறும்.
தவமாம் தாயார் தன்பிள்ளை சிறப்பும்
இகமும் முற்றும் யாமாறும் பிறப்பும்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment